Wednesday, December 27, 2006

டிஸ்கவரி சேனல் டாக்குமெண்டிரி

Super Massive Black Hole(மிகப் மிகப் மிகப் பெரிய கரும் பள்ளங்கள்)

சிறப்பான டிஸ்கவரி சேனல் டாக்குமெண்டரி. இதனை விரைவில் தமிழ்படுத்த வேண்டும்.











Friday, December 22, 2006

அறிவியலும் ஆன்மீகமும்-12 நட்சத்திரங்கள்

தலை உயர்த்தி வானில் கண் சிமிட்டிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களைப் எத்தனை முறை ரசித்திருக்கிறேன் என்பது நினைவில்லை. நட்சத்திரங்களை இன்று எண்ணி விடலாம் நாளை எண்ணி விடலாம் என்று சின்ன வயதில் பல நாட்கள் கழித்ததுண்டு.

சிறு வயதில் மின்மினி பூச்சிகள் போல மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களுக்கும், தோரணத்தில் கட்டித் தொங்க விடப் பட்டிருக்கும் கலர் விளக்குகளுக்கும் அதிக வித்தியாசங்கள் தெரிந்ததில்லை.

இன்று தலை உயர்த்தி அதே நட்சத்திரங்களைப் பார்க்கும் சமயம் தான் எத்தனை விதமான உணர்வுகள். மனிதனின் கற்பனை எல்லையற்றது என்றால் அதன் எல்லையைக் கூட விஞ்சி விடும் பிரமாண்டம் மயக்கம் தருகிறது.

குமரியில் இருந்து காஷ்மீரம் வரையிலான தூரங்களே பிரமிக்க வைக்கும் பொழுது, இந்த பூமியின் சுற்றளவை விட 110 மடங்கு பெரிய சுற்றளவும், 10 லட்சம் பூமிகளை தன்னுள் அடக்கி விடக் கூடிய அளவு இருக்கும் சூரியனை ஏனைய நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் சமயம் அது ஒரு நடுத்தர அளவு நட்சத்திரம் என்று மட்டுமே சொல்ல முடியும் என்பதை அறிவு ஒப்புக் கொள்ள மறுக்கிறது.

சூரியனை விட அளவில் 100 மடங்கு பெரிய நட்சத்திரமான பிஸ்டல் நட்சத்திரம் சூரியனை விட 10 லட்சம் மடங்கு அதிகமான பிரகாசம் கொண்டது என்பதை கற்பனை கூட ஒப்புக் கொள்ள மறுக்கிறது. கடவுளை வர்ணிக்கும் கவிஞர்களின் கற்பனையில் கூட இவ்வளவு பிரகாசம் குறிப்பிடப் படுவதில்லை என்றே நினைக்கிறேன்.

எண்ணிலடங்காத நட்சத்திரங்கள் இருப்பதாக கொண்டிருந்த என் சிறு வயது எண்ணம் மட்டும் தவறாகி விடவில்லை. நம் அண்டவெளியில் மட்டும் 1000 லட்சம் நட்சத்திரங்கள் இருப்பதாக கணித்திருக்கிறார்கள். நம் அண்டவெளியில் மட்டும் இவ்வளவு என்றால் இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவு இருக்கும்? எண்ணில் அடங்காது தானே?

உயிர்களின் ஜனனம் என்பது இயற்கையின் அற்புதம். நட்சத்திரங்களின் ஜனனமும் அதே போலத் தான். மனிதர்கள் போல கண்ணோடு கண் சேர்த்து, காதல் மொழி பேசி, கட்டி காமுற்று, கலவி செய்து குழந்தை பெறுவது போன்ற நிகழ்வுகள் இல்லை.

ஸ்டெல்லார் மேகங்கள்(stellar clouds) என்பதில் இருந்து தான் நட்சத்திரங்கள் உருவாகுகின்றன. இது உயிர்களின் தோற்றத்தோடு ஒப்பிடும் சமயம் விந்து அல்லது ஓவம் என்ற நிலை என்பதை அறியலாம் அதாவது தொடக்க நிலை இதுதான்.

ஸ்டெல்லார் மேகங்கள் என்றால் என்ன? மேகம் என்பது என்ன? நீராவி திரண்டு ஆகாயத்தில் ஒரே இடத்தில் இருக்கிறது அந்த நீராவி திரண்டு இருக்கும் இடத்தை நாம் மேகம் என்று சொல்கிறோம்(நீராவி ஏன் ஒரே இடத்தில் திரண்டு இருக்க வேண்டும்? மேகத்தில் மட்டும் இருக்கும் அந்த நீராவி ஏன் ஆகாயம் முழுக்க பரவுவதில்லை யோசித்திருக்கிறீர்களா? இதற்கு பதில் அளிக்க வேண்டுமெனில் ஒரு தனி பதிவு இட வேண்டும்.)

ஸ்டெல்லார் மேகங்கள் என்பது அண்டவெளியில் ஒரே இடத்தில் திரண்டு இருக்கும் கேஸ்கள். நம் நீர் மேகங்கள் சிறிய அளவில் இருப்பதால் ஸ்டெல்லார் மேகங்களும் இதே போல இருக்கும் என்று நினைத்து விடக் கூடாது. முன்பு குறிப்பிட்டுள்ள மிகப் பெரிய நட்சத்திரத்தை விட பெரிய அளவில் கூட இருக்கும் இந்த ஸ்டெல்லார் மேகங்கள். இந்த ஸ்டெல்லார் மேகங்களிம் அதிக அளவில் இருப்பது ஹைட்ரஜனாக இருக்கும்.

காதலாகி கசிந்துருகினால் மட்டும் மனிதர்களுக்கு குழந்தை பிறந்து விடுமா இல்லையே? அதற்கு கலவி தேவையாயிருக்கிறது இல்லையா? ஸ்டெல்லார் மேகங்கள் நட்சத்திரங்களாக மாறுவதும் அதே போலத்தான்.

ஒரு ஸ்டெல்லார் மேகம் மற்றொன்றுடன் மோதும் சமயம் ஏற்படும் உராய்வு அல்லது நட்சத்திரங்களில் ஏற்படும் சூப்பர் நோவா உண்டாக்கும் வெப்பம் மற்றும் அதிர்வுகளாலேயே இந்த ஸ்டெல்லார் மேகங்கள் நட்சத்திரங்களாக மாறுவதற்கு ஏதுவான சூழ்நிலை உண்டாகுகிறது.

ஏதுவான சூழ்நிலை தான் உருவாகுகிறதே தவிர எல்லா ஸ்டெல்லார் மேகங்களும் நட்சத்திரங்களாக மாறுவதில்லை.

மேலே குறிப்பிட்டதில் ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்தாலும் இந்த ஸ்டெல்லார் மேகங்களில் உண்டாகும் புவியீர்ப்பு விசை மாறுதல்களால் இந்த ஸ்டெல்லார் மேகங்கள் ஒரு புரோட்டோ ஸ்டார்(proto star) என்ற நிலையை அடையும்.

இந்தப் பருவத்தை நம் குழந்தைப் பருவத்துடன் ஒப்பிடலாம். அதாவது வளரும் பருவம் இது. முழு நட்சத்திரமாக மாறுவதற்கு முந்தைய நிலை இது.

இப்படி ஆகும் ஸ்டெல்லார் மேகங்கள் நட்சத்திரங்களாக மாற அதனுடைய வெப்பம் ஒரு குறிப்பிட்ட அளவு அதிகரிக்க வேண்டும்.

வெப்பம் அந்த அளவை நிலையை அடைந்த உடன் அணு சேர்க்கை(nuclear fusion) ஆரம்பமாகி விடும். அணு பிளவை(Nuclear Fission) விளக்கி பதிவை சீனு அவர்கள் எழுதி இருக்கும் பதிவை இங்கே காணலாம்.

சில ஸ்டெல்லார் மேகங்களில் இந்த அணு சேர்க்கை நடப்பதற்கு தேவையான வெப்ப அளவை அடைவதே இல்லை. இந்த ஸ்டெல்லார் மேகங்கள் பழுப்புக் குள்ளன் (Brown dwarf) ஆக மாறி விடும்.

இப்படி அணுசேர்க்கை ஆரம்பித்து வெளிச்சத்தையும் வெப்பத்தையும் அந்த அணுசேர்க்கையின் காரணமாக வெளியேற்றிக் கொண்டிருக்கும் நட்சத்திரத்தை நாம் முழுக்க வளர்ந்த ஒரு மனிதனுடன் ஒப்பிடலாம். அதாவது நட்சத்திரத்தின் வாழ்க்கைப் பயணத்தில் பருவம் அடைந்து விட்டது என்று கூறலாம்.

வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த பூமியில் நமக்கே இடம் ஏது என்பது போல எல்லா நட்சத்திரங்களும் பிரபஞ்சத்தில் அப்படியே இருந்து விட்டால் புதுப் புது நட்சத்திரங்கள் தோன்றத் தோன்ற பிரபஞ்சமே நட்சத்திரங்களால் நிறைந்து விடாதா?

மனிதர்களுக்கு மரணிப்பது போலவே நட்சத்திரங்களும் மரணிக்கின்றன.

ஏன் மரணிக்கிறது என்றால், நட்சத்திரங்களில் அணுச்சேர்க்கையின் போது என்ன நடக்கிறது என்றால் ஹைட்ரஜன் அணுக்களை எல்லாம் ஒன்று சேர்ந்து ஹீலியம் அணுக்களாக மாறுகிறது. நம் உடலில் நடக்கும் செல் மரணங்கள், ஜனனங்களுடன் இதனை ஒப்பிடலாம். இந்த சேர்க்கையின் போது வெளியாகும் சக்திதான் வெப்பமாகவும், வெளிச்சமாகவும் வெளிப்படுகிறது. ஆனால் நட்சத்திரங்களில் ஹைட்ரஜன் அணுக்கள் எதோ ஒரு சந்தர்பத்தில் தீர வேண்டும் அல்லவா? அப்படி தீரும் சமயம் இல்லை ஹீலியம் மிக அதிக அளவில் உற்பத்தியாகும் சமயம் இந்த அணுசேர்க்கையில் வெளியாகும் சக்தி போதுமானதாக இருப்பதில்லை.

அந்த சமயத்தில் இந்த நட்சத்திரம் மரணிக்க ஆரம்பிக்கிறது. புவியீர்ப்பு சக்தி(gravitational force) மெதுவாக இந்த நட்சத்திரத்தை சுருங்க செய்கிறது.

இதை லாடம் கட்டுவதுடன் ஒப்பிடலாம். ஒரு பொருளை சூடாக்கினால் அது விரிவடைகிறது. அதனை குளிர்வித்தால் அது சுருங்குகிறது அல்லவா? அதே போல மிக வெப்பமாக இருந்த நட்சத்திரம் அந்த வெப்பம் இப்பொழுது இல்லாததால் சுருங்க ஆரம்பிக்கிறது.

சூரியன் போல நடுத்தர அளவு நட்சத்திரங்களில் என்னவாகும் என்றால் இதன் புவியீர்ப்பு விசை மிக அதிகமாக இல்லாததால் இதனை நம் பூமி அளவுக்கு சுருக்கி விடும். அப்படி சுருங்கிய சூரியன் தன் பிரகாசம் இழந்து வெப்பம் வெளியாக்கும் சக்தியை இழந்து ஒரு வெள்ளைக் குள்ளனாக(white dwarf) சுருங்கி விடும்.

சூரியனை விட சற்று பெரியதாக இருக்கும் நட்சத்திரங்களில் புவியீர்ப்பு விசை இன்னும் அதிகமாக இருப்பதால் இதனை மிக மிக அதிகமாக சுருக்கி ஒரு நியூட்டரான் ஸ்டார்(neutron star) ஆக மாறி விடும்.

சூரியனை விட பல மடங்கு பெரியதாக இருக்கும் நட்சத்திரங்கள் கரும் பள்ளங்களாகி விடும். இதனைப் பற்றி இங்கே எழுதப்பட்டிருக்கிறது.

இப்படித்தான் நட்சத்திரங்கள் மரணிக்கின்றன.

இந்த அற்புதம் நாள்தோறும் இந்த பிரபஞ்சத்தின் எதோ ஒரு மூலையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

மனிதர்கள் மதமென்னும் மாயப் பேயின் பிடியில் சிக்கி மன வக்கிரங்களை வெளிப்படுத்தி, மனதில் அயர்ச்சியை உண்டாக்கும் வேளைகளில் எல்லாம் வானில் தலை உயர்த்தி நட்சத்திரங்களைப் பார்த்துக் கொள்கிறேன்.

1,00,000 ஆண்டுகள் மனிதர்கள் இந்த பூமியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள், இது ஒரு நட்சத்திரம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் சமயத்தில் ஒரு மிகச் சிறிய ஒரு பகுதியே. ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை நட்சத்திரங்கள் பிரபஞ்சத்தில் இருக்கும் சமயத்தோடு ஒப்பீடு செய்யவே முடியாது.

எத்தனை ஆற்றல் மிக்கது ஒரு நட்சத்திரம் எவ்வளவு வெப்பத்தை எவ்வளவு வெளிச்சத்தை எத்தனை எத்தனை கோடி ஆண்டுகளுக்கு வெளிப்படுத்துகிறது. அதற்கும் விதிகள் வைத்து அதனையும் மரணமுறுகிறது? என்ன அற்புதம் என்ன ஆற்றல்.

எல்லையில்லாத இறை ஆற்றலின் படைப்புகள் தான் எத்தனை அற்புதமானவை. எத்தனை சாகசங்களை இந்த பிரபஞ்சத்தில் வைத்திருக்கிறது இந்த ஆற்றல். மனிதர்கள் இந்த ஆற்றலை கோயில்களிலும், மசூதிகளிலும், தேவாலயங்களிலும் தேடிக் கொண்டிருக்கிறார்களே.

மதம் மூலம் மனிதன் தனக்குத் தேவையானதைத் தேடிக் கொண்டிருக்கிறான்.

இந்த ஆற்றலின் அற்புதங்களை உணரும் அறிவு மனிதர்களுக்கு இருக்கிறது. இறை ஆற்றல் கோடிப் பாகங்கள் என்றால் அதில் ஒரு துளியை மனிதனின் அறிவு அடையாளம் கண்டு கொண்டிருக்கிறது.

இந்த ஆற்றலின் அற்புதங்களை மதங்கள் சொல்லிக் கொடுப்பதில்லை. மனிதர்களுக்கு தேவையானது இந்த ஆற்றலைத் தேடினால் கிடைக்கும் என்று தான் சொல்லிக் கொடுக்கிறது.

மனிதன் ஏன் புத்தகங்கள் பின்னும், கேடு கெட்ட புத்தியால் தனக்குத் தானே அமைத்துக் கொண்ட விதிகளுக்குப் பின்னாலும் சுற்றுகிறார்கள்?

அறிவிலிகளாக உன் ஆற்றலை உணராமல் ஏன் வாழ்க்கையை கோயில்களிலும் மசூதிகளிலும் தேவாலயங்களிலும் வீணடிக்கிறார்கள். தலையை உயர்த்தி வானில் கண் சிமிட்டும் நட்சத்திரங்களில் நீ நிகழ்த்தும் அற்புதங்கள் பார்த்தால் போதுமே உன் அற்புதங்கள், ஆற்றல் எல்லோருக்கும் விளங்குமே.

இறை ஆற்றலை என் மார்க்கத்தின் மூலமாக மட்டுமே உணர முடியும் என்று நினைக்கும் மூட மதியே,

எல்லா மனிதர்களுக்கு மட்டும் இல்லை இந்த பிரபஞ்சத்திற்கே இறை ஆற்றல் ஒன்றுதான் .

பெயரிடாதே சொந்தம் கொண்டாடாதே மனிதா நான் பெயர்களுக்கும், மனிதர்களுக்கும் அப்பாற்பட்டவன் என்றும்

உன் மூட மதி வாழ்வில் நீ என்னை எப்படி வணங்குகிறாய் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. உன் வணக்கங்களுக்காகவா என் ஆற்றல் இருக்கிறது என் ஆற்றலுக்கு முன் நீ ஒரு அணு கூட இல்லை என்றும்

இந்த பூமியில் வாழும் சமயத்தில் பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் வாழ்ந்தாலே போதும் என்றும்

நீ நட்சத்திரங்களை காண்பித்து சொல்லும் செய்தி எல்லோருக்கும் எப்போது புரியப் போகிறது???

கீழே நட்சத்திரங்களிம் தோற்றமும் எப்படி மரணிக்கிறது என்பதைப் பற்றியும் ஒரு சிறிய வீடியோ.

Thursday, December 21, 2006

அலைகளில் இருந்து மின்சாரம்??!!

செய்தியின் முழு சுட்டி இங்கே

இது ஆராய்ச்சி எல்லாம் இல்லை. 2007ல் இருந்து மின்சாரம் அலைகளில் இருந்து தயாரிக்கப் பட உள்ளது.

ஜார்ஜ் டெயிலர் 72 வயதாகும் சிறு தொழில் நிறுவனர் ஒரெகொன் கடற்கரையில்(Oregon coast) இதற்கான சாதனங்களை நிறுவி உள்ளார். இந்த சாதனம் அலைகள் அடிக்கும் கடல்கரையின் நடுவே நிறுவப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் கேபிள்கள் மூலமாக உற்பத்தியாகும் மின்சாரம் கரைக்கு எடுத்து செல்லப்படும்.

மேலும் விஞ்ஞானிகள் இன்று உபயோகமில்லாமல் சென்று கொண்டிருக்கும் அலைகளின் சக்தியில் 0.2 சதவீதம் மட்டுமே உபயோகித்து இந்த உலகின் அனைத்து மின்சார தேவையையும் பூர்த்தி செய்ய முடியும் என்று கணித்துள்ளது.

மேலும் இது பரவலாக உபயோகிக்க ஆரம்பித்தால் இன்று இருக்கும் மின்சார கட்டணங்களை விட குறைவாக இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று கணித்திருக்கிறார்கள்.

இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்கிறீர்களா?

உங்களைப் போலவே நம்பிக்கை இல்லாத சிலரின் கணிப்புகளை கீழே பாருங்கள்.

1. "640K ought to be enough for anybody." -- Bill Gates, 1981

2. Computers in the future may weigh no more than 1.5 tons." --Popular
Mechanics, forecasting the relentless march of science, 1949

3. I think there is a world market for maybe five computers." --Thomas
Watson, chairman of IBM, 1943

4. "I have traveled the length and breadth of this country and walked with
the best people, and I can assure you that data processing is a fad that
won't last out the year." --The editor in charge of business books for
Prentice Hall, 1957

5. "But what ... is it good for?" --Engineer at the Advanced Computing
Systems Division of IBM, 1968, commenting on the microchip.

6. "There is no reason anyone would want a computer in their home." --Ken
Olson, president, chairman and founder of Digital Equipment Corp., 1977

7. "This 'telephone' has too many shortcomings to be seriously considered as
a means of communication. The device is inherently of no value to us."
--Western Union internal memo, 1876.

8. "The wireless music box has no imaginable commercial value. Who would pay
for a message sent to nobody in particular?" --David Sarnoff's associates
in response to his urgings for investment in the radio in the 1920s.

9. "The concept is interesting and well-formed, but in order to earn better
than a 'C,' the idea must be feasible." --A Yale University management
professor in response to Fred Smith's paper proposing reliable overnight
delivery service. (Smith went on to found Federal Express Corp.)

10. "Who the hell wants to hear actors talk?" --H.M. Warner, Warner Brothers,1927.

11. "I'm just glad it'll be Clark Gable who's falling on his face and not Gary
Cooper." --Gary Cooper on his decision not to take the leading role in
"Gone With The Wind."

12. "A cookie store is a bad idea. Besides, the market research reports say
America likes crispy cookies, not soft and chewy cookies like you make."
--Response to Debbi Fields' idea of starting Mrs. Fields' Cookies.

13. "We don't like their sound, and guitar music is on the way out." --Decca
Recording Co. rejecting the Beatles, 1962.

14. "Heavier-than- air flying machines are impossible." --Lord Kelvin,
president, Royal Society, 1895.

15. "If I had thought about it, I wouldn't have done the experiment. The
literature was full of examples that said you can't do this." --Spencer
Silver on the work that led to the unique adhesives for 3-M "Post-It" Notepads.

16. "So we went to Atari and said, 'Hey, we've got this amazing thing, even
built with some of your parts, and what do you think about funding us? Or
we'll give it to you. We just want to do it. Pay our salary, we'll come
work for you.' And they said, 'No.' So then we went to Hewlett-Packard,
and they said, 'Hey, we don't need you. You haven't got through college
yet.'" --Apple Computer Inc. founder Steve Jobs on attempts to get Atari
and H-P interested in his and Steve Wozniak's personal computer.

17. "Professor Goddard does not know the relation between action and reaction
and the need to have something better than a vacuum against which to
react. He seems to lack the basic knowledge ladled out daily in high
schools." --1921 New York Times editorial about Robert Goddard's
revolutionary rocket work.

18. "You want to have consistent and uniform muscle development across all of
your muscles? It can't be done. It's just a fact of life. You just have to
accept inconsistent muscle development as an unalterable condition of
weight training." --Response to Arthur Jones, who solved the "unsolvable"
problem by inventing Nautilus.

19. "Drill for oil? You mean drill into the ground to try and find oil? You're
crazy." --Drillers who Edwin L. Drake tried to enlist to his project to
drill for oil in 1859.

20. "Stocks have reached what looks like a permanently high plateau."
--Irving Fisher, Professor of Economics, Yale University , 1929.

21. "Airplanes are interesting toys but of no military value." --Marechal
Ferdinand Foch, Professor of Strategy, Ecole Superieure de Guerre.

22. "Everything that can be invented has been invented." --Charles H. Duell,
Commissioner, U.S. Office of Patents, 1899.

23. "Louis Pasteur's theory of germs is ridiculous fiction". --Pierre Pachet,
Professor of Physiology at Toulouse , 1872

24. "The abdomen, the chest, and the brain will forever be shut from the
intrusion of the wise and humane surgeon". --Sir John Eric Ericksen,
British surgeon, appointed Surgeon-Extraordina ry to Queen Victoria 1873.

Monday, December 11, 2006

அறிவியலும் ஆன்மீகமும் - 10 Dark matter

தலை உயர்த்தி வானை பார்க்கும் சமயம் நம் கண்களுக்கு தெரிவது நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள். நாம் நட்சத்திரங்களையும் கோள்களையும் விடுத்து மற்ற அனைத்தும் ஒரு சூனியவெளி(vaccum) என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. இந்தப் பிரபஞ்சத்தில் 82% நம் கண்களுக்குத் தெரியாத பொருள்கள்(matter) நிறைந்திருக்கிறது. இன்றைய பிரபஞ்சம் இன்று இது போல இருப்பதற்கு காரணமே இந்த பொருள்கள் தான். இவைதான் dark matter(கரும் பொருள்கள்).

இதைப் பற்றித்தான் இன்று பெருஅண்டவியலில்(cosmology) துறையில் விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் ஆராயந்து வருகிறார்கள்.

முதலில் dark matter என்றால் என்ன என்று பார்க்க வேண்டி இருக்கிறது.

இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒரு பொருளையும் நாம் பார்க்க அல்லது உணர வேண்டுமெனில் அதற்கு இரண்டு விதமான குண நலன்கள் வேண்டும். ஒன்று ஒளி அதன் மீது படரும் பொழுது பிரதிபலிக்க வேண்டும். ஒளி பிரதிபலிக்காமல் ஒரு பொருளை அப்படியே தாண்டி சென்றால் அந்தப் பொருளை நம்மால் காண இயலாது.

st gobain விளம்பரம் பார்த்திருப்பீர்கள் ஒரு பெண் ஒரு வாளித் தண்ணீரை எடுத்து வந்து காபி குடித்துக் கொண்டிருக்கும் இருவர் மேல் ஊற்றுவார். அவர்கள் இருவரும் மேஜைக்கு பின்னால் சென்று ஒளிந்த பின் தான் தெரியும் குறுக்கே ஒரு கண்ணாடி இருக்கிறது என்று. இந்த சமயத்தில் அந்தக் கண்ணாடி ஒளியை கொஞ்சம் கூட பிரதிபலிக்காமல் விட்டதால் தான் கண்ணாடி இல்லாதது போலத் தோன்றியது.

இன்னொரு வகை வெப்பமாக இருக்கும் பொருள்களையும் நம்மால் உணர முடியும் பார்க்க முடியும். ஆங்கிலப் படங்களில் எல்லாம் காட்டுகிறார்களே அது போல இருட்டில் அகச்சிகப்புக் கதிர்கள்(infrared) கண்ணாடி கொண்டு எதிரிகளை நோட்டம் விடலாம். இது போன்ற கண்ணாடிகள் எந்த அடிப்படையில் இயங்குகிறது என்றால் வெப்பமாக இருக்கும் எல்லாப் பொருள்களில் இருந்தும் சில கதிர்கள் வெளிப்படும். மனித உடல் இருந்து கூட கதிர்களை வெளிப்படுத்துகிறது. இந்தக் கதிர்களை வைத்து ஒரு பொருள் இருப்பதை கண்டு கொள்ள முடியும். இந்தக் கதிர்கள் ஒரு பொருள் எவ்வளவு வெப்பமாக இருக்கிறதோ அதனைப் பொறுத்து மாறுபடும். மிக வெப்பமாக இருக்கும் சில நட்சத்திரங்களில் இருந்து எக்ஸ்ரே கதிர்கள் கூட வெளிப்படும்.

ஆக இந்த இரு வகையான குணங்கள் இருக்கும் பொருள்களையே நம்மால் கண்டு கொள்ள முடியும்.

இந்த இருவகையான குண நலன்களும் இல்லாத பொருள்கள் தான் dark matter. இவை இந்தப் பிரபஞ்சத்தில் 82 சதவீதகத்தை ஆக்ரமித்திருக்கிறது. இந்தப் பொருள்கள் இப்படி இருப்பதாலேயே இவை இருக்கின்றன என்பதை நிரூபிக்க விஞ்ஞானிகள் திக்கி திணறி விட்டார்கள். 1930 வருடம் கண்டு பிடிக்கப் பட்ட இந்த பொருள்கள் இருப்பதை 2003லேயே நிரூபணம் செய்திருக்கிறார்கள்.

1930ல் முதன் முதலாக பிரிட்ஸ் சுவிக்கி என்பவர் ஒரு அண்ட வெளியை ஆராய்ந்து கொண்டிருக்கும் சமயம் அந்த அண்ட வெளியின் மாஸை(mass தமிழாக்கம் தெரியவில்லை weight and mass என்பது இரண்டுமே வித்தியாசமானது. மாஸ் தமிழ் சொல் தெரியவில்லை) வெளிச்சத்தின் அடிப்படையில் கணக்கிடுவதிலும்( ஒரு அண்ட வெளியின் மாஸைக் கண்டு கொள்ள அந்த அண்ட வெளியின் பிரகாசத்தைக் கணக்கில் கொண்டும் கண்டு பிடிக்கலாம்), சாதாரண வகையாக கணக்கிடுவதிலும் வித்தியாசங்கள் இருப்பதைக் கண்டறிந்தார். எதோ கொஞ்ச வித்தியாசம் இருந்திருந்தால் விட்டிருப்பார். ஆனால் இந்த வித்தியாசம் மிக அதிகமாக இருப்பத்தால் வெளிச்சம் வெப்பம் ஆகியவைகளின் அடிப்படையில் இயங்காத பொருள்கள் இருக்கின்றன என்பதை கண்டு கொண்டார்.

இது தான் முதன் முதலில் dark matter இருப்பதை உணர்ந்து கொள்ளும் விதமாக அமைந்த சம்பவம்.

Dark matter ஏன் மற்ற பொருள்களைப் போல இருப்பதில்லை என்றால். நமக்குத் தெரிந்த இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே அணுக்களால் ஆனது. இந்த அணுக்களின் மூலப் பொருள்கள் மூன்று proton, neutron
and electron. இந்த மூன்று பொருள்களுடன் டெல்டா, லேமிடா, சிக்மா, ஜீ, ஒமேகா ஆகிய பொருள்களை baryonic matter என்று சொல்லுவோம்.

இந்த baryonic மேட்டர் தான் நம் கண்களுக்கு தெரியும் இது மட்டுமே இந்த உலகில் நிறைந்திருக்கிறது என்று நாம் நம்பிக் கொண்டிருந்தோம்.

இந்த baryonic மேட்டர் தான் நாம் உருவாவதற்கு, பூமி, சூரியன், அண்ட வெளி, சூப்பர் நோவா எல்லாமே உருவாகுவதற்கு அடிப்படை.

ஆனால் nonbaryonic dark matter தான் இந்த உலகில் 82% சதவீதகம் நிறைந்திருக்கிறது. இவை வெப்பம் கொள்ள விட்டாலும் இவற்றுக்கும் மாஸ் இருக்கிறது. சார்புநிலைத் தத்துவத்தின் படி மாஸ் என்பது தான் gravityக்கு அடிப்படை. ஆகவே இந்த dark matter என்பது இந்தப் பிரபஞ்சம் இயங்குவதற்கு மிக அவசியமானதாகுகிறது.

பெருவெடிப்பு(big bang) என்பதை விளக்குவதற்கு இந்த dark matter என்பது மிக அவசியமானதாகும், பல விளக்க முடியாத விஷயங்களை விளக்குவதற்காக இந்த dark matterஐ விஞ்ஞானிகள் உபயோகித்துக் கொண்டார்கள்.

ஆனால் பல காலம் இந்த dark matter இருப்பதை விஞ்ஞானிகளால் நிரூபிக்கவே முடியவில்லை. வெளிச்சம் பிரதிபலிக்காமல், வெப்பம் இல்லாத பொருள்களை உணர்வது கடவுளை உணர்வது போல இருக்கிறது என்று தெரியும் ஆனால் நிரூபிக்க முடியாது. ஆனால் கடைசியாக 2003ம் வருடம் விஞ்ஞானிகள் dark matter இருப்பதை விஞ்ஞானிகள் நிரூபித்து உள்ளார்கள்.

இன்று சராசரியான எல்லா மனிதர்களும் இறைவனை நம்புகிறார்கள், இறைவனே இந்த உலகை ஆட்டுவிப்பதாகவும் நம்புகிறார்கள். மனிதன் என்பவன் கடவுளின் படைப்பு என்றும் கடவுளே மனிதர்களை ஆட்டுவிப்பதாகவும் நம்புகிறார்கள்.

மைக்ரோ ஸ்கோப்பில் பார்த்தால் கூட தெரியாத பொருள்கள் நம்மிடையே இருக்கிறது. பேக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளை விட பல கோடி மடங்கு சிறிய பொருள்கள் இவை. இந்த பொருள்களைப் பற்றி நாம் கவலை கொள்கிறோமா? இல்லை தெரிந்து கொள்ள தான் முயற்சிக்கிறோமா?

இந்த பிரபஞ்சத்தில் நாமும் இந்தப் பொருள்களைப் போலத்தான் இருக்கிறோம். insignificant மனிதர்கள் நாம். அதனை உணர்ந்து எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று அகம்பாவம் கொண்டு நம்மை நாமே அழித்துக் கொள்வதால் இந்த பிரபஞ்சத்தில் ஒரு மாற்றமும் வரப் போவதில்லை. இந்த பூமியில் கூட ஒரு மாற்றமும் வராது.

இதனை உணர்ந்து மனிதன் நடந்து கொண்டால் நல்லது. இல்லையெனிலும் ஒன்றும் இல்லை இந்த பிரபஞ்சம் இருக்கும் இந்த பூமியும் இருக்கும் மனிதர்கள் நாம் இருக்க மாட்டோம் அவ்வளவே.

Thursday, December 07, 2006

செவ்வாய் கிரகத்தில் உயிர்??!!

செவ்வாய் கிரகத்தில் உயிர் இருந்திருக்கலாம் இருக்கலாம் என்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள்.

விஞ்ஞான வளர்ச்சி பெற்ற நாளில் இருந்தே செவ்வாய் கிரகம் அறிவியல் வல்லுனர்களின் கவனத்தை ஈர்த்து வந்துள்ளது. பூமி போலவே இதற்கும் பல குண நலன்கள் இருப்பது இதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. பல காலங்கள் வரை செவ்வாயில் உயிர் இனங்கள் கண்டிப்பாக வாழ்ந்து வருகிறது என்று பல விஞ்ஞானிகள் கருதி வந்தனர்.

இதன் அடிப்படையில் மிகப் பிரபலமாக பல நாவல்களும் படங்களும் கூட வெளி வந்துள்ளன. வார் ஆப் தி வோர்ல்ட்ஸ்(war of the worlds) என்பது உட்பட பல பிரபலமான படைப்புகள் இதில் அடங்கும்.

கீழே mars attacks என்ற படத்தின் காட்சிகளைக் காணுங்கள்.



Evolution படி பூமியில் முதன் முதலில் உயிர் தோன்றுவதற்கு இருந்த சாத்தியக் கூறுகள் மிக மிக குறைவானது என்று அறிந்த பிறகு விஞ்ஞானிகளில் சிலர் செவ்வாய் போன்ற வேற்று கிரகங்களில் இருந்து உயிர் பூமிக்கு வந்திருக்கலாம் என்று கூட சொல்லத் துவங்கினர். இன்றும் கூட இது ஒரு மிகப் பெரிய விவாதத்திற்கு உரிய விஷயமாக பேசப் படுகிறது.

http://en.wikipedia.org/wiki/Origin_of_life#.22Primitive.22_extraterrestrial_life

ஆனால் அறிவியல் வளர்ந்து செவ்வாய் பற்றிய நாம் மேலும் அறிய அறிய செவ்வாயில் உயிர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவாகவே இருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க இந்த விவாதங்கள் conspiracy theory என்ற அளவில் ஒதுக்கி வைக்கப்பட்டது.

ஆனால் இதைப் பற்றிய ஆர்வம் முற்றிலுமாக குன்றி விடவில்லை. அந்த சிகப்பு நிற கிரகத்தின் மேல் எப்பொழுதுமே ஒரு ஆர்வம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

நாசாவுக்கு இருந்த இந்த ஆர்வத்தில் நாசா Path finder(வழி தேடி) என்ற விண்கலத்தை 2003 ஆண்டு விண்வெளிக்கு அனுப்பி வைத்தது(உலகமெல்லாம் பசி பட்டினி மனுஷன் சாகறான் இருந்தாலும் இந்த அமெரிக்காவுக்கு செவ்வாயில என்ன இருக்குதுன்னு தான் முக்கியமா போச்சு அந்தக் காசில் உலகில் வறுமை தீர்க்க உபயோகப்படுத்தலாம். ஹீம் பூனைக்கு யார் மணி கட்டறது?).

இந்த விண்கலம் முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு செவ்வாய் பற்றிய செய்திகளை நமக்கு தெரிவித்து வருகிறது.

கடந்த வாரத்தில் செவ்வாயில் உயிர் இருந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கொண்ட தகவல்களை Path finder(வழி தேடி) விண்கலம் நமக்கு அனுப்பி உள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பார்த்தீர்களானால்





இந்தப் படங்களில் இருந்து செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இன்னும் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கிறார்கள் மேலும் நுண் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகளும் தென்படுவதாக சொல்கிறார்கள்.

இது மேலும் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. பூமியில் இருக்கும் உயிர் வேறு கிரகத்தைச் சேர்ந்தது போன்ற பல கருத்துக்களை அப்படியும் இருக்குமோ என்று மீண்டும் யோசிக்க வைத்துள்ளது.

Friday, December 01, 2006

அறிவியல் ஆன்மீகம் 10 டினோசர் பாடம்

டினோசர் என்றால் இன்று நமக்கு ஞாபகம் வருவது ஜூராஸிக் பார்க் திரைப்படங்கள் மட்டுமே. மேலும் நம்முடைய பொதுவாக அவை மற்ற மிருகங்களைப் போலவே ஐந்தறிவு மட்டுமே கொண்டவை, சிந்திக்கும் திறம் அற்றவை என்று நம்புகிறோம்.

6 கோடியே அறுபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால் அழிந்து போன டினோசர்கள் சிந்திக்கும் திறன் கொண்டவையா என்பதை எல்லாம் ஆராய்ந்து அறிவது மிகக் கடினமான செயலாகும். ஆகவே இது குறித்து பல வேறு கருத்துக்கள் விஞ்ஞானிகளிடையே நிழவி வருகின்றன.

ஆனால் டினோசர்களைப் பற்றி எல்லோரும் ஒப்புக் கொள்ளக் கூடிய விஷயம் என்னவெனில் டினோசர்கள் இருந்த காலகட்டத்தில் டினோசர்கள் தான் உணவு சங்கிலியின் உச்சத்தில்(top of the food chain)இருந்தன.

அது என்ன உணவு சங்கிலி?

இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் ஒரு உணவு உட்கொள்வதில் ஒரு சங்கிலியால் பிணைக்கப் பட்டுள்ளது போலுள்ளார்கள். உதாரணத்திற்கு பல்லிகள் சின்னச் சின்னப் பூச்சிகளை சாப்பிடுகின்றன. அதே போல பல்லிகளை பாம்புகள் சாப்பிடுகின்றன. பாம்புகளை பருந்துகள் சாப்பிடுகின்றன. பல்லி என்பது பூச்சிகளை விட உணவுச் சங்கிலியில் மேலே இருக்கின்றன. பாம்புகள் பல்லிகளை விட உணவுச் சங்கிலியில் மேலே இருக்கின்றன. பருந்துகள் உணவுச் சங்கிலியில் பாம்புகளை விட மேலே இருக்கின்றன.

இதே போல பல உணவுச் சங்கிலிகள் இந்த உலகில் இருக்கின்றன. இந்த உணவுச் சங்கிலியில் ஒரு சமயத்தில் எந்த ஒரு உயிரினம் எல்லா உயிரினங்களுக்கும் மேலாக இருக்கிறதோ அதுவே உணவுச் சங்கிலியின் உச்சத்தில்(Top of the food chain)இருக்கிறது என்று அர்த்தம்.

இன்று மனிதன் தான் உணவுச் சங்கிலியின் உச்சத்தில்(top of the food chain) இருக்கிறான். டினோசர்கள் இருந்த காலகட்டத்தில் அவையே உணவுச் சங்கிலியின் உச்சத்தில்(top of the food chain) இருந்தது.

அதாவது இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமெனில் டினோசர்கள் தான் அவை இருந்த காலகட்டத்தில் இந்த உலகில் இருந்த மிக ஆற்றல் மிகுந்த(dominating) மிருகம்.

மனிதர்களுக்கும் டினோசர்களுக்கும் உள்ள ஒற்றுமை இதுவே. இரு விலங்குகளுமே அவை இருந்த காலகட்டத்தில் மிகுந்த ஆற்றல் வாய்ந்த மிருகங்கள்.

இப்படி இருந்த டினோசர்கள் முற்றிலுமாக அழிந்து போய் மனிதர்களாகிய நமக்கு சில பாடங்களை விட்டு சென்றிருக்கிறது.

உடனே டினோசர்கள் எதோ முட்டாள்தனமாக அழிந்து விட்டது அல்லது அழிக்கப் பட்டது என்று நாம் கற்பனை செய்து கொள்ள முடியாது. மேலும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது டினோசர்கள் இந்த பூமியில் கிட்டத்தட்ட 165 மில்லியன் வருடங்கள் அதாவது 16.5 கோடி வருடங்கள் இந்த பூமியில் வலம் வந்து கொண்டிருந்தன. மனிதன் இந்த பூமியில் 60 மில்லியன் வருடங்கள் தான் இருந்திருக்கிறான் அதாவது 6 கோடி வருடங்கள்.(படங்களின் மூலமும் சமிஞ்சைகள் மூலமும் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளத் துவங்கிய மனிதனின் வயது சுமார் 1 லட்சம் வருடங்கள்( மறுபடியும் இதெல்லாம் evolution என்ற விஞ்ஞானம் கணித்தது மதங்களின் அடிப்படையில் மனிதனின் வயது 6000 ஆண்டுகள் தான்)).

மனிதன் இன்று அழிவுப் பாதையில் செல்வதைப் பார்த்தால் இன்னும் கால் நூற்றாண்டைக் கூட தாண்ட மாட்டோம் என்று நினைக்கிறேன். ஆக நம்மை விட 10 கோடி வருடங்கள் அதிகமாக டினோசர்கள் இந்த பூமியில் இருந்திருக்கின்றன.

ஆக டினோசர்களின் நமக்கு விட்டுச் சென்ற பாடங்கள் மிக முக்கியமானவையே என்று நினைக்கிறேன். அந்தப் பாடங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் முன்னர் அறிய வேண்டியது டினோசர்கள் எப்படி அழிந்தது என்பதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

இது பற்றியும் இன்று தெளிவான ஒரு விளக்கம் இல்லை. பல வேறுபட்ட கருத்துக்கள் நிழவி வருகின்றன.

இதில் மிக பரவலாகவும், பிரபலமாகவும் உள்ள கருத்து ஒரு விண்கல் இந்த பூமியைத் தாக்கி அதன் மூலம் டினோசர்கள் அழிந்தது என்பது தான். அந்த விண்கல் பூமியைத் தாக்கிய உடன் பூமியில் ஒரு மிகப் பெரிய புகை மண்டலம் எழுந்து இந்த பூமியின் சூரிய வெளிச்சம் நுழைய முடியாதபடி மூடியது என்றும், சூரிய வெளிச்சம் பூமியில் விழாததால் பூமியில் உள்ள தாவரங்கள் அனைத்தும் முதலில் அழிந்தது பின் உயிரினங்கள் ஒவ்வொன்றாக அழிய தொடங்கியது என்பது ஒரு கருத்து.

ஒரு விண்கல் பூமியைத் தாக்கி மனித குலமே அழிந்து போவது போன்று வெளி வந்த deep impact என்ற படம் மிக பிரபலமான படம். அது போன்றும் இன்றும் நிகழலாம் நிகழக் கூடும். இது நிகழ்ந்தால் எப்படி இருக்கும் என்பது மாதிரியான ஒரு வீடியோ கீழே.



இது மிகப் பிரபலமான விளக்கமாக இருந்தாலும் இந்த விளக்கம் முழுக்க ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் சில பிரச்சனைகள் இருக்கிறது.

இதே போல பல கருத்துக்கள் நிழவி வருகின்றன.

திடீரென்று பூமியின் புவியீர்ப்பு விசை அதிகரித்ததால் டினோசர்கள் நகர முடியாமல் அழிந்தது என்பது உட்பட பல கருத்துக்கள் உண்டு. ஆனால் இதுதான் சரி என்று சொல்ல முடியாத வகையில் சில பிரச்சனைகள்.

ஆகவே எப்படி அழிந்தது என்பதை அறுதியிட்டு யாராலும் கூற முடியவில்லை.

ஆனால் டினோசர்களின் அழிவுக்கு இயற்கையே காரணம் அவை ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக் கொண்டு(உணவுக்குத் தவிர) அழிந்து போய் விடவில்லை என்பது திண்மம்.

இங்கே தான் டினோசர்கள் நமக்கு விட்டுச் சென்ற சில பாடங்கள் ஒளிந்து கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன்.

அவரவர்களின் காலகட்டத்தில் இந்த உலகின் உணவுச் சங்கிலியின் உச்சத்தில் இருந்தது இருப்பது மனிதனும், டினோசர்களும். டினோசர்களின் புத்திசாலித்தனம் குறித்து பல வேறு ஐயப்பாடுகள் நிழவினாலும் பிரபலமான கருத்துக்கள் அவைகளும் புத்திசாலித்தனம் கொண்டிருந்தன என்றே குறிப்பிடுகின்றன(ஜுராஸிக் பார்க் படத்தில் கூட ராப்டர்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் ஆற்றலும், மனிதனையே யோசித்து ஏமாற்றும் ஆற்றலும் கொண்டிருப்பதாக காமித்திருப்பார்கள் ஆனால் இதெல்லாம் எந்த அளவு உண்மை என்பது சர்ச்சைக்குறியதே.)

இப்படி இருந்தாலும் டினோசர்கள் இயற்கையின் அழிவில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.

இன்றும் சுனாமி போன்ற இயற்கை சீரழிவுகளில் இருந்து மனிதனால் சிறிய அளவில் தற்காத்துக் கொள்ள முடிகிறது அவ்வளவே. Global Warming போன்ற தவிர்க்க இயலாத(இன்றைய சூழ்நிலையில் Global Warmingஐ தவிர்க்கவே இயலாது அது ஏற்படும் பாதிப்பின் தாக்கத்தை சற்று மட்டுப்படுத்தலாம் அவ்வளவே) அழிவை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறோம்.

டினோசர்கள் 10 கோடி ஆண்டுகள் நம்மை விட அதிகமாக இந்த பூமியில் இருந்திருக்கிறது. நம் அளவுக்கு கலாச்சாரம், நாகரீகம் போன்றவை அந்த மிருகங்கள் இடையே இருந்ததற்கான அறிகுறிகள் இல்லை, அப்படி இருந்தும் 10 கோடி ஆண்டுகள் முன்னரே நாம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோமே யார் இதில் புத்திசாலி மிருகம்?

இன்று நாம் செய்து கொண்டிருக்கும் இயற்கைச் சீரழிவுகள் நம்மை டினோசர்களை விட 10 கோடி ஆண்டுகள் முன்னதாக அழித்து விடக் கூடும் என்று இருக்கிறது சூழ்நிலை.

ஆனால் அதற்கு முன்னரே முந்திக் கொண்டு நாம் நமக்குள் இருக்கும் பிரிவினைகளால் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளப் போகிறோமா?

டினோசர்கள் உணவினை விடுத்து வேறு காரணங்களுக்காக வேறு எந்த ஒரு மிருகத்தையோ இல்லை வேறு டினோசர்களையோ கொல்லுவதில்லை. ஆனால் மனிதர்கள் தோலுக்காக மற்ற மிருகங்களையும் முட்டாள்தனங்களால் சக மனிதர்களையும் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறோம்.

பிற உயிர்களையே ஏன் கொல்ல கூடாது என்று யோசிக்கும் அறிவு படைத்த மனிதன் சக மனிதனையே கொல்லக் காரணியாக இருக்கும் செயல்களுக்கு தெரிந்தும் ஆதரவளிக்கிறான். மனிதன் உண்மையில் டினோசர்களை விட புத்திசாலி என்று சொல்லிக் கொள்ள முடியுமா?

4000 வருட நாகரீகத்தில் மனிதன் தன்னுடைய புத்திசாலித்தனத்தை உபயோகித்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளக் கூடிய ஒரு சூழ்நிலையை வளர்த்துக் கொண்டிருக்கிறான். இதை விட 10 கோடி வருடங்கள் அதிகமாக இந்த பூமியில் வலம் வந்த டினோசர்கள் புத்திசாலி மிருகங்களாகவே தோன்றுகின்றன.

எனக்கு டினோசர்கள் விட்டுச் சென்ற பாடமாக தோன்றுவது என்னவென்றால் இயற்கை என்பது மிக மிக சக்தி வாய்ந்தது. அதன் ஆற்றல் முன் மனிதன் என்பவனோ இல்லை டினோசர்களோ இல்லை எந்த சக்தியோ எதுவுமே பெரியதில்லை.

இந்த ஆற்றலுக்கும் சக்திக்கும் பெயரிட்டோ இல்லை புஸ்தகங்கள் மூலம் உணர்ந்து கொண்டேன் என்றோ நம்பி அழிந்து போவது முட்டாள்தனம்.

இப்படி செய்வதன் மூலம் ஐந்தறிவு மிருகங்களை விட குறைவான அறிவு கொண்டவர்களாகவே ஆகிறோம்.