Wednesday, December 27, 2006

டிஸ்கவரி சேனல் டாக்குமெண்டிரி

Super Massive Black Hole(மிகப் மிகப் மிகப் பெரிய கரும் பள்ளங்கள்)

சிறப்பான டிஸ்கவரி சேனல் டாக்குமெண்டரி. இதனை விரைவில் தமிழ்படுத்த வேண்டும்.











Friday, December 22, 2006

அறிவியலும் ஆன்மீகமும்-12 நட்சத்திரங்கள்

தலை உயர்த்தி வானில் கண் சிமிட்டிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களைப் எத்தனை முறை ரசித்திருக்கிறேன் என்பது நினைவில்லை. நட்சத்திரங்களை இன்று எண்ணி விடலாம் நாளை எண்ணி விடலாம் என்று சின்ன வயதில் பல நாட்கள் கழித்ததுண்டு.

சிறு வயதில் மின்மினி பூச்சிகள் போல மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களுக்கும், தோரணத்தில் கட்டித் தொங்க விடப் பட்டிருக்கும் கலர் விளக்குகளுக்கும் அதிக வித்தியாசங்கள் தெரிந்ததில்லை.

இன்று தலை உயர்த்தி அதே நட்சத்திரங்களைப் பார்க்கும் சமயம் தான் எத்தனை விதமான உணர்வுகள். மனிதனின் கற்பனை எல்லையற்றது என்றால் அதன் எல்லையைக் கூட விஞ்சி விடும் பிரமாண்டம் மயக்கம் தருகிறது.

குமரியில் இருந்து காஷ்மீரம் வரையிலான தூரங்களே பிரமிக்க வைக்கும் பொழுது, இந்த பூமியின் சுற்றளவை விட 110 மடங்கு பெரிய சுற்றளவும், 10 லட்சம் பூமிகளை தன்னுள் அடக்கி விடக் கூடிய அளவு இருக்கும் சூரியனை ஏனைய நட்சத்திரங்களுடன் ஒப்பிடும் சமயம் அது ஒரு நடுத்தர அளவு நட்சத்திரம் என்று மட்டுமே சொல்ல முடியும் என்பதை அறிவு ஒப்புக் கொள்ள மறுக்கிறது.

சூரியனை விட அளவில் 100 மடங்கு பெரிய நட்சத்திரமான பிஸ்டல் நட்சத்திரம் சூரியனை விட 10 லட்சம் மடங்கு அதிகமான பிரகாசம் கொண்டது என்பதை கற்பனை கூட ஒப்புக் கொள்ள மறுக்கிறது. கடவுளை வர்ணிக்கும் கவிஞர்களின் கற்பனையில் கூட இவ்வளவு பிரகாசம் குறிப்பிடப் படுவதில்லை என்றே நினைக்கிறேன்.

எண்ணிலடங்காத நட்சத்திரங்கள் இருப்பதாக கொண்டிருந்த என் சிறு வயது எண்ணம் மட்டும் தவறாகி விடவில்லை. நம் அண்டவெளியில் மட்டும் 1000 லட்சம் நட்சத்திரங்கள் இருப்பதாக கணித்திருக்கிறார்கள். நம் அண்டவெளியில் மட்டும் இவ்வளவு என்றால் இந்த பிரபஞ்சத்தில் எவ்வளவு இருக்கும்? எண்ணில் அடங்காது தானே?

உயிர்களின் ஜனனம் என்பது இயற்கையின் அற்புதம். நட்சத்திரங்களின் ஜனனமும் அதே போலத் தான். மனிதர்கள் போல கண்ணோடு கண் சேர்த்து, காதல் மொழி பேசி, கட்டி காமுற்று, கலவி செய்து குழந்தை பெறுவது போன்ற நிகழ்வுகள் இல்லை.

ஸ்டெல்லார் மேகங்கள்(stellar clouds) என்பதில் இருந்து தான் நட்சத்திரங்கள் உருவாகுகின்றன. இது உயிர்களின் தோற்றத்தோடு ஒப்பிடும் சமயம் விந்து அல்லது ஓவம் என்ற நிலை என்பதை அறியலாம் அதாவது தொடக்க நிலை இதுதான்.

ஸ்டெல்லார் மேகங்கள் என்றால் என்ன? மேகம் என்பது என்ன? நீராவி திரண்டு ஆகாயத்தில் ஒரே இடத்தில் இருக்கிறது அந்த நீராவி திரண்டு இருக்கும் இடத்தை நாம் மேகம் என்று சொல்கிறோம்(நீராவி ஏன் ஒரே இடத்தில் திரண்டு இருக்க வேண்டும்? மேகத்தில் மட்டும் இருக்கும் அந்த நீராவி ஏன் ஆகாயம் முழுக்க பரவுவதில்லை யோசித்திருக்கிறீர்களா? இதற்கு பதில் அளிக்க வேண்டுமெனில் ஒரு தனி பதிவு இட வேண்டும்.)

ஸ்டெல்லார் மேகங்கள் என்பது அண்டவெளியில் ஒரே இடத்தில் திரண்டு இருக்கும் கேஸ்கள். நம் நீர் மேகங்கள் சிறிய அளவில் இருப்பதால் ஸ்டெல்லார் மேகங்களும் இதே போல இருக்கும் என்று நினைத்து விடக் கூடாது. முன்பு குறிப்பிட்டுள்ள மிகப் பெரிய நட்சத்திரத்தை விட பெரிய அளவில் கூட இருக்கும் இந்த ஸ்டெல்லார் மேகங்கள். இந்த ஸ்டெல்லார் மேகங்களிம் அதிக அளவில் இருப்பது ஹைட்ரஜனாக இருக்கும்.

காதலாகி கசிந்துருகினால் மட்டும் மனிதர்களுக்கு குழந்தை பிறந்து விடுமா இல்லையே? அதற்கு கலவி தேவையாயிருக்கிறது இல்லையா? ஸ்டெல்லார் மேகங்கள் நட்சத்திரங்களாக மாறுவதும் அதே போலத்தான்.

ஒரு ஸ்டெல்லார் மேகம் மற்றொன்றுடன் மோதும் சமயம் ஏற்படும் உராய்வு அல்லது நட்சத்திரங்களில் ஏற்படும் சூப்பர் நோவா உண்டாக்கும் வெப்பம் மற்றும் அதிர்வுகளாலேயே இந்த ஸ்டெல்லார் மேகங்கள் நட்சத்திரங்களாக மாறுவதற்கு ஏதுவான சூழ்நிலை உண்டாகுகிறது.

ஏதுவான சூழ்நிலை தான் உருவாகுகிறதே தவிர எல்லா ஸ்டெல்லார் மேகங்களும் நட்சத்திரங்களாக மாறுவதில்லை.

மேலே குறிப்பிட்டதில் ஏதேனும் ஒரு நிகழ்வு நடந்தாலும் இந்த ஸ்டெல்லார் மேகங்களில் உண்டாகும் புவியீர்ப்பு விசை மாறுதல்களால் இந்த ஸ்டெல்லார் மேகங்கள் ஒரு புரோட்டோ ஸ்டார்(proto star) என்ற நிலையை அடையும்.

இந்தப் பருவத்தை நம் குழந்தைப் பருவத்துடன் ஒப்பிடலாம். அதாவது வளரும் பருவம் இது. முழு நட்சத்திரமாக மாறுவதற்கு முந்தைய நிலை இது.

இப்படி ஆகும் ஸ்டெல்லார் மேகங்கள் நட்சத்திரங்களாக மாற அதனுடைய வெப்பம் ஒரு குறிப்பிட்ட அளவு அதிகரிக்க வேண்டும்.

வெப்பம் அந்த அளவை நிலையை அடைந்த உடன் அணு சேர்க்கை(nuclear fusion) ஆரம்பமாகி விடும். அணு பிளவை(Nuclear Fission) விளக்கி பதிவை சீனு அவர்கள் எழுதி இருக்கும் பதிவை இங்கே காணலாம்.

சில ஸ்டெல்லார் மேகங்களில் இந்த அணு சேர்க்கை நடப்பதற்கு தேவையான வெப்ப அளவை அடைவதே இல்லை. இந்த ஸ்டெல்லார் மேகங்கள் பழுப்புக் குள்ளன் (Brown dwarf) ஆக மாறி விடும்.

இப்படி அணுசேர்க்கை ஆரம்பித்து வெளிச்சத்தையும் வெப்பத்தையும் அந்த அணுசேர்க்கையின் காரணமாக வெளியேற்றிக் கொண்டிருக்கும் நட்சத்திரத்தை நாம் முழுக்க வளர்ந்த ஒரு மனிதனுடன் ஒப்பிடலாம். அதாவது நட்சத்திரத்தின் வாழ்க்கைப் பயணத்தில் பருவம் அடைந்து விட்டது என்று கூறலாம்.

வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த பூமியில் நமக்கே இடம் ஏது என்பது போல எல்லா நட்சத்திரங்களும் பிரபஞ்சத்தில் அப்படியே இருந்து விட்டால் புதுப் புது நட்சத்திரங்கள் தோன்றத் தோன்ற பிரபஞ்சமே நட்சத்திரங்களால் நிறைந்து விடாதா?

மனிதர்களுக்கு மரணிப்பது போலவே நட்சத்திரங்களும் மரணிக்கின்றன.

ஏன் மரணிக்கிறது என்றால், நட்சத்திரங்களில் அணுச்சேர்க்கையின் போது என்ன நடக்கிறது என்றால் ஹைட்ரஜன் அணுக்களை எல்லாம் ஒன்று சேர்ந்து ஹீலியம் அணுக்களாக மாறுகிறது. நம் உடலில் நடக்கும் செல் மரணங்கள், ஜனனங்களுடன் இதனை ஒப்பிடலாம். இந்த சேர்க்கையின் போது வெளியாகும் சக்திதான் வெப்பமாகவும், வெளிச்சமாகவும் வெளிப்படுகிறது. ஆனால் நட்சத்திரங்களில் ஹைட்ரஜன் அணுக்கள் எதோ ஒரு சந்தர்பத்தில் தீர வேண்டும் அல்லவா? அப்படி தீரும் சமயம் இல்லை ஹீலியம் மிக அதிக அளவில் உற்பத்தியாகும் சமயம் இந்த அணுசேர்க்கையில் வெளியாகும் சக்தி போதுமானதாக இருப்பதில்லை.

அந்த சமயத்தில் இந்த நட்சத்திரம் மரணிக்க ஆரம்பிக்கிறது. புவியீர்ப்பு சக்தி(gravitational force) மெதுவாக இந்த நட்சத்திரத்தை சுருங்க செய்கிறது.

இதை லாடம் கட்டுவதுடன் ஒப்பிடலாம். ஒரு பொருளை சூடாக்கினால் அது விரிவடைகிறது. அதனை குளிர்வித்தால் அது சுருங்குகிறது அல்லவா? அதே போல மிக வெப்பமாக இருந்த நட்சத்திரம் அந்த வெப்பம் இப்பொழுது இல்லாததால் சுருங்க ஆரம்பிக்கிறது.

சூரியன் போல நடுத்தர அளவு நட்சத்திரங்களில் என்னவாகும் என்றால் இதன் புவியீர்ப்பு விசை மிக அதிகமாக இல்லாததால் இதனை நம் பூமி அளவுக்கு சுருக்கி விடும். அப்படி சுருங்கிய சூரியன் தன் பிரகாசம் இழந்து வெப்பம் வெளியாக்கும் சக்தியை இழந்து ஒரு வெள்ளைக் குள்ளனாக(white dwarf) சுருங்கி விடும்.

சூரியனை விட சற்று பெரியதாக இருக்கும் நட்சத்திரங்களில் புவியீர்ப்பு விசை இன்னும் அதிகமாக இருப்பதால் இதனை மிக மிக அதிகமாக சுருக்கி ஒரு நியூட்டரான் ஸ்டார்(neutron star) ஆக மாறி விடும்.

சூரியனை விட பல மடங்கு பெரியதாக இருக்கும் நட்சத்திரங்கள் கரும் பள்ளங்களாகி விடும். இதனைப் பற்றி இங்கே எழுதப்பட்டிருக்கிறது.

இப்படித்தான் நட்சத்திரங்கள் மரணிக்கின்றன.

இந்த அற்புதம் நாள்தோறும் இந்த பிரபஞ்சத்தின் எதோ ஒரு மூலையில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.

மனிதர்கள் மதமென்னும் மாயப் பேயின் பிடியில் சிக்கி மன வக்கிரங்களை வெளிப்படுத்தி, மனதில் அயர்ச்சியை உண்டாக்கும் வேளைகளில் எல்லாம் வானில் தலை உயர்த்தி நட்சத்திரங்களைப் பார்த்துக் கொள்கிறேன்.

1,00,000 ஆண்டுகள் மனிதர்கள் இந்த பூமியில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள், இது ஒரு நட்சத்திரம் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் சமயத்தில் ஒரு மிகச் சிறிய ஒரு பகுதியே. ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை நட்சத்திரங்கள் பிரபஞ்சத்தில் இருக்கும் சமயத்தோடு ஒப்பீடு செய்யவே முடியாது.

எத்தனை ஆற்றல் மிக்கது ஒரு நட்சத்திரம் எவ்வளவு வெப்பத்தை எவ்வளவு வெளிச்சத்தை எத்தனை எத்தனை கோடி ஆண்டுகளுக்கு வெளிப்படுத்துகிறது. அதற்கும் விதிகள் வைத்து அதனையும் மரணமுறுகிறது? என்ன அற்புதம் என்ன ஆற்றல்.

எல்லையில்லாத இறை ஆற்றலின் படைப்புகள் தான் எத்தனை அற்புதமானவை. எத்தனை சாகசங்களை இந்த பிரபஞ்சத்தில் வைத்திருக்கிறது இந்த ஆற்றல். மனிதர்கள் இந்த ஆற்றலை கோயில்களிலும், மசூதிகளிலும், தேவாலயங்களிலும் தேடிக் கொண்டிருக்கிறார்களே.

மதம் மூலம் மனிதன் தனக்குத் தேவையானதைத் தேடிக் கொண்டிருக்கிறான்.

இந்த ஆற்றலின் அற்புதங்களை உணரும் அறிவு மனிதர்களுக்கு இருக்கிறது. இறை ஆற்றல் கோடிப் பாகங்கள் என்றால் அதில் ஒரு துளியை மனிதனின் அறிவு அடையாளம் கண்டு கொண்டிருக்கிறது.

இந்த ஆற்றலின் அற்புதங்களை மதங்கள் சொல்லிக் கொடுப்பதில்லை. மனிதர்களுக்கு தேவையானது இந்த ஆற்றலைத் தேடினால் கிடைக்கும் என்று தான் சொல்லிக் கொடுக்கிறது.

மனிதன் ஏன் புத்தகங்கள் பின்னும், கேடு கெட்ட புத்தியால் தனக்குத் தானே அமைத்துக் கொண்ட விதிகளுக்குப் பின்னாலும் சுற்றுகிறார்கள்?

அறிவிலிகளாக உன் ஆற்றலை உணராமல் ஏன் வாழ்க்கையை கோயில்களிலும் மசூதிகளிலும் தேவாலயங்களிலும் வீணடிக்கிறார்கள். தலையை உயர்த்தி வானில் கண் சிமிட்டும் நட்சத்திரங்களில் நீ நிகழ்த்தும் அற்புதங்கள் பார்த்தால் போதுமே உன் அற்புதங்கள், ஆற்றல் எல்லோருக்கும் விளங்குமே.

இறை ஆற்றலை என் மார்க்கத்தின் மூலமாக மட்டுமே உணர முடியும் என்று நினைக்கும் மூட மதியே,

எல்லா மனிதர்களுக்கு மட்டும் இல்லை இந்த பிரபஞ்சத்திற்கே இறை ஆற்றல் ஒன்றுதான் .

பெயரிடாதே சொந்தம் கொண்டாடாதே மனிதா நான் பெயர்களுக்கும், மனிதர்களுக்கும் அப்பாற்பட்டவன் என்றும்

உன் மூட மதி வாழ்வில் நீ என்னை எப்படி வணங்குகிறாய் என்பது பற்றி எனக்கு கவலையில்லை. உன் வணக்கங்களுக்காகவா என் ஆற்றல் இருக்கிறது என் ஆற்றலுக்கு முன் நீ ஒரு அணு கூட இல்லை என்றும்

இந்த பூமியில் வாழும் சமயத்தில் பிறருக்கு துன்பம் விளைவிக்காமல் வாழ்ந்தாலே போதும் என்றும்

நீ நட்சத்திரங்களை காண்பித்து சொல்லும் செய்தி எல்லோருக்கும் எப்போது புரியப் போகிறது???

கீழே நட்சத்திரங்களிம் தோற்றமும் எப்படி மரணிக்கிறது என்பதைப் பற்றியும் ஒரு சிறிய வீடியோ.

Thursday, December 21, 2006

அலைகளில் இருந்து மின்சாரம்??!!

செய்தியின் முழு சுட்டி இங்கே

இது ஆராய்ச்சி எல்லாம் இல்லை. 2007ல் இருந்து மின்சாரம் அலைகளில் இருந்து தயாரிக்கப் பட உள்ளது.

ஜார்ஜ் டெயிலர் 72 வயதாகும் சிறு தொழில் நிறுவனர் ஒரெகொன் கடற்கரையில்(Oregon coast) இதற்கான சாதனங்களை நிறுவி உள்ளார். இந்த சாதனம் அலைகள் அடிக்கும் கடல்கரையின் நடுவே நிறுவப்பட்டுள்ளது. கடலுக்கு அடியில் கேபிள்கள் மூலமாக உற்பத்தியாகும் மின்சாரம் கரைக்கு எடுத்து செல்லப்படும்.

மேலும் விஞ்ஞானிகள் இன்று உபயோகமில்லாமல் சென்று கொண்டிருக்கும் அலைகளின் சக்தியில் 0.2 சதவீதம் மட்டுமே உபயோகித்து இந்த உலகின் அனைத்து மின்சார தேவையையும் பூர்த்தி செய்ய முடியும் என்று கணித்துள்ளது.

மேலும் இது பரவலாக உபயோகிக்க ஆரம்பித்தால் இன்று இருக்கும் மின்சார கட்டணங்களை விட குறைவாக இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று கணித்திருக்கிறார்கள்.

இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்கிறீர்களா?

உங்களைப் போலவே நம்பிக்கை இல்லாத சிலரின் கணிப்புகளை கீழே பாருங்கள்.

1. "640K ought to be enough for anybody." -- Bill Gates, 1981

2. Computers in the future may weigh no more than 1.5 tons." --Popular
Mechanics, forecasting the relentless march of science, 1949

3. I think there is a world market for maybe five computers." --Thomas
Watson, chairman of IBM, 1943

4. "I have traveled the length and breadth of this country and walked with
the best people, and I can assure you that data processing is a fad that
won't last out the year." --The editor in charge of business books for
Prentice Hall, 1957

5. "But what ... is it good for?" --Engineer at the Advanced Computing
Systems Division of IBM, 1968, commenting on the microchip.

6. "There is no reason anyone would want a computer in their home." --Ken
Olson, president, chairman and founder of Digital Equipment Corp., 1977

7. "This 'telephone' has too many shortcomings to be seriously considered as
a means of communication. The device is inherently of no value to us."
--Western Union internal memo, 1876.

8. "The wireless music box has no imaginable commercial value. Who would pay
for a message sent to nobody in particular?" --David Sarnoff's associates
in response to his urgings for investment in the radio in the 1920s.

9. "The concept is interesting and well-formed, but in order to earn better
than a 'C,' the idea must be feasible." --A Yale University management
professor in response to Fred Smith's paper proposing reliable overnight
delivery service. (Smith went on to found Federal Express Corp.)

10. "Who the hell wants to hear actors talk?" --H.M. Warner, Warner Brothers,1927.

11. "I'm just glad it'll be Clark Gable who's falling on his face and not Gary
Cooper." --Gary Cooper on his decision not to take the leading role in
"Gone With The Wind."

12. "A cookie store is a bad idea. Besides, the market research reports say
America likes crispy cookies, not soft and chewy cookies like you make."
--Response to Debbi Fields' idea of starting Mrs. Fields' Cookies.

13. "We don't like their sound, and guitar music is on the way out." --Decca
Recording Co. rejecting the Beatles, 1962.

14. "Heavier-than- air flying machines are impossible." --Lord Kelvin,
president, Royal Society, 1895.

15. "If I had thought about it, I wouldn't have done the experiment. The
literature was full of examples that said you can't do this." --Spencer
Silver on the work that led to the unique adhesives for 3-M "Post-It" Notepads.

16. "So we went to Atari and said, 'Hey, we've got this amazing thing, even
built with some of your parts, and what do you think about funding us? Or
we'll give it to you. We just want to do it. Pay our salary, we'll come
work for you.' And they said, 'No.' So then we went to Hewlett-Packard,
and they said, 'Hey, we don't need you. You haven't got through college
yet.'" --Apple Computer Inc. founder Steve Jobs on attempts to get Atari
and H-P interested in his and Steve Wozniak's personal computer.

17. "Professor Goddard does not know the relation between action and reaction
and the need to have something better than a vacuum against which to
react. He seems to lack the basic knowledge ladled out daily in high
schools." --1921 New York Times editorial about Robert Goddard's
revolutionary rocket work.

18. "You want to have consistent and uniform muscle development across all of
your muscles? It can't be done. It's just a fact of life. You just have to
accept inconsistent muscle development as an unalterable condition of
weight training." --Response to Arthur Jones, who solved the "unsolvable"
problem by inventing Nautilus.

19. "Drill for oil? You mean drill into the ground to try and find oil? You're
crazy." --Drillers who Edwin L. Drake tried to enlist to his project to
drill for oil in 1859.

20. "Stocks have reached what looks like a permanently high plateau."
--Irving Fisher, Professor of Economics, Yale University , 1929.

21. "Airplanes are interesting toys but of no military value." --Marechal
Ferdinand Foch, Professor of Strategy, Ecole Superieure de Guerre.

22. "Everything that can be invented has been invented." --Charles H. Duell,
Commissioner, U.S. Office of Patents, 1899.

23. "Louis Pasteur's theory of germs is ridiculous fiction". --Pierre Pachet,
Professor of Physiology at Toulouse , 1872

24. "The abdomen, the chest, and the brain will forever be shut from the
intrusion of the wise and humane surgeon". --Sir John Eric Ericksen,
British surgeon, appointed Surgeon-Extraordina ry to Queen Victoria 1873.

Monday, December 11, 2006

அறிவியலும் ஆன்மீகமும் - 10 Dark matter

தலை உயர்த்தி வானை பார்க்கும் சமயம் நம் கண்களுக்கு தெரிவது நட்சத்திரங்கள் மற்றும் கோள்கள். நாம் நட்சத்திரங்களையும் கோள்களையும் விடுத்து மற்ற அனைத்தும் ஒரு சூனியவெளி(vaccum) என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. இந்தப் பிரபஞ்சத்தில் 82% நம் கண்களுக்குத் தெரியாத பொருள்கள்(matter) நிறைந்திருக்கிறது. இன்றைய பிரபஞ்சம் இன்று இது போல இருப்பதற்கு காரணமே இந்த பொருள்கள் தான். இவைதான் dark matter(கரும் பொருள்கள்).

இதைப் பற்றித்தான் இன்று பெருஅண்டவியலில்(cosmology) துறையில் விஞ்ஞானிகள் ஆர்வத்துடன் ஆராயந்து வருகிறார்கள்.

முதலில் dark matter என்றால் என்ன என்று பார்க்க வேண்டி இருக்கிறது.

இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒரு பொருளையும் நாம் பார்க்க அல்லது உணர வேண்டுமெனில் அதற்கு இரண்டு விதமான குண நலன்கள் வேண்டும். ஒன்று ஒளி அதன் மீது படரும் பொழுது பிரதிபலிக்க வேண்டும். ஒளி பிரதிபலிக்காமல் ஒரு பொருளை அப்படியே தாண்டி சென்றால் அந்தப் பொருளை நம்மால் காண இயலாது.

st gobain விளம்பரம் பார்த்திருப்பீர்கள் ஒரு பெண் ஒரு வாளித் தண்ணீரை எடுத்து வந்து காபி குடித்துக் கொண்டிருக்கும் இருவர் மேல் ஊற்றுவார். அவர்கள் இருவரும் மேஜைக்கு பின்னால் சென்று ஒளிந்த பின் தான் தெரியும் குறுக்கே ஒரு கண்ணாடி இருக்கிறது என்று. இந்த சமயத்தில் அந்தக் கண்ணாடி ஒளியை கொஞ்சம் கூட பிரதிபலிக்காமல் விட்டதால் தான் கண்ணாடி இல்லாதது போலத் தோன்றியது.

இன்னொரு வகை வெப்பமாக இருக்கும் பொருள்களையும் நம்மால் உணர முடியும் பார்க்க முடியும். ஆங்கிலப் படங்களில் எல்லாம் காட்டுகிறார்களே அது போல இருட்டில் அகச்சிகப்புக் கதிர்கள்(infrared) கண்ணாடி கொண்டு எதிரிகளை நோட்டம் விடலாம். இது போன்ற கண்ணாடிகள் எந்த அடிப்படையில் இயங்குகிறது என்றால் வெப்பமாக இருக்கும் எல்லாப் பொருள்களில் இருந்தும் சில கதிர்கள் வெளிப்படும். மனித உடல் இருந்து கூட கதிர்களை வெளிப்படுத்துகிறது. இந்தக் கதிர்களை வைத்து ஒரு பொருள் இருப்பதை கண்டு கொள்ள முடியும். இந்தக் கதிர்கள் ஒரு பொருள் எவ்வளவு வெப்பமாக இருக்கிறதோ அதனைப் பொறுத்து மாறுபடும். மிக வெப்பமாக இருக்கும் சில நட்சத்திரங்களில் இருந்து எக்ஸ்ரே கதிர்கள் கூட வெளிப்படும்.

ஆக இந்த இரு வகையான குணங்கள் இருக்கும் பொருள்களையே நம்மால் கண்டு கொள்ள முடியும்.

இந்த இருவகையான குண நலன்களும் இல்லாத பொருள்கள் தான் dark matter. இவை இந்தப் பிரபஞ்சத்தில் 82 சதவீதகத்தை ஆக்ரமித்திருக்கிறது. இந்தப் பொருள்கள் இப்படி இருப்பதாலேயே இவை இருக்கின்றன என்பதை நிரூபிக்க விஞ்ஞானிகள் திக்கி திணறி விட்டார்கள். 1930 வருடம் கண்டு பிடிக்கப் பட்ட இந்த பொருள்கள் இருப்பதை 2003லேயே நிரூபணம் செய்திருக்கிறார்கள்.

1930ல் முதன் முதலாக பிரிட்ஸ் சுவிக்கி என்பவர் ஒரு அண்ட வெளியை ஆராய்ந்து கொண்டிருக்கும் சமயம் அந்த அண்ட வெளியின் மாஸை(mass தமிழாக்கம் தெரியவில்லை weight and mass என்பது இரண்டுமே வித்தியாசமானது. மாஸ் தமிழ் சொல் தெரியவில்லை) வெளிச்சத்தின் அடிப்படையில் கணக்கிடுவதிலும்( ஒரு அண்ட வெளியின் மாஸைக் கண்டு கொள்ள அந்த அண்ட வெளியின் பிரகாசத்தைக் கணக்கில் கொண்டும் கண்டு பிடிக்கலாம்), சாதாரண வகையாக கணக்கிடுவதிலும் வித்தியாசங்கள் இருப்பதைக் கண்டறிந்தார். எதோ கொஞ்ச வித்தியாசம் இருந்திருந்தால் விட்டிருப்பார். ஆனால் இந்த வித்தியாசம் மிக அதிகமாக இருப்பத்தால் வெளிச்சம் வெப்பம் ஆகியவைகளின் அடிப்படையில் இயங்காத பொருள்கள் இருக்கின்றன என்பதை கண்டு கொண்டார்.

இது தான் முதன் முதலில் dark matter இருப்பதை உணர்ந்து கொள்ளும் விதமாக அமைந்த சம்பவம்.

Dark matter ஏன் மற்ற பொருள்களைப் போல இருப்பதில்லை என்றால். நமக்குத் தெரிந்த இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே அணுக்களால் ஆனது. இந்த அணுக்களின் மூலப் பொருள்கள் மூன்று proton, neutron
and electron. இந்த மூன்று பொருள்களுடன் டெல்டா, லேமிடா, சிக்மா, ஜீ, ஒமேகா ஆகிய பொருள்களை baryonic matter என்று சொல்லுவோம்.

இந்த baryonic மேட்டர் தான் நம் கண்களுக்கு தெரியும் இது மட்டுமே இந்த உலகில் நிறைந்திருக்கிறது என்று நாம் நம்பிக் கொண்டிருந்தோம்.

இந்த baryonic மேட்டர் தான் நாம் உருவாவதற்கு, பூமி, சூரியன், அண்ட வெளி, சூப்பர் நோவா எல்லாமே உருவாகுவதற்கு அடிப்படை.

ஆனால் nonbaryonic dark matter தான் இந்த உலகில் 82% சதவீதகம் நிறைந்திருக்கிறது. இவை வெப்பம் கொள்ள விட்டாலும் இவற்றுக்கும் மாஸ் இருக்கிறது. சார்புநிலைத் தத்துவத்தின் படி மாஸ் என்பது தான் gravityக்கு அடிப்படை. ஆகவே இந்த dark matter என்பது இந்தப் பிரபஞ்சம் இயங்குவதற்கு மிக அவசியமானதாகுகிறது.

பெருவெடிப்பு(big bang) என்பதை விளக்குவதற்கு இந்த dark matter என்பது மிக அவசியமானதாகும், பல விளக்க முடியாத விஷயங்களை விளக்குவதற்காக இந்த dark matterஐ விஞ்ஞானிகள் உபயோகித்துக் கொண்டார்கள்.

ஆனால் பல காலம் இந்த dark matter இருப்பதை விஞ்ஞானிகளால் நிரூபிக்கவே முடியவில்லை. வெளிச்சம் பிரதிபலிக்காமல், வெப்பம் இல்லாத பொருள்களை உணர்வது கடவுளை உணர்வது போல இருக்கிறது என்று தெரியும் ஆனால் நிரூபிக்க முடியாது. ஆனால் கடைசியாக 2003ம் வருடம் விஞ்ஞானிகள் dark matter இருப்பதை விஞ்ஞானிகள் நிரூபித்து உள்ளார்கள்.

இன்று சராசரியான எல்லா மனிதர்களும் இறைவனை நம்புகிறார்கள், இறைவனே இந்த உலகை ஆட்டுவிப்பதாகவும் நம்புகிறார்கள். மனிதன் என்பவன் கடவுளின் படைப்பு என்றும் கடவுளே மனிதர்களை ஆட்டுவிப்பதாகவும் நம்புகிறார்கள்.

மைக்ரோ ஸ்கோப்பில் பார்த்தால் கூட தெரியாத பொருள்கள் நம்மிடையே இருக்கிறது. பேக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளை விட பல கோடி மடங்கு சிறிய பொருள்கள் இவை. இந்த பொருள்களைப் பற்றி நாம் கவலை கொள்கிறோமா? இல்லை தெரிந்து கொள்ள தான் முயற்சிக்கிறோமா?

இந்த பிரபஞ்சத்தில் நாமும் இந்தப் பொருள்களைப் போலத்தான் இருக்கிறோம். insignificant மனிதர்கள் நாம். அதனை உணர்ந்து எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்று அகம்பாவம் கொண்டு நம்மை நாமே அழித்துக் கொள்வதால் இந்த பிரபஞ்சத்தில் ஒரு மாற்றமும் வரப் போவதில்லை. இந்த பூமியில் கூட ஒரு மாற்றமும் வராது.

இதனை உணர்ந்து மனிதன் நடந்து கொண்டால் நல்லது. இல்லையெனிலும் ஒன்றும் இல்லை இந்த பிரபஞ்சம் இருக்கும் இந்த பூமியும் இருக்கும் மனிதர்கள் நாம் இருக்க மாட்டோம் அவ்வளவே.

Thursday, December 07, 2006

செவ்வாய் கிரகத்தில் உயிர்??!!

செவ்வாய் கிரகத்தில் உயிர் இருந்திருக்கலாம் இருக்கலாம் என்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள்.

விஞ்ஞான வளர்ச்சி பெற்ற நாளில் இருந்தே செவ்வாய் கிரகம் அறிவியல் வல்லுனர்களின் கவனத்தை ஈர்த்து வந்துள்ளது. பூமி போலவே இதற்கும் பல குண நலன்கள் இருப்பது இதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. பல காலங்கள் வரை செவ்வாயில் உயிர் இனங்கள் கண்டிப்பாக வாழ்ந்து வருகிறது என்று பல விஞ்ஞானிகள் கருதி வந்தனர்.

இதன் அடிப்படையில் மிகப் பிரபலமாக பல நாவல்களும் படங்களும் கூட வெளி வந்துள்ளன. வார் ஆப் தி வோர்ல்ட்ஸ்(war of the worlds) என்பது உட்பட பல பிரபலமான படைப்புகள் இதில் அடங்கும்.

கீழே mars attacks என்ற படத்தின் காட்சிகளைக் காணுங்கள்.



Evolution படி பூமியில் முதன் முதலில் உயிர் தோன்றுவதற்கு இருந்த சாத்தியக் கூறுகள் மிக மிக குறைவானது என்று அறிந்த பிறகு விஞ்ஞானிகளில் சிலர் செவ்வாய் போன்ற வேற்று கிரகங்களில் இருந்து உயிர் பூமிக்கு வந்திருக்கலாம் என்று கூட சொல்லத் துவங்கினர். இன்றும் கூட இது ஒரு மிகப் பெரிய விவாதத்திற்கு உரிய விஷயமாக பேசப் படுகிறது.

http://en.wikipedia.org/wiki/Origin_of_life#.22Primitive.22_extraterrestrial_life

ஆனால் அறிவியல் வளர்ந்து செவ்வாய் பற்றிய நாம் மேலும் அறிய அறிய செவ்வாயில் உயிர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவாகவே இருக்கிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க இந்த விவாதங்கள் conspiracy theory என்ற அளவில் ஒதுக்கி வைக்கப்பட்டது.

ஆனால் இதைப் பற்றிய ஆர்வம் முற்றிலுமாக குன்றி விடவில்லை. அந்த சிகப்பு நிற கிரகத்தின் மேல் எப்பொழுதுமே ஒரு ஆர்வம் இருந்து கொண்டே தான் இருக்கிறது.

நாசாவுக்கு இருந்த இந்த ஆர்வத்தில் நாசா Path finder(வழி தேடி) என்ற விண்கலத்தை 2003 ஆண்டு விண்வெளிக்கு அனுப்பி வைத்தது(உலகமெல்லாம் பசி பட்டினி மனுஷன் சாகறான் இருந்தாலும் இந்த அமெரிக்காவுக்கு செவ்வாயில என்ன இருக்குதுன்னு தான் முக்கியமா போச்சு அந்தக் காசில் உலகில் வறுமை தீர்க்க உபயோகப்படுத்தலாம். ஹீம் பூனைக்கு யார் மணி கட்டறது?).

இந்த விண்கலம் முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு செவ்வாய் பற்றிய செய்திகளை நமக்கு தெரிவித்து வருகிறது.

கடந்த வாரத்தில் செவ்வாயில் உயிர் இருந்திருப்பதற்கான சாத்தியக்கூறுகள் கொண்ட தகவல்களை Path finder(வழி தேடி) விண்கலம் நமக்கு அனுப்பி உள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களைப் பார்த்தீர்களானால்





இந்தப் படங்களில் இருந்து செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இன்னும் இருப்பதற்கான அறிகுறிகள் தென்படுதாக விஞ்ஞானிகள் கருத்து தெரிவிக்கிறார்கள் மேலும் நுண் உயிரினங்கள் இருப்பதற்கான அறிகுறிகளும் தென்படுவதாக சொல்கிறார்கள்.

இது மேலும் பல கேள்விகளை எழுப்பி உள்ளது. பூமியில் இருக்கும் உயிர் வேறு கிரகத்தைச் சேர்ந்தது போன்ற பல கருத்துக்களை அப்படியும் இருக்குமோ என்று மீண்டும் யோசிக்க வைத்துள்ளது.

Friday, December 01, 2006

அறிவியல் ஆன்மீகம் 10 டினோசர் பாடம்

டினோசர் என்றால் இன்று நமக்கு ஞாபகம் வருவது ஜூராஸிக் பார்க் திரைப்படங்கள் மட்டுமே. மேலும் நம்முடைய பொதுவாக அவை மற்ற மிருகங்களைப் போலவே ஐந்தறிவு மட்டுமே கொண்டவை, சிந்திக்கும் திறம் அற்றவை என்று நம்புகிறோம்.

6 கோடியே அறுபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்னால் அழிந்து போன டினோசர்கள் சிந்திக்கும் திறன் கொண்டவையா என்பதை எல்லாம் ஆராய்ந்து அறிவது மிகக் கடினமான செயலாகும். ஆகவே இது குறித்து பல வேறு கருத்துக்கள் விஞ்ஞானிகளிடையே நிழவி வருகின்றன.

ஆனால் டினோசர்களைப் பற்றி எல்லோரும் ஒப்புக் கொள்ளக் கூடிய விஷயம் என்னவெனில் டினோசர்கள் இருந்த காலகட்டத்தில் டினோசர்கள் தான் உணவு சங்கிலியின் உச்சத்தில்(top of the food chain)இருந்தன.

அது என்ன உணவு சங்கிலி?

இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் ஒரு உணவு உட்கொள்வதில் ஒரு சங்கிலியால் பிணைக்கப் பட்டுள்ளது போலுள்ளார்கள். உதாரணத்திற்கு பல்லிகள் சின்னச் சின்னப் பூச்சிகளை சாப்பிடுகின்றன. அதே போல பல்லிகளை பாம்புகள் சாப்பிடுகின்றன. பாம்புகளை பருந்துகள் சாப்பிடுகின்றன. பல்லி என்பது பூச்சிகளை விட உணவுச் சங்கிலியில் மேலே இருக்கின்றன. பாம்புகள் பல்லிகளை விட உணவுச் சங்கிலியில் மேலே இருக்கின்றன. பருந்துகள் உணவுச் சங்கிலியில் பாம்புகளை விட மேலே இருக்கின்றன.

இதே போல பல உணவுச் சங்கிலிகள் இந்த உலகில் இருக்கின்றன. இந்த உணவுச் சங்கிலியில் ஒரு சமயத்தில் எந்த ஒரு உயிரினம் எல்லா உயிரினங்களுக்கும் மேலாக இருக்கிறதோ அதுவே உணவுச் சங்கிலியின் உச்சத்தில்(Top of the food chain)இருக்கிறது என்று அர்த்தம்.

இன்று மனிதன் தான் உணவுச் சங்கிலியின் உச்சத்தில்(top of the food chain) இருக்கிறான். டினோசர்கள் இருந்த காலகட்டத்தில் அவையே உணவுச் சங்கிலியின் உச்சத்தில்(top of the food chain) இருந்தது.

அதாவது இன்னொரு வகையில் சொல்ல வேண்டுமெனில் டினோசர்கள் தான் அவை இருந்த காலகட்டத்தில் இந்த உலகில் இருந்த மிக ஆற்றல் மிகுந்த(dominating) மிருகம்.

மனிதர்களுக்கும் டினோசர்களுக்கும் உள்ள ஒற்றுமை இதுவே. இரு விலங்குகளுமே அவை இருந்த காலகட்டத்தில் மிகுந்த ஆற்றல் வாய்ந்த மிருகங்கள்.

இப்படி இருந்த டினோசர்கள் முற்றிலுமாக அழிந்து போய் மனிதர்களாகிய நமக்கு சில பாடங்களை விட்டு சென்றிருக்கிறது.

உடனே டினோசர்கள் எதோ முட்டாள்தனமாக அழிந்து விட்டது அல்லது அழிக்கப் பட்டது என்று நாம் கற்பனை செய்து கொள்ள முடியாது. மேலும் நாம் புரிந்து கொள்ள வேண்டியது டினோசர்கள் இந்த பூமியில் கிட்டத்தட்ட 165 மில்லியன் வருடங்கள் அதாவது 16.5 கோடி வருடங்கள் இந்த பூமியில் வலம் வந்து கொண்டிருந்தன. மனிதன் இந்த பூமியில் 60 மில்லியன் வருடங்கள் தான் இருந்திருக்கிறான் அதாவது 6 கோடி வருடங்கள்.(படங்களின் மூலமும் சமிஞ்சைகள் மூலமும் கருத்துக்களை பரிமாறிக் கொள்ளத் துவங்கிய மனிதனின் வயது சுமார் 1 லட்சம் வருடங்கள்( மறுபடியும் இதெல்லாம் evolution என்ற விஞ்ஞானம் கணித்தது மதங்களின் அடிப்படையில் மனிதனின் வயது 6000 ஆண்டுகள் தான்)).

மனிதன் இன்று அழிவுப் பாதையில் செல்வதைப் பார்த்தால் இன்னும் கால் நூற்றாண்டைக் கூட தாண்ட மாட்டோம் என்று நினைக்கிறேன். ஆக நம்மை விட 10 கோடி வருடங்கள் அதிகமாக டினோசர்கள் இந்த பூமியில் இருந்திருக்கின்றன.

ஆக டினோசர்களின் நமக்கு விட்டுச் சென்ற பாடங்கள் மிக முக்கியமானவையே என்று நினைக்கிறேன். அந்தப் பாடங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் முன்னர் அறிய வேண்டியது டினோசர்கள் எப்படி அழிந்தது என்பதைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

இது பற்றியும் இன்று தெளிவான ஒரு விளக்கம் இல்லை. பல வேறுபட்ட கருத்துக்கள் நிழவி வருகின்றன.

இதில் மிக பரவலாகவும், பிரபலமாகவும் உள்ள கருத்து ஒரு விண்கல் இந்த பூமியைத் தாக்கி அதன் மூலம் டினோசர்கள் அழிந்தது என்பது தான். அந்த விண்கல் பூமியைத் தாக்கிய உடன் பூமியில் ஒரு மிகப் பெரிய புகை மண்டலம் எழுந்து இந்த பூமியின் சூரிய வெளிச்சம் நுழைய முடியாதபடி மூடியது என்றும், சூரிய வெளிச்சம் பூமியில் விழாததால் பூமியில் உள்ள தாவரங்கள் அனைத்தும் முதலில் அழிந்தது பின் உயிரினங்கள் ஒவ்வொன்றாக அழிய தொடங்கியது என்பது ஒரு கருத்து.

ஒரு விண்கல் பூமியைத் தாக்கி மனித குலமே அழிந்து போவது போன்று வெளி வந்த deep impact என்ற படம் மிக பிரபலமான படம். அது போன்றும் இன்றும் நிகழலாம் நிகழக் கூடும். இது நிகழ்ந்தால் எப்படி இருக்கும் என்பது மாதிரியான ஒரு வீடியோ கீழே.



இது மிகப் பிரபலமான விளக்கமாக இருந்தாலும் இந்த விளக்கம் முழுக்க ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் சில பிரச்சனைகள் இருக்கிறது.

இதே போல பல கருத்துக்கள் நிழவி வருகின்றன.

திடீரென்று பூமியின் புவியீர்ப்பு விசை அதிகரித்ததால் டினோசர்கள் நகர முடியாமல் அழிந்தது என்பது உட்பட பல கருத்துக்கள் உண்டு. ஆனால் இதுதான் சரி என்று சொல்ல முடியாத வகையில் சில பிரச்சனைகள்.

ஆகவே எப்படி அழிந்தது என்பதை அறுதியிட்டு யாராலும் கூற முடியவில்லை.

ஆனால் டினோசர்களின் அழிவுக்கு இயற்கையே காரணம் அவை ஒன்றுடன் ஒன்று சண்டை போட்டுக் கொண்டு(உணவுக்குத் தவிர) அழிந்து போய் விடவில்லை என்பது திண்மம்.

இங்கே தான் டினோசர்கள் நமக்கு விட்டுச் சென்ற சில பாடங்கள் ஒளிந்து கொண்டிருக்கிறது என்று நம்புகிறேன்.

அவரவர்களின் காலகட்டத்தில் இந்த உலகின் உணவுச் சங்கிலியின் உச்சத்தில் இருந்தது இருப்பது மனிதனும், டினோசர்களும். டினோசர்களின் புத்திசாலித்தனம் குறித்து பல வேறு ஐயப்பாடுகள் நிழவினாலும் பிரபலமான கருத்துக்கள் அவைகளும் புத்திசாலித்தனம் கொண்டிருந்தன என்றே குறிப்பிடுகின்றன(ஜுராஸிக் பார்க் படத்தில் கூட ராப்டர்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொள்ளும் ஆற்றலும், மனிதனையே யோசித்து ஏமாற்றும் ஆற்றலும் கொண்டிருப்பதாக காமித்திருப்பார்கள் ஆனால் இதெல்லாம் எந்த அளவு உண்மை என்பது சர்ச்சைக்குறியதே.)

இப்படி இருந்தாலும் டினோசர்கள் இயற்கையின் அழிவில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.

இன்றும் சுனாமி போன்ற இயற்கை சீரழிவுகளில் இருந்து மனிதனால் சிறிய அளவில் தற்காத்துக் கொள்ள முடிகிறது அவ்வளவே. Global Warming போன்ற தவிர்க்க இயலாத(இன்றைய சூழ்நிலையில் Global Warmingஐ தவிர்க்கவே இயலாது அது ஏற்படும் பாதிப்பின் தாக்கத்தை சற்று மட்டுப்படுத்தலாம் அவ்வளவே) அழிவை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறோம்.

டினோசர்கள் 10 கோடி ஆண்டுகள் நம்மை விட அதிகமாக இந்த பூமியில் இருந்திருக்கிறது. நம் அளவுக்கு கலாச்சாரம், நாகரீகம் போன்றவை அந்த மிருகங்கள் இடையே இருந்ததற்கான அறிகுறிகள் இல்லை, அப்படி இருந்தும் 10 கோடி ஆண்டுகள் முன்னரே நாம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறோமே யார் இதில் புத்திசாலி மிருகம்?

இன்று நாம் செய்து கொண்டிருக்கும் இயற்கைச் சீரழிவுகள் நம்மை டினோசர்களை விட 10 கோடி ஆண்டுகள் முன்னதாக அழித்து விடக் கூடும் என்று இருக்கிறது சூழ்நிலை.

ஆனால் அதற்கு முன்னரே முந்திக் கொண்டு நாம் நமக்குள் இருக்கும் பிரிவினைகளால் ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்ளப் போகிறோமா?

டினோசர்கள் உணவினை விடுத்து வேறு காரணங்களுக்காக வேறு எந்த ஒரு மிருகத்தையோ இல்லை வேறு டினோசர்களையோ கொல்லுவதில்லை. ஆனால் மனிதர்கள் தோலுக்காக மற்ற மிருகங்களையும் முட்டாள்தனங்களால் சக மனிதர்களையும் கொன்று குவித்துக் கொண்டிருக்கிறோம்.

பிற உயிர்களையே ஏன் கொல்ல கூடாது என்று யோசிக்கும் அறிவு படைத்த மனிதன் சக மனிதனையே கொல்லக் காரணியாக இருக்கும் செயல்களுக்கு தெரிந்தும் ஆதரவளிக்கிறான். மனிதன் உண்மையில் டினோசர்களை விட புத்திசாலி என்று சொல்லிக் கொள்ள முடியுமா?

4000 வருட நாகரீகத்தில் மனிதன் தன்னுடைய புத்திசாலித்தனத்தை உபயோகித்து தன்னைத் தானே அழித்துக் கொள்ளக் கூடிய ஒரு சூழ்நிலையை வளர்த்துக் கொண்டிருக்கிறான். இதை விட 10 கோடி வருடங்கள் அதிகமாக இந்த பூமியில் வலம் வந்த டினோசர்கள் புத்திசாலி மிருகங்களாகவே தோன்றுகின்றன.

எனக்கு டினோசர்கள் விட்டுச் சென்ற பாடமாக தோன்றுவது என்னவென்றால் இயற்கை என்பது மிக மிக சக்தி வாய்ந்தது. அதன் ஆற்றல் முன் மனிதன் என்பவனோ இல்லை டினோசர்களோ இல்லை எந்த சக்தியோ எதுவுமே பெரியதில்லை.

இந்த ஆற்றலுக்கும் சக்திக்கும் பெயரிட்டோ இல்லை புஸ்தகங்கள் மூலம் உணர்ந்து கொண்டேன் என்றோ நம்பி அழிந்து போவது முட்டாள்தனம்.

இப்படி செய்வதன் மூலம் ஐந்தறிவு மிருகங்களை விட குறைவான அறிவு கொண்டவர்களாகவே ஆகிறோம்.

Thursday, November 02, 2006

அறிவியலும் ஆன்மீகமும் - 9

Free Image Hosting at www.ImageShack.us

Black Holes(கரும் பள்ளங்கள்) சில வருடங்களுக்கு முன் வெறும் இருக்கலாம் இருக்கக் கூடும் என்றும் சிங்குலாரிட்டி என்ற பிரபஞ்சத் தோற்றத்தின் தொடக்கத்தில் இன்றைய இயற்பியல் விதிகளால் விளக்க முடியாத சில விஷயங்களை விளக்குவதற்காக இயற்பியல் விஞ்ஞானிகளால் தோற்றுவிக்கப் பட்ட ஒன்றாகவே கருதப் பட்டது.

ஆனால் இங்கே மேலே கொடுக்கப் பட்டிருப்பது நாம் இருக்கும் அண்டவெளியான பால் வீதியின் நடுவில் இருக்கும் ஒரு கரும் பள்ளம்(Black Hole). இது மிக சமீபத்திய கண்டுபிடிப்பாகும்.

கரும் பள்ளங்கள் என்பது ஏன் உலகியல்(cosmology) துறையில் ஆர்வமாகவும் முக்கியமானதாக கருதப் படுகிறது என்றால் மீண்டும் சிங்குலாரிட்டியோடு கரும் பள்ளங்களுக்கு இருக்கும் தொடர்பை அறிந்து கொண்டால் தான் முடியும்.

முதலில் கரும் பள்ளங்கள் என்றால் என்ன?

நாம் வானில் காணும் நட்சத்திரங்களில் இருந்து ஒளியும் வெப்பமும் எப்படி வெளிபடுகிறது. நட்சத்திரங்களில் ஹைட்ரஜன் அணு மற்றொரு ஹைட்ரஜன் அணுவுடன் இணைந்து ஹீலியம் அணுவாக மாறும் சமயம் ஒளியும் வெப்பமும் வெளிப்படுகிறது. இதனை அணு சேர்க்கை(fusion - உருக்கு) என்று அழைப்பார்கள்.

இது தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. எல்லா தொடக்கத்திற்கும் ஒரு முடிவு வேண்டும் அல்லவா? அந்த நட்சத்திரத்தில் உள்ள ஹைட்ரஜன் அணுக்கள் எல்லாம் தீர்ந்து போய் விட்டால் என்னவாகும்? நடுத்தர மற்றும் சிறிய அளவிலான நட்சத்திரங்களில் என்னவாகும் என்றால் வெப்பம் இல்லாத ஒரு இடம் சுருங்குவது போல மெதுவாக அதனுடைய சுற்றளவு குறைந்து கொண்டே வந்து அது ஒரு வெள்ளைக் குள்ளன்(White Dwarf) என்ற மிகச் சிறிய அளவாகி விடும்.

இது நம் சூரியனுக்கும் பொருந்தும். சுமார் ஐந்து பில்லியன் வருடங்கள் கழிந்து நம் சூரியனும் ஒரு வெள்ளைக் குள்ளனாக மாறி விடும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்.

ஆனால் சூரியனை விட பல மடங்கு பெரிய நட்சத்திரங்கள் அதனுடைய எரி பொருள் தீர்ந்து போகும் சமயம் இவை வெள்ளைக் குள்ளாகாமல் கரும் பள்ளங்களாகி விடுகின்றன.

இது எப்படி நடக்கிறது என்றால் சூரியனை விட பல மடங்கு பெரிய நட்சத்திரத்தில் அதனுடைய எரி பொருளான ஹைட்ரஜன் தீர்ந்து போய் விட்டது என்று வைத்துக் கொள்வோம். அந்த நட்சத்திரமும் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி அதனுடைய சுற்றளவு குறைந்து கொண்டே வரும். இது போன்ற மிகப் பெரிய நட்சத்திரங்களின் புவியீர்ப்பு விசை( பூமியில் உள்ளது தான் புவியீர்ப்பு விசை gravity என்பது ஈர்ப்பு விசைதான் ஆனால் புவியீர்ப்பு விசை என்பது கொஞ்சம் புரியும் படி இருப்பதால் அதே வார்த்தை உபயோகப் படுத்தப் படுகிறது இங்கு புவியீர்ப்பு என்பது gravity என்று அறிந்து கொள்ளுங்கள்) என்பது மிக அதிகமாக இருக்கும். ஆகவே இது சுருங்கிக் கொண்டே வர அதன் மையத்தில் இருக்கும் புவியீர்ப்பு விசை அதிகரித்துக் கொண்டே வரும். ஒரு சமயத்தில் அதனுடைய புவியீர்ப்பு விசை என்பது மிக அதிகமாகி வெளிச்சத்தின் வேகத்தில் கூட வெளியே செல்ல இயலாத அளவுக்கு அதனுடைய புவியீர்ப்பு விசை அதிகரித்து விடும்.

இதனை ஒரு மிக எளிமையான ஒரு உதாரணத்துடன் விளக்க வேண்டும் என்றால் நாம் இந்த பூமியில் ஒட்டிக் கொண்டு இருப்பது புவியீர்ப்பு விசையால் தான். சந்திரனில் ஏன் மிதக்கிறோம் என்றால் அங்கு புவியீர்ப்பு விசை என்பது குறைவாக இருப்பதால். நாம் இருந்து ஒரு கல்லை மேலே விட்டு எறிந்தால் என்னாவாகிறது அது சற்று தூரம் சென்று திரும்பி வந்து விடுகிறது. அதே கல்லை சந்திரனில் அதே அளவு சக்தியுடன் தூக்கி எறிந்தால் என்னவாகும் அது இங்கே எந்த அளவு மேலே சென்றதோ அதனை விட கொஞ்சம் அதிக தூரம் மேலே சென்று திரும்பி வந்து விடும்.

ஒரு துப்பாக்கியால் மேல் நோக்கி சுட்டால் என்னவாகும் அது கல்லை விட அதிக தூரம் மேலே செல்லும் ஆனால் திரும்பி வந்து விடும். ஆக வேகம் அதிகரிக்க அதிகரிக்க மேலே மேலே செல்ல முடிகிறது இல்லையா? ஆக ஒரு குறிப்பிட்ட அளவு வேகத்தில் சென்றால் நாம் இந்த பூமியின் ஆகாய மண்டலத்தை(atmosphere) தாண்டி சென்று விட முடியும். இந்த வேகம் பூமியில் அதிகமாக இருக்கும் சந்திரனில் கம்மியாக இருக்கும் புவியீர்ப்பு விசை வேறுபாட்டால். இந்த வேகத்தை escape velocity என்று அழைப்பார்கள்.

இப்பொழுது மெதுவாக இறந்து கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரத்தில் அதன் சுற்றளவு குறைவதால் புவியீர்ப்பு விசை அதிகமாகிக் கொண்டே வந்து ஒரு கட்டத்தில் அந்த புவியீர்ப்பு விசையில் வெளிச்சத்தின் வேகத்தில் ஒரு பொருள் வெளியேறினால் கூட வெளியேற முடியாத அளவு புவியீர்ப்பு விசை அதிகரித்திருக்கும்.

மேலும் நமக்கு வெளிச்சத்தை விட எந்த ஒரு பொருளும் வேகமாக பயணிக்க முடியாது என்று தெரியும் என்பதால் வெப்பம் வெளிச்சம் என்று எதுவுமே வெளியேற முடியாத நிலையில் அது ஒரு கரும் பள்ளம் ஆகி விடுகிறது.

ஏன் கரும் பள்ளம் என்றால் அதனை யாருமே பார்க்க இயலாது என்பதால் தான். ஒரு பொருளை நாம் காண வேண்டும் என்றால் அதில் இருந்து வெளிச்சம் வெளியாக வேண்டும் அல்லது வெளிச்சம் அதிலிருந்து பிரதிபலிக்க(reflect) வேண்டும். ஆனால் இந்த கரும் பள்ளத்திலிருந்து வெளிச்சம் வெளியாக முடியாதது மட்டும் அல்ல. அதன் மேல் படிந்த வெளிச்சம் கூட அதில் இருந்து வெளிப்படாது இல்லை பிரதிபலிக்காது.

ஏன் இந்த கரும் பள்ளங்கள் இவ்வளவு ஆர்வத்துடன் விஞ்ஞானிகளால் ஆராயப் படுகிறது என்றால் இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்தின் போது இருந்த ஒரு சூழ்நிலை இந்தப் பிரபஞ்சத்திலேயே கரும் பள்ளங்களில் மட்டுமே தென்படும் அது போன்ற சூழ்நிலைகள் இருக்கும்.

கரும் பள்ளங்களின் ஹாகின்ஸ் அவர்களின் ஆராய்ச்சி இதன் மேல் மிகப் பெரிய ஒரு ஆர்வத்தை உண்டாக்கியது. சில ஆராய்ச்சியாளர்கள் நம் பிரபஞ்சமே ஒரு பெரிய கரும் பள்ளத்திற்குள் இருப்பதாக கூட நினைத்தார்கள். அந்த அளவு இது நம்முடைய பிரபஞ்சத் தோற்றத்துடன் சம்பந்தம் இருக்கிறது.

எப்படி சம்பந்தம் இருக்கிறது எந்த அளவில் இருக்கிறது என்பதெல்லாம் மிக விஞ்ஞானப் பூர்வமாகி விடும்.

ஆனால் நம் பால் வெளியின் நடுவில் ஒரு கரும் பள்ளம் இருக்கிறது என்பதும் எல்லா அண்ட வெளிகளுக்கு(galaxy) நடுவிலும் ஒரு கரும் பள்ளம் இருக்கலாம் என்பதும் இதனுடைய முக்கியத்துவத்தை அதிகரித்திருக்கிறது.

ஒரு வகையில் ஆன்மீகமும் ஒரு கால கட்டத்தில் அறிவியல் விளக்க முயன்ற சில விஷயங்களை விளக்க முயற்சித்திருக்கிறது. பரிணாம வளர்ச்சி, பிரபஞ்சத் தோற்றம் போன்றவைகளை கடவுள் தோற்றுவித்தார் என்றும் எப்படி தோற்றுவித்தார் என்றும் விளக்கி இருக்கிறது.

எல்லா மதங்களிலும் இது போன்ற விளக்கங்கள் உண்டு. மனிதன் அறிவுக்கு எட்டாததை விளக்க எப்பொழுதுமே மதங்கள் விளக்க முயற்சித்திருக்கிறது. அந்த விளக்கங்கள் எல்லாமே நம் கண்களுக்கு தெரிந்தது, சூரியன் நட்சத்திரங்கள் இவற்றை மட்டுமே விளக்க முயற்சித்திருக்கிறது.

பதில் தெரியாத கேள்விகள் எழுந்த சமயங்களில் எல்லாம் கடவுளின் வேலை மனிதனின் அறிவுக்கு எட்டாது என்று மூடி மறைக்கவே முயன்றிருக்கிறது.

இன்றைய அறிவியல் வளர்ச்சி நம் அறிவை அதிகரித்திருக்கிறது பிரபஞ்சத் தோற்றம் என்பது 6 நாட்களில் ஏற்படவில்லை. இது பல காலம் எடுத்திருக்கிறது என்பதை நமக்கு சொல்கிறது. கடவுள் இல்லை என்று அறிவியல் விளக்கவில்லை(இது வரை இல்லை ;-))). ஆனால் மனிதனின் கேள்விகளுக்கு பதிலளிக்கவே முயற்சிக்கிறது. பதில் தெரியாத கேள்விகளுக்கு கடவுள் பின்னால் சென்று ஓடி ஒளிந்து கொள்ளாமல் தெரியவில்லை என்று நேர்மையாகவும், இன்னும் முழுமையாக உணர கடவுள் வழி காட்டவில்லை என்று கடவுள் இருப்பதை ஊர்ஜிதம் செய்து கொண்டு இருக்கிறது.

இது எனக்குத் தான் எல்லாம் தெரியும் நான் சொல்வதை எதிர்த்து கேள்வி கேட்கக் கூடாது என்ற அகங்கார மதங்களை விட நன்மையானதாகவே தோன்றுகிறது.

Tuesday, October 17, 2006

ஆன்மீகமும் அறிவியலும் - 8

கடவுள், சாமி, இறைவன் இவர்களைப் பற்றிய நம்பிக்கைகளின் வாழ்க்கையில் மாறிக் கொண்டே இருக்கும் ஒன்று. அவன் இன்றி அணுவும் அசையாது என்ற நம்பிக்கையில் இருந்து இன்று Fundamental forces இன்றி அணு கூட இருக்காது என்ற Fact வரை பல மாற்றங்கள். இந்த மாற்றங்கள் அறிவியல் துணை கொண்டு எப்படி மாறியது என்பது தான் இந்தப் பார்வை.

சின்ன வயதில் கையைக் குவித்து இது தான் சாமி இதைக் கும்பிட்டால் நல்லாப் படிப்பு வரும் என்று எனக்கு மட்டுமில்லை பலருக்கும் ஆன்மீகத்தின் அறிமுகம் தங்களுடைய தாயாரின் மூலமே கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். சாமின்னா என்ன என்ற கேள்வியை முதன் முதலில் சொல்லிக் கொடுக்கும் கேட்டேனா என்று தெரியவில்லை. எப்பொழுது கேட்டேன் என்றும் ஞாபகம் இல்லை. ஆனால் வளர வளர புராணக் கதைகள் மூலமாக பல வேறு கடவுள்கள் அறிமுகமானார்கள். பிரம்மா படைப்புக் கடவுள், விஷ்ணு காத்தல், சிவன் அழித்தல் இவைதான் இவர்களது தொழில். இதில் விஷ்ணுதான் கூலான கடவுள், ராமாயணம் டீவியில் வந்ததால் இருக்கலாம் இல்லை ராமர், கிருஷ்ணர் என்று மனிதப் பிறவி எடுத்ததால் இருக்கலாம் ஏனென்று தெரியவில்லை.

இந்த காலகட்டத்தில் இறைவன் என்பவர்தான் எல்லாம். உலகில் நடைபெறும் அனைத்திற்கும் காரணம் கடவுள்தான் என்பது தான் நம்பிக்கையாக இருந்தது.

பின் கொஞ்சம் கொஞ்சமாக வேற்று மதக் கடவுள்களும் அறிமுகமானார்கள். இயேசு, அல்லா என்று அவர்களைப் பற்றியும் தெரிய வந்தது. கிறிஸ்து என்பவர் இந்த உலகில் வலம் வந்தவர் இறைவனின் புதல்வர் மனிதர்களுக்காக பல துன்பங்களைத் தாங்கியவர் என்றெல்லாம் அறிய முடிந்தது.

சிறு வயதில் எங்கள் பள்ளியில் மாரல் ஸ்டடீஸ் என்ற ஒரு பாடம் உண்டு அதில் ஒரு படம் ஒன்று வரைந்திருப்பார்கள் பல நதிகள் ஒரே கடலில் சென்று கலப்பதைப் போல காட்டி இருப்பார்கள். அதில் ஒவ்வொரு நதிக்கும் இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம் என்று பெயர் சூட்டி கடலுக்கு GOD என்றும் பெயர் சூட்டி இருப்பார்கள். என் மனதில் அந்தப் படம் அப்படியே பதிந்து விட்டது.

சிறு வயதில் எல்லா மதத்தவரும் அதே போலத் தான் எண்ணி இருப்பார்கள் என்று நினைத்திருந்த சமயம் உண்டு.

ஆனால் நாளாக நாளாக விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இந்து முஸ்லீம் கலவரம். கிறிஸ்துவர்கள் ஊர்வலத்தில் இந்துக் கலவரம் என்று செய்திகள் கேட்டு கொஞ்சம் குழம்பிப் போனதுண்டு.

பின்பு தான் அறிவியல் உலகம் என்பது அறிமுகமானது. குரங்கில் இருந்து மனிதன் வந்தான் போன்ற அறிவியல் பாடங்கள் அது எப்படி நடந்திருக்கலாம் என்று விளக்கிச் சொன்னது வேறு விதமான சில நம்பிக்கைகளை தூண்டி விட்டது.

அறிவியல் என்பது நேர்மையானதாக தோன்றத் துவங்கியது. வெறும் நம்பிக்கைகளின் அடிப்படையில் அறிவியல் என்பது இயங்கவில்லை என்பதும் நம்மைச் சுற்றி உள்ள விஷயங்களை என் அறிவுக்கு புரியும் வகையில் விளக்கியது மத நம்பிக்கைகள் கடவுள் நம்பிக்கை மேல் ஐயம் கொள்ள வைத்தது.

சூரியன் என்பது அணு சேர்க்கை(Fission) என்ற தத்துவத்தின் படி இயங்குகிறது என்று அறிவியல் பூர்வமாக எனக்கு விளங்கிய அதே நேரத்தில் சூரியன் என்ற ஒரு கதாபாத்திரம் கதைகளில் வருகிறதே அது அப்படியானால் யார் என்று குழம்பி மத நம்பிக்கைகளை சந்தேகக் கண்ணுடன் பார்க்க வைத்தது.

ஆனால் இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தையும் அறிவியலால் விளக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாததால் கடவுள் மேல் இருந்த நம்பிக்கைகள் முழுவதுமாக விட்டுப் போய் விடவில்லை.

ஆனால் இந்த காலகட்டத்தில் இறைவன் என்பவர் எல்லாமே என்ற நம்பிக்கைகள் உடையத் தொடங்கிய காலம் இது. ஆனால் இன்னும் முருகன், ராமர் என்ற அளவிலேயே கடவுளைப் பார்த்துக் கொண்டிருந்த சமயம் இது. இந்த சமயத்திலும் இறைவன் என்பவருக்கு உருவம் என்பது தேவையானதாகவே இருந்திருக்கிறது.

ஆனால் இதே சமயத்தில் பொது அறிவு என்பது வளரத் துவங்கியது. அறிவியல், சரித்திரம் போன்ற அறிவுகள் வளர ஆரம்பித்தன.

அப்பொழுது உலகில் பல பிரச்சனைகளுக்கு காரணம் மதமே என்பது அறிந்து கொண்ட பொழுது மேலும் பல கேள்விகள் எழுந்தன.

சரித்திரம் இந்தியாவும் பாகிஸ்தானும் 1947க்கு முன் ஒரே பெயரால் ஒரே நிலப் பரப்பாக ஒரே பெயரில் அழைக்கப் பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் இன்று ஒரு நாடு மற்றொரு நாட்டை தன் ஜன்ம விரோதியாக கருதுகிறது. ஏன் என்று பார்த்தால் மதம்.

இப்படி மனிதனின் வரலாறு என்பது தெரியத் தெரிய மதம் என்பதே மனிதனின் பல பிரச்சனைகளுக்கும் காரணமாக அமைந்திருப்பதைக் காண முடிகிறது.

இந்த சமயத்தில் தான் அறிவியல் என்பது மேலும் பல விஷயங்களை கற்றுத் தர ஆரம்பித்தது. ஒரு விதையில் இருந்து ஒரு மரம் உருவாது செல் என்பது இரட்டிப்பதன் மூலம் என்று கற்றுத் தர இது போன்ற பல விந்தையாக விஷயங்களுக்கு விளக்கங்கள் கிடைக்க ஆரம்பித்தன.

மேலும் இதே சமயத்தில் அறிவியல் என்பது நேர்மையானது மட்டும் அல்ல, அடக்கமானது என்பதும் புரிய ஆரம்பித்தது. மதம் போன்று குற்றம் குறைகளே கிடையாது நீ இதனை நம்பு இல்லையா விட்டு விடு என்றெல்லாம் அகங்காரமாக நடந்து கொள்ளவில்லை. மேலும் எனக்கு எல்லாம் தெரியும் என்ற அகந்தையும் குறைவாகவே காணப்பட்டது.

மேலும் மனித குல அழிவு என்று ஒன்று ஏற்படுமானால் அது மதம் என்ற அமைப்பின் காரணமாகவே இருக்கும் என்ற நிலை இருக்கும் பொழுது இதைத் தவிர்க்க மதம் என்ற அமைப்பை எதிர்ப்பதே சரியானதாக தோன்றுகிறது.

இதில் கடவுள் நம்பிக்கை என்பது எங்கே இருக்கிறது என்று பார்த்தால் அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்துமே கடவுள் என்ற ஒருவர் இருக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டுவதாகவே எனக்குத் தோன்றுகிறது.

ஆனால் அது மதம் சார்ந்த இறை நம்பிக்கையாக இருக்காது. குரானோ, பைபிளோ இல்லை இந்து மத நூல்களோ காட்டும் நம்பிக்கை சார்ந்த இறையாக இல்லாமல் அறிவியல் காண்பிக்கும் அறிவு சார்ந்த இறைவன் முழுமையானதாகவும் சச்சரவுகள் குறைவானதாகவும் தோன்றுகிறது.

ஏனெனில் அறிவியல் என்பது அனைவருக்கும் பொதுவானது. குல்லா போட்டுக் கொள்ள வேண்டும், பட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் நம்பிக்கைகளை வளர்ப்பதில்லை.

தேவாரம் பாடப் படும் சமயம் கவியின் சொற் சுவையும், கற்பனைச் சுவையுமே மயக்குகிறதே தவிர அது குறிக்கும் இறைவன் என் அறிவை மயக்குவதில்லை.

Sunday, October 08, 2006

இயற்பியல் நோபல் பெருவெடிப்பு கண்டுபிடிப்புகளுக்காக

பெருவெடிப்பு(Big Bang) பற்றிய கண்டுபிடிப்புகளுக்காக ஜான் சி. மாதர்(John C. Mather) மற்றும் ஜார்ஜ் எப். சுமூட்(George F. Smoot) என்ற இருவருக்கும் இயற்பியலில் நோபல் பரிசு வழங்கப் பட்டுள்ளது. பிண்புல கதிர்வீச்சு(Back ground radiation எதோ தெரிந்த அளவில் மொழி பெயர்த்துள்ளேன்) பெரு வெடிப்பின் மூலமே இந்தப் பிரபஞ்சம் உருவானது என்பதற்கு அத்தாட்சியாக பல விஞ்ஞானிகளால் இன்று சொல்லப் படுகிறது.

இதில் ஆராய்ச்சி செய்ததற்காகவும் கரும்பொருள்(Black body) என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்திருப்பதற்க்காகவும் இவர்களுக்கு இந்த நோபல் பரிசு கொடுக்கப் பட்டிருக்கிறது.

இன்று பலர் பெரு வெடிப்பு குறித்து பல சந்தேகங்கள் நாம் சரியான திசையில் தான் சென்று கொண்டிருக்கிறோமா என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்கும் சமய்த்தில் இந்த நோபல் பரிசு கிடைத்திருக்கிறது.

Friday, October 06, 2006

அறிவியலும் ஆன்மீகமும் - 7

காற்றுள்ளே போதே தூற்றிக் கொள் என்பது போல evolution பற்றி சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் பொழுதே இன்னொரு வகையான evolution பற்றியும் சொல்லி விடுவது தானே புத்திசாலித்தனம்.

பூமியில் உயிர் எப்படி உருவானது என்பதைப் பற்றி ஆராயும் சமயம் பூமியே எப்படி உருவானது என்பதை அறிவியல் பூர்வமாக தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.

பூமி எப்படி உருவானது என்பதை தெரிந்து கொள்ளும் முன் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா பொருள்களுக்கும் அடிப்படையான அணு(atom) என்பது எப்படி உருவானது எந்த சமயத்தில் உருவானது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த அணு உருவாகி இருக்கா விட்டால் எதுவுமே உருவாகி பூமி, சூரியன், பால்வெளி, காக்கா, குருவி, நான் எதுவுமே உருவாகி இருக்காது.

அணு கூட உருவாக இருக்க வேண்டுமா என்றால், அணுவுக்குள் இருக்கும் electron, proton, neutron கூட உருவானதுதான் உருமாற்றப்பட்டதுதான்.

கிரிக்கெட் மாட்சில் அடிக்கடி டிரிங்க்ஸ் பிரேக் எடுக்கும் சமயம் ஆட்டத்தை நிறுத்தி வைப்பதைப் போல நாமும் பெருவெடிப்பு(Big bang) நடந்து முடிந்த கொஞ்ச கொஞ்ச நேர இடைவெளியில் டிரிங்க்ஸ் பிரேக் எடுத்துக் கொண்டு அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்க்க வேண்டும்.

முதல் டிரிங்க்ஸ் பிரேக் பெரு வெடிப்பு நடந்து 10^-43 செகண்டில் எடுக்க வேண்டும் இதற்கு முன்னால் என்ன நடந்திருக்கும் என்பதை யாராலும் விளக்க முடியவில்லை. ஆக இந்த சமயத்தில் பிரபஞ்சம் எப்படி இருந்தது என்றால் இன்று நாம் four fundamental forces ஆக கருதும் அனைத்தும் ஒரே force ஆக இருந்தது(
four fundamental forces பற்றி இங்கு சொல்ல முயற்சித்திருக்கிறேன்).

அடுத்த pit stop பெரு வெடிப்பு நடந்து முடிந்த 10^2 செகண்டில் எடுக்கப் போகிறோம். இந்த நேரத்தில்(பெரு வெடிப்பு நடந்து 10^-6 to 10^-2 செகண்ட்ஸீக்குள்) தான் protons மற்றும் நியூட்டிரான்ஸ்கள் உருவாகுகிறது. எப்படி உருவாகுகிறது என்பதை அறிய
இங்கே செல்லுங்கள்.

அடுத்து கொஞ்சம் நேரம் கழித்து அதாவது பெருவெடிப்பு நடந்து 3 நிமிடங்கள் கழித்து என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். முதல் முறையாக fundamental force பிரிந்து strong nuclear force தனி force ஆக உருவெடுக்கிறது. இந்த strong nuclear force தனித் தனியாக சுற்றிக் கொண்டிருக்கும் protons மற்றும் neutrons ஆகியவற்றை இணைத்து முதல் முறையாக ஒவ்வொரு அணுவிலும் காணப்படும் nucleusஐ உருவாக்குகிறது. இந்த சமயத்தில் தான் hydrogen மற்றும் helium nuclei உருவாகுகிறது.

பெரு வெடிப்பு நடந்து முடிந்த இந்த மூன்று நிமிடங்கள் தான் மிக முக்கியம் வாய்ந்ததாக சொல்லப் படுகிறது. இந்த மூன்று நிமிடங்களில் என்ன நடந்தது என்பதை மட்டும் விளக்க தனிப் புத்தகங்களே உண்டு.

சரி அந்த மூன்று நிமிடங்கள் கழித்து பல வருடங்களுக்கு strong nuclear force ஒன்று மட்டும் தான் தனிக் காட்டு ராஜா. இது அடுத்த 380,000 வருடங்களுக்குத் தொடர்கிறது. இந்த சமயத்தில் பிரபஞ்சம் என்பது atomic nuceli, electrons மற்றும் photons போன்ற நம் கண்ணுக்குப் புலப்படாத பல விஷயங்களை உள்ளடக்கியதாக இருந்தது அவ்வளவே.

சரி 380,000 ஆண்டுகளுக்கு பிறகு என்ன ஆனது. இந்த சமயத்தில் இந்தப் பிரபஞ்சம் தேவையான அளவு குளிர்ந்து விட்டதால். fundamental force என்பது மேலும் பிரிகிறது. இப்பொழுது electro magenetic force effectக்கு வருகிறது. இது என்ன செய்கிறது என்றால் தனித் தனி nucleus மற்றும் electrons ஆக இருந்ததை ஒன்று திரட்டி முதல் அணு உருவாகச் செய்கிறது.

அதாவது முதல் அணு என்பது உருவானது இந்த பிரபஞ்சம் என்பது தொடங்கி 380,000 வருடங்கள் கழித்துதான்.

இந்த அணுக்களாலும் எல்லா வகையான பொருள்களும் உருவாகவில்லை. hydrogen மற்றும் helium அணுக்கள் மட்டுமே உருவாகுகிறது.

தங்கம், இரும்பு போன்ற தாதுக்களுக்கான அணுக்கள் உருவாக இன்னும் பல பில்லியன் வருடங்கள் பிடித்தன.

சரி அடுத்த pit stop அல்லது டிரிங்க்ஸ் பிரேக் எடுக்க வேண்டிய நேரம் பெரு வெடிப்பு நடந்து 500,000 வருடங்கள் கழித்து இந்த சமயத்தில் தான் நட்சத்திரங்கள் உருவாகின. இந்த நட்சத்திரங்கள் உருவாக காரணமாக strong nuclear, weak nuclear மற்றும் electro magnetic forces என்பது இப்பொழுது நாம் தனி தனியாக அடையாளம் காண முடிந்தது.

இதே சமயத்தில் தான் கடைசியாக gravitational force என்பது கணக்கில் வந்தது.

சரி பூமி மற்றும் நம் சூரிய மண்டலம் எப்பொழுது உருவானது என்றால் பெருவெடிப்பு நடந்து 8 பில்லியன் ஆண்டுகள் கழித்து.இந்த சமயத்தில் தான் சூரியன் உருவானது. அதனுடைய gravitional pullலால் ஈர்க்கப்பட்டு அதனைச் சுற்றி கிரகங்கள் உருவானது எல்லாமே.

ஆக பூமி ஏழு நாளிலோ இல்லை 6 நாளிலோ இல்லை முட்டைக்குள் இருந்தோ உருவாக்கப்படவில்லை.

பூமி என்பது பிரபஞ்சம் தோன்றி 8 பில்லியன் ஆண்டுகள் கழித்து உருவானது.

இவை நிரூபிப்பது ஒன்றுதான் என் மதம் சொல்வது எல்லாமே சரிதான் என்று நம்பி என மதம் உயர்ந்தது என்று யோசிப்பவர் அனைவருக்கும் உங்கள் மதத்திலும் ஓட்டைகள் இருக்கின்றன ஆகவே எதன் அடிப்படையில் பிரச்சனைகளை புரிந்து கொண்டிருக்கிறாயோ அவை அத்தனையுமே ஒரு தவறான நம்பிக்கையின் அடிப்படையில் கூட உருவாகி இருக்கலாம். ஆகவே என் மதம் உயர்ந்தது உன் மதம் உயர்ந்தது என்றெல்லாம் யோசிக்க கூட செய்யாதே.

இருப்பினும் இந்த பிரபஞ்சத் தோற்றத்திலும் சில விஷயங்களை ஆச்சர்யமூட்டத் தவறுவதில்லை.

உதாரணத்திற்கு இந்த பிரபஞ்சத்தில் மேட்டர், ஆன்டி மேட்டர் என்பது ஒன்றாகவே உருவானது. அதாவது electrons என்பது உருவான அதே சமயம் தான் positrons(protons அல்ல protons என்பது electronsஐ விட எடை மற்றும் வேறு சில தன்மைகளில் மாறு பட்டு இருக்கும் ஆனால் positrons என்பது electronsன் எல்லாத் தன்மைகளையும் பெற்று அதே சமயம் +ve charge கொண்டவை.) உருவானது. இவை இரண்டும் ஒரே அளவில்தான் உருவானவை. இவை இரண்டும் ஒன்றை ஒன்று நெருங்கினால் anhillation எனப்படும் சிதைவு ஏற்பட்டிருக்கும். ஆனால் எதனாலோ எல்லா positronsம் electrons உடன் சேர்ந்து anhillate ஆகாமல் கொஞ்சம் electrons எப்படியோ தப்பிப் பிழைத்ததால் தான் இன்று இந்தப் அணுக்கள் என்பது உருவானது மேலும் இந்தப் பிரபஞ்சம் இன்று உள்ளது போல இன்று இருக்கிறது.

இன்று நம் பிரபஞ்சத்தில் இந்த anti matter என்பதை நாம் black holesல் மட்டுமே பார்க்க முடியும். வேறு எந்த இடத்திலும் இந்த anti matter நம் பிரபஞ்சத்தில் இருக்காது.

anti matter என்பது எல்லா மேட்டருக்கும் இருப்பது.

electrons - positrons(+ve electrons)
protons - anti protons(-ve protons)
hydrogen - anti hydrogen

hydrogen என்பது 1 electron 1 proton கொண்டது.

anti hydrogen - 1 positron ஒரு anti proton கொண்டது.

anti hydrogen பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்.

http://en.wikipedia.org/wiki/Antihydrogen

இப்படி எல்லா மேட்டர்களுக்குமே எதிர்வினையாக ஒன்றோடு ஒன்று இணைந்தால் annihilation ஆகக் கூடியதுதான் anti matter.

இந்தப் பிரபஞ்சத் தோற்றத்தின் பொழுது எல்லாமே anti matter உடன் தான் படைக்கப்பட்டது. ஆனால் matter என்பது அதிகமாக இருந்ததாலோ இல்லை வேறு அறியப் படாத காரணங்களாலோ எல்லா anti matterகளும் அழிந்து விட்டன.

இன்று மிக மிகக் குறைவான அளவில் உருவாகும் anti matterம் உடனே matter உடன் சேர்ந்து annihilate ஆகி விடும்.

இந்த பிரபஞ்சத்தில் anti matter நிறைந்து matter என்பது இல்லாமல் இருக்கும் ஒரே இடம் black holes. எல்லா black holesலும் இல்லை ஆனால் சில black holesகளில் anti matter அதிகமாக இருப்பதால் matter என்பது அழிந்து விடும்.

இந்தப் பிரபஞ்சத்தில் அப்பால் anti matter என்பது இருக்கலாம்.

ஏன் anti matter இல்லாமலும் matter மட்டும் நிறைந்தும் காணப்படுகிறது என்பதை Greatest Unsolved problems in physics என்று தொகுத்திருக்கிறார்கள் wikipediaவில்

http://en.wikipedia.org/wiki/Unsolved_problems_in_physics

http://en.wikipedia.org/wiki/Baryogenesis

இது ஏன் என்று விளக்கம் இன்று நம்மிடையே இல்லை. இது தான் இறை ஆற்றல் என்றால் அந்த இறை ஆற்றலுக்கு அல்லா, ராமர், இயேசு என்று பெயரிடுவது முட்டாள்தனமானது.

Thursday, September 21, 2006

அறிவியலும் ஆன்மீகமும் - 6

சரி போன பகுதியில் நான் கேட்ட கேள்விக்கான விடை என்ன என்பதை லாஜிக்கலாக யோசித்து சொல்லி விடலாம். ஹைட்ரஜனில் neutron இல்லாமல் இருப்பதற்கு காரணம் என்ன என்றால் அதில் ஒரு proton மட்டுமே இருப்பது தான் காரணம். ஹீலியம் என்பதில் பார்த்தீர்களானால் 2 protons இருக்கும் இப்படி இருக்கும் சமயம் என்னவாகும் என்றால் இரண்டுமே பாஸிடிவ் சார்ஜாக இருப்பதால் ஒன்றை ஒன்று repel செய்து அணுவே சிதைந்து போய்விடும். இந்த சமயத்தில் தான் neutron என்பது தேவையாய் இருக்கிறது. இது mesons என்னும் ஒரு பொருளை உற்பத்தி செய்து protons ஒன்றை ஒன்று repel செய்வதை தடுத்து விடும். இப்படி உற்பத்தி செய்து தடுக்கும் neutronsக்குள் இருக்கும் force தான் strong nuclear force என்று சொல்கிறோம்.

weak nuclear force என்பது தான் இந்த உலகில் முதல் ஆடம் பாம் என்பதைக் கண்டுபிடிக்க உதவியது எப்படி என்றால் uranium, plutonium போன்ற சில உலோகங்களில் இந்த strong nuclear force என்பது மிகக் குறைவாக இருக்கும்(இதற்கு சில சமயம் குறைவான neutrons இருப்பதும் காரணம் அதாவது 10 protons 8 neutrons போன்று இருப்பது ஆனால் இது மட்டுமே காரணம் இல்லை). ஒரு குறிப்பிட்ட எடையைக் கடந்த இந்த உலோகங்கள் decay ஆக ஆரம்பிக்கும். இந்த அடிப்படையில் தான் nuclear பாம்கள் தயாரிக்கப் படுகின்றன.

யோசித்துப் பாருங்கள் uranium போன்ற உலோகங்களில் இருக்கும் electrons, protons, neutrons தான் நம்முள்ளும் இருக்கிறது. ஒரு nuclear பாம் என்பது வெடித்தால் எவ்வளவு வெப்பம் வெளியாகுகிறது எவ்வளவு எனர்ஜி வெளியாகுகிறது. அவ்வளவு எனர்ஜி நம்முள்ளும் இருக்கிறது. உலகின் எல்லாப் பொருளகளிலும் இருக்கிறது.

ஆனால் இவ்வளவு அதிகமான எனர்ஜி வெளியாகமால் அனைத்தையும் bind செய்து வைக்கும் force தான் strong nuclear force.

சரி அடுத்து electro magnetic force ஒரு அணுவுக்குள் electrons இருக்கிறது அது negative -ve சார்ஜ் உள்ளது அதே சமயம் protons என்பது பாஸிடிவ் சார்ஜ் உள்ளது. இவை ஒன்றை ஒன்று attract செய்து கொண்டால் என்னவாகும் ஒன்றோடு ஒன்று இணைந்து சிதைந்து போகும் அல்லவா? அப்படி சிதைந்து போகாமல் தடுப்பது தான் electro magnetic force.

இந்த electro magnetic force என்பது எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறது. strong nuclear force என்பது nucleus of the atom என்பதற்குள் மட்டும் இருப்பது அது neutronsக்குள் இருப்பது. அது nucleusக்குள் மட்டும் செயல்படும் அதனைத் தாண்டி அதனால் செயல் பட முடியாது. ஆனால் electro magnetic force இந்த பிரபஞ்சத்தின் எல்லா மூலைகளிலுல் பரவி இருப்பது. இதனால் தான் பிரபஞ்சத்தில் atom என்பதே இருக்கிறது. இந்த force இல்லை என்றால் பிரபஞ்சத்தில் atom என்பதே உருவாகி இருக்காது.

இது வரை சொன்னது அனைத்துமே அணுவுக்குள் இருக்கும் forces. அணு என்பது நம்முடைய கண்களுக்கு புலப்படாதது microscopic.

இது போக இருக்கும் இன்னொரு வகையான force தான் புவியீர்ப்பு விசை. இது பெரிய பெரிய நட்சத்திரங்களுக்கும் இல்லை பூமி போன்ற கோள்களுக்கும் இடையில் இருக்கும் force. இதனால் தான் பூமியின் நிலப் பரப்பில் நாம் ஒட்டிக் கொண்டிருக்கிறோம். அதே போல பூமி சூரியனைச் சுற்றுவது, நிலா பூமியை சுற்றுவது எல்லாமே இதனால் தான்.

இந்த நான்கு forces பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமெனில்

http://en.wikipedia.org/wiki/Four_forces

இங்கு செல்லுங்கள் இதனைப் பற்றி விரிவாக சொல்லி இருக்கிறார்கள்.

சரி இந்த நான்கு force மற்றும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதை singularity எனப்படும் பிரபஞ்சத் தோற்றத்தில் தான் தேட வேண்டி இருக்கிறது. singularityயின் போது இந்த நான்கு வகை forceகளும் ஒரே force ஆகத்தான் இருந்திருக்கிறது என்பதை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

யோசித்துப் பாருங்கள் நான்கு force அதுதான் இந்த பிரபஞ்சத்தில் எல்லா இடங்களில் பரவி இருக்கிறது அந்த நான்கு force எல்லாமே ஒரே வகையான force இருந்து உருவானது ஆக மனிதன் மட்டும் அல்ல உலகில் எல்லாப் பொருள்களிலும் எல்லா இடங்களிலும் பரவி இருப்பது ஒரே வகையான force.

கடவுள் என்பதைப் பற்றி நாம் விவரிக்கும் பொழுது நாம் சொல்வது omnipotent and omnipresent என்று. அதாவது எல்லாம் வல்லவர் எங்கும் நிறைந்தவர். இதில் இருந்து தான் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றும் சொல்கிறார்கள்.

இவை அனைத்தையுமே இந்த force பற்றியும் சொல்லலாம். எங்கும் இருக்கிறது எல்லா இடத்திலும் நிறைந்திருக்கிறது. தூணிலும் இருக்கிறது துரும்பிலுல் இருக்கிறது ஆகவே நாம் இறை என்று அறிந்து வைத்திருப்பது இதைத் தானா?

அவனில்லாமல் அணுவும் அசைவதில்லை என்கிறோம். நம் அறிவியல் இன்று நமக்கு சொல்வது இந்த force என்பது இல்லாமல் எதுவுமே கிடையாது ஒரு அணு கூட உருவாகாது எல்லா அணுக்களும் சிதைந்து விடும். ஒன்றுமே உருவாகாது. இதுவும் கூட எனக்கு இந்த forceஐ உருவகிக்கவே பயன் படுவது போல உள்ளது.

இப்படி அறிவியல் பூர்வமாக இன்னும் யோசித்தால் பூமி மற்றும் அதில் இருக்கும் நாம், இருக்கும் அனைத்தையும் இந்த சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்கள் influence செய்கின்றன. அதாவது சூரியனின் exert செய்யும் புவியீர்ப்பு விசையால் பூமி சுற்றுகிறது அதே போல பூமியின் புவியீர்ப்பு விசையால் நிலா பூமியைச் சுற்றுகிறது. அதே சமயம் நிலாவின் புவியீர்ப்பு விசை பூமியை அதில் இருக்கும் அனைவரையும் சிறிது influence செய்யும். இதே போல mars, venus போன்றவற்றின் புவியீர்ப்பு விசையும் நம்மை influence செய்யும். இது தான் ஜோதிடமா?

இப்படி எல்லாமே அறிவியல் பூர்வமாக இருந்தால் ராமர் என்பவர் எப்படி வந்தார், அல்லா என்பது யார் இல்லை இயேசு என்பவர் யார்.

இவை எல்லாம் மனிதனின் படைப்பு மற்றும் கற்பனைத் திறன்களால் இல்லை தவறாக புரிதல்களால் உருவானவர்களா?

நிர்மல் எனக்கு Let the force be with you Jedi masters என்று ஒரு பின்னூட்டம் அடித்திருந்தார். star wars படத்தில் வருவது இது. அந்தப் படத்தில் மனிதர்களில் சிலரிடம் forces கண்ட்ரோல் பண்ணும் சக்தி இருப்பதாகவும் அதன் மூலம் அவர்கள் பல அரிய காரியங்களைப் பண்ண முடியும் என்றும் காண்பித்திருப்பார்கள். A good science fiction is based on good science என்பார்கள். இது போலவும் சில சமயம் யோசிப்பதுண்டு நம்மால் இது போன்ற நான்கு forcesஐ control செய்ய முடிந்தால் படத்தில் வருவது போல செய்ய முடியும் என்று இந்த உலகில் அற்புதங்கள் எல்லாம் நடப்பதும் சிலர் இந்த forcesஐ அறிந்தோ அறியாமலோ கண்ட்ரோல் செய்வதால் தானா என்றும் யோசிப்பதுண்டு.

அறிவியலும் ஆன்மீகமும் - 5 கூட சின்ன போட்டி

தூணிலும் இருப்பான் துரும்பிலுல் இருப்பான் இறைவன் - ஆன்மீகம்.

ஒவ்வொரு அணுவிலும் இருக்கிறது உலகமெங்கும் வியாபித்து இருக்கிறது ஒரே வகையான force - அறிவியல்.

Quantum physics என்பது அணு அளவில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி படிக்கும் துறை. காஸ்மாலஜி என்பது சூரியன் அதை விட பெரிய அளவிலான நட்சத்திரங்கள் போன்றவற்றின் ஆராய்ச்சி செய்து இந்த பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றி படிக்கும் துறை. இந்த இரண்டுத் துறைகளும் ஒன்றோடு ஒன்று எப்படி தொடர்பு உடையது என்பதை நாம் அறிந்து கொள்ளும் சமயம் எல்லா இடங்களிலும் இறைவன் இருக்கிறான் போன்ற வாக்கியங்கள் அறிவியலால் கூட விளக்க முடியும் என்று தோன்றும்.

இவை அனைத்துமே விஞ்ஞானிகளால் விளக்க முடியாமல், genesis என்று சிலராலும் ஓம்காரத்தில் இருந்து உருவாயிற்று என்று சிலராலும் விளக்கப் பட்டுக் கொண்டிருக்கும் பிரபஞ்சத் தோற்றத்தின் போது ஏற்பட்ட singularity சம்பந்தப் பட்டது.

சரி முதலில் quantum physics துறை என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கலாம். சில அடிப்படைகளை ஞாபகப் படுத்திக் கொண்டால் quantum physics சொல்வதை நன்றாக புரிந்து கொள்ள முடியும். அணு என்பது மூன்று வகையான பொருள்களால் ஆனது என்பது நமக்குத் தெரியும் அதாவது electrons, protons and neutrons. உலகில் உள்ள எல்லாப் பொருள்களும் இந்த மூன்றின் அடிப்படையிலேயே உருவானது இதில் ஹைட்ரஜன் என்பது 1 proton 1 electron கொண்டது. ஹீலியம் 2 electron, 2 proton, 2 neutron கொண்டது. இவை எவ்வாறு இருக்கும் என்பதை கீழே காணலாம்.
Image Hosted by ImageShack.us Image Hosted by ImageShack.us

ஹைட்ரஜன் ஹீலியம்

இவை எல்லாம் நம்மில் பலருக்கு தெரிந்தது தான் ஆனால் இதில் ஆச்சர்யப்படத்தக்க பல விஷயங்கள் உள்ளன என்பதை பலர் யோசிக்கத் தவறி விடுகின்றனர். நமக்குத் தெரியும் opposites attract each other. அதாவது positive charge protons மற்றும் சார்ஜ் எதுவும் இல்லாத இருப்பது neutrons இருப்பது ஒரே nucleus என்று சொல்லப் படும் ஒரே இடத்திற்குள்தான். படத்தில் பார்த்தீர்களானால் ரெட் கலரில் இருப்பதுதான் protons. இவை அனைத்தையும் பிரிக்கும் தூரம் 10^-15 மீட்டர்கள். அப்படி என்றால் ஒன்றை ஒன்று repel செய்து atom என்று சொல்லப்படும் அணுவானது சிதைந்து விட வேண்டும் அல்லவா? ஏன் அப்படி ஏற்படுவதில்லை? அப்படி repel செய்வதால் எல்லா ஆடம்களும் சிதைந்து விட்டால் இந்த உலகில் ஒன்றுமே இருக்காது இல்லையா?

மேலும் யோசிக்க வேண்டியது electrons இந்த protonsஐ சுற்றி வருகிறது அந்த சமயம் முன்னால் சொன்னவாரே opposites attract each other என்று வைத்துக் கொண்டால் என்னவாகும்? electrons எல்லாவற்றையும் protons இழுத்து எல்லாம் இணைந்து அணு சிதைந்து போக வேண்டும் அப்படி நடந்தாலும் அணுக்கள் சிதைந்து போக வேண்டும் இல்லையா? அப்படி ஒன்றோடு ஒன்று ஈர்ப்பதால் இரண்டும் இணைந்து அணு சிதைந்தாலும் இந்த உலகில் ஒன்றுமே இருக்காது இல்லையா?

யோசிச்சுப் பாருங்க நாலு பொண்ணுங்களை ஒரே ரூமில தனியா இருக்க முடியாதுன்னு சொல்லறாங்க இங்க அதே போல ஒரே ரூமுக்குள்ள ரொம்ப நெருக்கமா protonsஐ போட்டு அடைச்சு அதை சுத்தி சூப்பரா பையன்களை சுத்த விட்டா என்னவாகும் பொண்ணுங்க எல்லாம் எப்படா மத்த பொண்ணுங்களை விட்டுட்டு பையன்களோட போய் பேசலான்னு நினைப்பாங்க இல்லையா. இப்படி பொண்ணுங்க பொண்ணுங்களுக்கு இருக்கற repelling forceஐ விட பல கோடி மடங்கு repulsive force இருக்கற ரெண்டை ஒரே இடத்திற்குள் அடைத்து. பல கோடி மடங்கு attractive force இருக்கற electronsஐ சுத்த விட்டா என்னவாகும்?

இங்கே தான் ஒவ்வொரு atomக்குள்ளும் இருக்கும் 3 forces வருது. Electro Magnetic Force, Strong Nuclear, Weak Nuclear force.

படத்தில் பார்த்தீர்களானால் red color proton, blue color neutron, கருப்புக் கலர் neutron.

ஹைட்ரஜன் atom பார்த்தீர்களானால் ஒரே proton ஒரே electron மட்டும்தான் இருக்கும். ஏன் அதில் neutron இல்லை என்று யோசித்தீர்களா? ஹீலியத்தில் இரண்டு proton இரண்டு neutron, இரண்டு electron இருக்கிறது.

இதில் போட்டி என்ன என்றால் நான் மேலே சொன்னதில் இருந்து neutronin வேலை என்ன என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?

கண்டுபிடித்தால் சொல்லுங்கள் பார்க்கலாம்.

மேலும் இந்த forces எப்படி செயல் படுகிறது. இதற்கு எப்படி singularity உடன் தொடர்பு உண்டு அதில் இருந்து எப்படி தூணிலும் இருக்கிறது துரும்பிலும் இருக்கிறது என்பதை எல்லாம் சொல்கிறேன். அப்படியே fission(hydrogen bomb), fusion(atom bomb) என்பதில் எல்லாம் என்ன நடக்கிறது என்பதை எல்லாம் விளக்க முயற்சி செய்கிறேன்.

Wednesday, September 13, 2006

அறிவியலும் ஆன்மீகமும் - 4

காஸ்மாலஜி என சொல்லப் படும் பிரபஞ்சத்தின் தொடக்கம் குறித்த அறிவியல் துறையில் சில ஆண்டுகளாக Big bang என்று சொல் தான் தாரக மந்திரமாக இருந்து வருகிறது. இன்று காஸ்மாலஜியில் நடக்கும் எல்லா ஆராய்ச்சிகளுக்கும் எதோ ஒரு வகையில் அடிப்படையாக் இருப்பதும் Big Bang தான்.

ஜார்ஜஸ் லெம்யாட்ரி ( Georges Lemaître ) என்ற ரோமானிய கிறிஸ்துவப் பாதிரியார் தான் முதன் முதலில் 1927ம் ஆண்டு Big Bang மூலமாக இந்தப் பிரபஞ்சம் தோன்றி இருக்கலாம் என்று சொன்னவர். பின் ஹீயூபில் இது சாத்தியமே என்பதை பின் நிரூபித்தார். Big Bang தியரி என்ன சொல்கிறது என்பதை எப்படி இதனை நிருபணம் செய்தார் என்ற நோக்கில் பார்த்தால் இன்னும் தெளிவாக விளங்கும். இதற்கு நாம் ஒலியின் சில தன்மைகளை தெரிந்து கொள்வது அவசியமாகிறது ஒலியின் அலைகளாக பயணம் செய்கிறது இதில் wavelength என்பது ஒரு அலைக்கும் இன்னொரு அலைக்கும் இடையில் உள்ள தூரம்( தூரம் என்றதும் எதோ கிலோமீட்டர் கணக்கில் நினைத்து விடாதீர்கள்(1/100000000000000000 மீட்டர்). இதில் blue shift, red shift என்று சொல்லுவார்கள் அதாவது ஒரு ஒலி உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்றால் blue shift ஆகும் உங்களை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது என்றால் அது red shift ஆகும். இன்னும் எளிமை படுத்தி சொல்ல வேண்டுமெனில் சிகப்பு நிறத்தில் இருக்கும் வெளிச்சமே அதிக தொலைவுக்கு செல்லும் என்று கொள்ளுங்கள். ரயில்வே லெவல் கிராஸிங், போக்குவரத்து லைட் எல்லாமே சிகப்பு நிறத்தில் அமைந்துள்ளது இதனால் தான்.

ஹீபில் என்ன கண்டறிந்தார் என்றால் பூமியில் இருந்து பல ஒலி நூற்றாண்டுகள் தள்ளி இருக்கும் நட்சத்திரங்களில் இருந்து வரும் ஒலியானது மெல்ல red shift ஆகிக் கொண்டிருக்கிறது என்று. இதன் மூலம் கண்டறிவது என்ன என்றால் மெல்ல அந்த நட்சத்திரங்கள் எல்லாமே பூமியை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கிறது. அதாவது இந்தப் பிரபஞ்சம் மெல்ல விரிவடைந்து கொண்டிருக்கிறது. விரிவடைந்து கொண்டிருக்கிறது என்றால் இன்று இருந்ததை விட நேற்று அருகில் இருந்தது அதற்கு முன் தினம் இன்னும் அருகில் இருந்தது என்று வைத்துக் கொண்டால் நாம் பின்னோக்கிச் செல்ல செல்ல இன்று பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்துமே அருகருகே இருந்திருக்க வேண்டும் அல்லவா? அதாவது பிரபஞ்சம் என்பது ஒரு சிறிய புள்ளியான இடத்தில் இருந்து தோன்றி இருக்க வேண்டும்.

அந்த புள்ளி வடிவான நேரத்தில் இருந்து மிக விரைவாக அனைத்தும் வெடித்து சிதறியது போல bang என்று விரிவடைந்திருக்க வேண்டும் என்பது தான் big bang தியரி. ஒரு விஷயத்தை இப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று விளக்குவது சுலபம். ஆனால் இப்படி நடக்கும் சமயம் அந்த சமயத்தில் என்னென்ன எப்படி எப்படி இருந்திருக்கும் என்று விவரிப்பது மிகக் கடினம். அதாவது அவன் அவளிடம் ஐ லவ் யூ என்று சொன்னான் என்று சொல்லி விடுவது சுலபம். ஆனால் அந்த சம்யத்தில் அவன் மன நிலை எப்படி இருந்தது அவன் இதயத் துடிப்பு எவ்வளவு அதை சொல்லும் சமயம் என்ன நினைத்துக் கொண்டிருந்தான் அதே சமயம் அந்தப் பெண் என்ன நினைத்திருப்பாள். அவளின் இதயத் துடிப்பு எவ்வளவாக் இருந்திருக்கும் உடனே என்ன நினைத்திருப்பாள். இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் தேவையில்லை என்று சில சமயங்களில் ஒதுக்கி விடலாம். ஐ லவ் யூ என்று சொன்ன உடன் அவனுக்கு கன்னத்தில் பரிசாக கிடைத்தது முத்தமா? அடியா என்பதுதான் முக்கியமாக படும்.

ஆனால் காஸ்மாலஜியில் இதை எல்லாம் ஒதுக்கி விட முடியாது ஏனென்றால் இவை அனைத்துமே காஸ்மாலஜியில் மிக அவசியமாகிறது. இப்படி எல்லா விஷயங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு விஞ்ஞானிகள் இதனை விளக்க முயற்சி செய்யும் சமயம் தான் அவர்கள் singularityல் சிக்கிக் கொண்டார்கள்.

நம் பூமி சூரியனை ஏன் சுற்றுகிறது? சூரியன் பூமியை ஈர்க்கிறது அதே சமயம் சந்திரன் பூமியை சுற்றிவதற்கு காரணமும் ஈர்ப்பு விசையால்தான். இந்த ஈர்ப்பு விசை தூரத்தால் பாதிக்கப் படும். சந்திரன் சூரியனைச் சுற்றாமல் பூமியை சுற்றுவதற்கு காரணம் பூமிக்கு அருகில் இருப்பதால் தான். இப்படி எல்லாமே ஒரே புள்ளியில் இருந்துதான் தோன்றியது என்று சொன்னால் அந்த சமயத்தில் ஈர்ப்பு விசை என்பது எப்படி இருந்திருக்கும். அந்த சமயத்தில் புள்ளியாக இருந்த பிரபஞ்சம் பில்லியன் பில்லியன் டிகிரிகளாக இருந்திருக்கும். அதே சமயம் density என்பது மிக மிக அதிகமாக இருந்திருக்கும். pressue மிக மிக அதிகமாக இருந்திருக்கும். இந்த ஒரு சூழ்நிலையில் எந்த ஒரு physics equationனும் விளக்க முடியாத ஒரு சூழ்நிலை தான் singularity.

All physics equations and laws we have will be broken down during singularity.

Big bang theoryயை முதன் முதலில் ஒரு ரோமானிய பாதிரியார் வெளியிட்டார் என்பது மிக ஆச்சர்யமான ஒரு நிகழ்வு. ஏனெனில் கலீலியோ காப்பர்நிக்கசின் தத்துவங்களை சப்போர்ட் செய்தார் என்று அவரை கைது செய்த வாடிகன் இது போன்ற ஒரு அறிவியல் விளக்கத்தை உலகம் ஏழு நாட்களில் தோற்றுவிக்கப் பட்டது என்ற பைபிளை அப்படியே நம்பிக் கொண்டிருந்த சர்ச் இதனை அனுமதித்தது ஆச்சர்யமான ஒரு விஷயமே. ஆனால் சர்ச் இதனை அனுமதித்ததற்கு மிக முக்கியமான காரணம் big bang என்ற ஒன்று நடந்தது உண்மை ஆனால் அந்த big bang உருவாகுவதற்கு காரணம் இறைவனே என்று சொல்லலாம் என்றுதான். ஆனால் அதனை அனுமதிக்கக் கூடாது big bang என்ற ஒன்று அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும் என்று நினைத்த விஞ்ஞானிகள் அதனை physics and mathematical equations மூலமாக தமதாக்கிக் கொண்டார்கள். இருந்தாலும் இந்நாள் வரை singularity என்பதைப் பற்றி எந்த சயன்டிஸ்டும் விளக்க முடியாததால் வாடிகன் அந்த பாயிண்டை Genesis என்று இன்றும் விளக்கிக் கொண்டிருக்கிறது.

ஆனால் இதன் மூலம் ஒன்று மட்டும் தெளிவாகிறது என்ன என்றால் நம்முடைய மதங்கள் நமக்கு இன்று வரை சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பதிலும் சில முரண்பாடுகள் உள்ளன என்பதுதான். ஹிந்து மதம் சொல்வது போல பிரம்மன் என்ற ஒருவர் இந்த உலகை படைக்கவில்லை. கிறிஸ்துவ மதம் சொல்வது போல ஏழு நாட்களில் இந்த உலகம் உருவாக்கப் படவில்லை. இஸ்லாம் சொல்வது போல ஆறு நாட்களில் இந்த உலகம் உருவாக்கப்படவில்லை. இன்று நாம் இருப்பது போல ஒரு பால்வெளி உருவாவதற்கு பல பில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்க வேண்டும். அதை எல்லாம் தாண்டி பூமியில் முதல் உயிர் உருவாவதற்கு இன்னும் சில மில்லியன் ஆண்டுகள் எடுத்திருக்க வேண்டும்.

இந்த பூமி உருவானது ஒரு cosmic accident. இந்த பூமியில் நாம் உருவானது இன்னொரு cosmic accident. இதை ஏற்றுக் கொள்ள மனித ஈகோவுக்கு கஷ்டமாகக் கூட இருக்கலாம் ஆனால் இவை அனைத்தும் உணமை என்பதை மறுப்பதற்கில்லை என்று என்னுடைய pesimisstic mind சொல்கிறது.

optimistic mind இந்த cosmic accident நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன 1/1000000000000000000000000000000 அப்படி இருந்தும் இந்த cosmic accidents நடந்திருக்கிறதே அப்படியானால் இதனை விளக்க முடியுமா உன்னால் may be எங்கோ ஒரு டிவைன் Intervention நடந்ததால் தான் இது சாத்தியமாகி இருக்கும் என்றே நம்பு என்று கூறுகிறது.

இதில் எந்த மனம் சொல்வதை நம்புவது என்பது இன்னும் புரியவில்லை.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் மதத்தின் பெயரால் இன்று இந்த உலகில் நடந்து கொண்டிருக்கும் சண்டைகள் அனைத்துமே மிகப் பெரிய முட்டாள்த்தனம் என்றுதான் தோன்றுகிறது. எல்லா மதங்களிலும் தவறுகள் இருக்கின்றன. எந்த மதத்தின் கொள்கைகளுமே நூறு சதம் சரியானது அல்ல என்பதை நாம் எப்படி உருவானோம் என்பதை எல்லா மதங்களும் விளக்கும் விதத்தில் இருந்தே கண்டு கொள்ள முடிகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் நடக்கும் சண்டைகளிலும் சச்சரவுகளிலும் ஒரு பாயிண்டுமே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

என் மதம் தான் பெரியது, மதம் மாற்றம் சரி தவறு என்று சொல்வது, புனிதப் போர், கோயில் இடிப்பு எல்லாமே அர்த்தமில்லாதது என்றுதான் தோன்றுகிறது.

என் மதம் மூலம் தான் சரியான மார்க்கத்தில் செல்ல முடியும் என்பதெல்லாம் நகைப்புக்குறியதாகத் தான் தோன்றுகிறது.

மேலும் எனக்குத் தெரிந்த ஆன்மீகமும் அறிவியலும் தொடரும்.

அறிவியலும் ஆன்மீகமும் - 3

சார்பு நிலைத் தத்துவம் குறித்து மேலும் ஒரு எடுத்துக் காட்டுடன் ஒரு விளக்கம்.

சோமு, ராமு இருவரும் இரட்டைப் பிறவிகள் என்று வைத்துக் கொள்வோம். இதில் ராமு ஒரு ராக்கெட்டில் ஏறி 8 ஒளி வருடங்கள் தள்ளி இருக்கும் ஒரு நட்சத்திரத்திற்கு போகிறான் என்று வைத்துக் கொள்வோம். இதில் ஒளி வருடம் என்பது ஒளி ஒரு வருடத்தில் பயணப்படும் தொலைவு அதாவது (3,00,000 *60*60*24*365 கிலோமீட்டர்கள்). இருவரிடமும் ஒரு தொலைநோக்கி இருக்கிறது அந்த தொலை நோக்கியில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியும். அந்த நட்சத்திரத்தையும் பார்க்க முடியும். ராமு ராக்கெட்டில் நொடிக்கு 2,40,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்ய முடியும் என்று வைத்துக் கொள்வோம். ராமு ராக்கெட்டில் கிளம்பும் சமயம் ஜனவரி 1 2000 என்று வைத்துக் கொள்வோம். ஆகவே இந்த நட்சத்திரத்தை அவன் 10 வருடங்களில் சென்றடைவான்.

இங்கு மேலும் ராமுவிடம் ஒரு கடிகாரம், சோமுவிடம் ஒரு கடிகாரம், அந்த நட்சத்திரத்தில் ஒரு கடிகாரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ராமுவும், சோமுவும் இந்த மூன்று கடிகாரங்களையும் எந்த நேரத்திலும் பார்க்க முடியும் என்றும் வைத்துக் கொள்வோம்.

இப்பொழுது ராமு, சோமுவிடம் உள்ள கடிகாரம் இரண்டும் ஜனவரி ஒன்று 2000 என்று காண்பிக்கும். நட்சத்திரத்தில் இருக்கும் கடிகாரம் 1 ஜனவரி 1992 என்று காண்பிக்கும் ஏனெனில் அந்த நட்சத்திரத்தில் இருக்கும் ஒளி நம்மை அடைய 8 ஒளி ஆண்டுகள் பிடிப்பதால் 8 வருடங்களுக்கு முன் அந்த நட்சத்திரத்தில் இருந்து தோன்றிய ஒளிதான் நம்மை வந்து அடைந்திருக்கும். ஆக இந்த நேரத்தில் இருவருடைய பார்வைகள், நேரம் எப்படி இருக்கும் கீழே காணலாம்.

Image Hosted by ImageShack.us

சரி ராக்கெட் கிளம்பும் சமயம் என்னவாகும் என்று பார்க்கலாம். ராமுவுக்கும் இது வரை 3,00,000 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருந்த வெளிச்சம் இப்பொழுது 3,00,000 + 2,40,000 = 5,40,000 கிலோமீட்டர் வேகத்தில் வந்து சேரும். இது ஏன் என்றால் உங்களை நோக்கி ஒரு ரயில் வந்து கொண்டிருக்கிறது அது 80 கிலோமீட்டர் வேகத்தில் வருகிறது நீங்கள் அதனை நோக்கி 80 கிலோமீட்டர் வேகத்தில் போகிறீர்கள் என்றால் அந்த ரயில் உங்களை நோக்கி 160 கிலோமீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது அல்லவா அதாவது அதன் வேகம் அதிகரிக்கவில்லை நீங்கள் வேகமாக போவதால் அதன் வேகம் அதிகமாக இருப்பதாக உணர்வீர்கள் இல்லையா?அது போலத்தான் இதுவும். ராமு ஒளியை நோக்கி 2,40,000 வேகத்தில் பயணம் செய்யும் சமயம் அந்த வெளிச்சம் நம்மை அவ்வளவு வேகமாக வந்தடையும்.

நாம் மேலும் இங்கு புரிந்து கொள்ள வேண்டியது டைம் ஸ்பேஸ் டைலேஷன்(time-space dilation) பற்றி. அதாவது நாம் எவ்வளவு வேகமாக பயணம் செய்கிறோமோ அந்த அளவு நேரம் மெதுவாக செல்ல ஆரம்பிக்கும்.இது கண்டிப்பாக ஒத்துக் கொள்ள கடினமாகத்தான் இருக்கும் இருந்தாலும் நாம் எவ்வளவு வேகமாக பயணம் செய்கிறோமோ அதற்கு ஏற்றது போல நாம் பயணம் செய்யும் இடைவெளி குறையும். இதனை Space Warp, Time warp என்று சொல்லுவார்கள். இதற்கு time-space dilation formula என்று ஒன்று உண்டு இதனை வைத்து இதனை கணக்கிடுவார்கள். இந்த எடுத்துக்காட்டில் ராமுவுக்கும் 2,40,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்வதால் space-time dilation factor 60% ஆக இருக்கும். அதாவது ராமு இப்பொழுது ராமுவிற்கும் அந்த நட்சத்திரத்திற்கும் இடையில் உள்ள இடைவெளி 60% ஆக குறைந்து விடும்.

இது எப்படி சாத்தியம் என்றால் சாத்தியம்தான். இது விஞ்ஞானப் பூர்வமாகவும் நிரூபிக்க பட்டுள்ளது. 1970 களில் சில விஞ்ஞானிகள் அடாமிக் கிளாக் எனப்படும் மிக குறைவான நேரத்தை கணக்கிட உதவும் சில கடிகாரங்களை ஒரே நேரத்தைக் காட்டுமாறு synchornize செய்து அதில் சில கடிகாரங்களை பூமியிலும் சில கடிகாரங்களை ஒரு வானவூர்த்தியிலும் எடுத்துச் சென்று சில மணி நேரம் கழித்து வந்த பொழுது வான ஊர்த்தியில் இருந்த கடிகாரங்கள் அனைத்துமே பூமியில் இருந்த கடிகாரங்களை விட சற்று குறைவான நேரத்தில் ஓடிக் கொண்டிருந்ததைக் கண்டார்கள்.குறைந்திருந்த மணித்துளி பார்முலாவின் படி அமைந்திருந்தது.

ஆக இந்த நேரத்தில் இருவருடைய பார்வைகள், நேரம் எப்படி இருக்கும் கீழே காணலாம்.

Image Hosted by ImageShack.us

ஆகவே இப்பொழுது ராமுவுக்கு தொலைவு 60% ஆகி விட்டதால் ராமு 10 வருடங்களுக்கு பதிலாக 6 வருடங்களிலேயே அந்த நட்சத்திரத்தை அடைந்து விடுவான்.

சரி இப்பொழுது ராமு பாதி தூரத்தை கடந்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம் இப்பொழுது என்னவாகும்?

இப்பொழுது பூமியில் நேரம் 2005 ஆக இருக்கும் ராமுவின் நேரம் 2003 ஆக இருக்கும்.

இங்கு மேலும் சில விஷயங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

Dopplers effect

அதாவது நம்மை நோக்கி ஒரு வண்டி வேகமாக வந்து கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் ஒரு ஹாரன் அடிக்கப் படுகிறது அப்பொழுது நம்மை நோக்கி வருவதால் அந்த சத்தத்தின் அலைகள் நம்மை நோக்கி கொண்டு வருகிறது அதனால் அந்த சத்தம் அதிகமாக இருப்பதாக தோன்றும் அந்த வண்டி நம்மை விட்டு செல்லும் சமயம் அதாவது நம்மைக் கடந்து செல்லும் சமயம் அந்த வண்டியின் சத்தம் அது நம்மை விட்டு விலகிச் செல்வதால் அதிகமாக இருக்காது. இது மீண்டும் ஒரு மிகவும் எளிமை படுத்திச் சொல்லப் பட்ட விளக்கம். ஆனால் இதுதான் டாப்ளர் விதி.

அதோடு மட்டும் அல்லாமல் நம்மை வெளிச்சம் வந்து சேர நேரமாகும் ஆகவேதான் ராமு கிளம்பும் முன் நாம் நட்சத்திரத்தின் நேரம் 1992 ஆக இருந்தது.

இதனால் சோமு 2005ல் பூமியில் இருந்து பார்க்கும் சமயம் சோமுவின் நேரம் 2001 ஆகத்தான் இருக்கும். அதாவது 2001ல் சோமு எந்த தூரத்தில் இருந்தானோ அதுதான் சோமுவுக்கு தெரியும்.

இதே தூரத்தில் இருக்கும் ராமுவுக்கு டாப்ளர் மற்றும் வெளிச்சத்தைப் பார்க்கும் விதத்தால் நேரம் 2001 ஆகத்தான் தெரியும்.

ஆக இந்த நேரத்தில் இருவருடைய பார்வைகள், நேரம் எப்படி இருக்கும் கீழே காணலாம்.

Image Hosted by ImageShack.us

ராமு நட்சத்திரத்தை அடைந்த சமயம் திரும்பும் சமயம் நேரம் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை அடுத்து விளக்க முயற்சி செய்கிறேன்.

அறிவியலும் ஆன்மீகமும் - 2

ஐன்ஸ்டினின் சார்பு நிலைத் தத்துவத்தை( Theory of Relativity ) அறிந்தவர்கள் இந்த உலகில் நான்கு பேர்தான் என்று கூறுவார்கள். அந்த நான்கு பேரில் நான் கண்டிப்பாக கிடையாது.ஆகவே இதனை நான் விளக்குவது சரி இருக்காது இருந்தாலும் சிறிது முயற்சி செய்கிறேன்.நீங்கள் ஒரு புகை வண்டியில் மிக வேகமாக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறீர்கள். அப்பொழுது கிழக்கில் இருந்தும் மேற்கில் இருந்தும் இரண்டு ஒளிக் கதிர்கள் புறப்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மிக வேகமாக கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி பயணம் செயது கொண்டு இருப்பதால் மேற்கில் இருந்து வரும் ஒளிக் கதிர் உங்களை முதலில் வந்து சேரும் பின்தான் கிழக்கில் இருந்து வந்த ஒளிக் கதிர் வந்தடையும் அல்லவா? அதனால் உங்களுக்கும் மேற்கில் இருந்து புறப்பட்ட ஒளிக் கதிர் தான் உருவானது என்று நினைப்பீர்கள் ஆனால் பூமியில் நின்று கொண்டிருக்கும் ஒருவருக்கு அவை இரண்டுமே ஒரே நேரத்தில் உருவானது என்று நினைப்பார் இல்லையா?அப்படியானால் உங்களுக்கு ஒரு நிகழ்வு வேறு நேரத்தில் நடந்ததாக தோன்றுகிறது. பூமியில் உள்ளவருக்கு வேறு நேரத்தில் நடந்ததாக தோன்றுகிறது அல்லவா?

அப்படியானால் நேரம் என்பது நிலையானது அல்ல என்ற முடிவுக்கு வர வேண்டியதிருக்கிறது அல்லவா? இது சாதாரணமான ஒரு கண்டுபிடிப்பாக தோன்றினாலும் இது மிக முக்கியமான ஒரு கண்டுபிடிப்பாகும். அந்த சமயம் வரை உலகில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் நிலையான நேரம் என்ற ஒன்றையே நம்பி வந்தார்கள். இது அந்த நம்பிக்கைகள் அனைத்தையுமே தகர்த்து எறியும் வகையில் அமைந்தது.

ஆனால் ஐன்ஸ்டினின் இந்தக் கண்டுபிடிப்பு அவர் எதிர்பார்க்காத ஒரு விளைவையும் ஏற்படுத்தியது. அவரின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்த ஒரு சக விஞ்ஞானி இந்த பிரபஞ்சமும் நிலையானது இல்லை அது வேகமாக பரந்து விரிந்து கொண்டிருக்கிறது அல்லது சுருங்கி கொண்டிருக்க வேண்டும் என்று கண்டுபிடித்தார். இது ஐன்ஸ்டினை மிகவும் தர்ம சங்கடமான ஒரு நிலையில் தள்ளியது. மதத்தின் மேல் தீவிர நம்பிக்கை கொண்ட ஐன்ஸ்டின் இந்தக் கண்டுபிடிப்பு தன் மத நம்பிக்கைகளுக்கு எதிராக இருப்பதை உணர்ந்தார். அந்த சமயத்தில் தான் இவருடைய மிக புகழ் பெற்ற "GOD DOESNT PLAY DICE WITH THIS UNIVERSE". அதாவது கடவுள் இந்த உலகில் தாயம் விளையாடவில்லை எல்லாமே எழுதி வைத்தது போலத்தான் நடக்கும் என்று கூறினார்.அதனால் தன்னுடைய கண்டுபிடிப்பில் சில மாற்றங்களைச் செய்து இந்த பிரபஞ்சம் நிலையானது என்று மாற்றி வெளியிட்டார்.

ஆனால் ஹீபில் 1928 தன்னுடைய தொலை நோக்கி மூலம் இந்த உலகம் பரந்து விரிந்து கொண்டிருக்கிறது என்று நிருபித்தார்.

பிறகு ஐன்ஸ்டின் தான் தன்னுடைய கண்டுபிடிப்பில் மாற்றம் செயத்தது தன் வாழ்க்கையின் மிகப் பெரிய தவறு என்று கூறினார்.

இந்த சமயத்தில் அறிவியலில் இருந்து ஆன்மீகத்திற்கு நாம் மாற வேண்டி இருக்கிறது. இங்கே நாம் யோசிக்க வேண்டியது இந்தக் கண்டுபிடிப்பு உலகில் உள்ள எல்லா மதங்களும் கொண்டிருந்த நம்பிக்கைக்கு மிக புறம்பாக உள்ளது என்பதைக் காண வேண்டும். இந்த கண்டுபிடிப்பு கடவுள் இல்லை என்று கூறவில்லை ஆனால் எல்லாமே எழுதி வைத்தபடிதான் நடக்கிறது போன்ற நம்பிக்கைகளை உடைத்து எறியும் விதமாக உள்ளது. அதாவது கடவுளை நம்முடைய மதங்கள் நமக்கு என்ன சொல்லிக் கொடுத்திருக்கிறதோ அது அத்தனையும் உண்மை இல்லை என்று அறிவியல் பூர்வமாக நிருபிக்கும் வகையில் உள்ளது. ஐன்ஸ்டின் மிகப் பெரிய அறிவாளி அவர் தன்னுடைய தவறுகளை ஒத்துக் கொண்டார். ஆனால் அகங்காரம் கொண்ட எத்தனை மனிதர்களால் இது போல ஒத்துக் கொண்டு மத துவேஷங்கள் கொள்ளமால் இருக்க முடியும்? எத்தனை பேர் ராமரும் இல்லை அல்லாவும் இல்லை கிறிஸ்துவும் இல்லை என்பதை ஒப்புக் கொள்ள முடியும்? தெரியவில்லை.

அடுத்த பகுதியில் இந்த பிரபஞ்சம் விரிவடைகிறதனால் என்ன என்ன கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன அது மேலும் நம்முடைய ஆன்மீக சிந்தனைகளை மாற்றி அமைக்கும் விதமாக இருக்கிறது. மனிதனின் அகங்காரம் எப்படி அப்படியே இருக்கிறது என்று எழுத முற்படுகிறேன்.

அறிவியலும் ஆன்மீகமும் - 1

Bubble vs Bang எதோ ஹாலிவுட் திரைப்படத் தலைப்பு போன்று இருந்தாலும், இன்று காஸ்மாலஜி(Cosmology) என்னும் துறையில் இன்று பல மில்லியன் வருடக் கேள்வி இதுதான்.

காஸ்மாலஜி என்பது நம்முடைய பிரபஞ்சத்தை பற்றிய ஆராய்ச்சி செய்யும் துறையாகும். ஐன்ஸ்டீன், நீயூட்டன், ஹாகிங்ஸ் போன்ற அறிவியல் துறையில் மிக புகழ் பெற்று இருக்கும் அனைவருமே இந்த துறையில் ஆராய்ச்சி செய்தே புகழ் பெற்றார்கள்.

இது ஆன்மீகத்துடனும் மிகவும் நெருக்கமான ஒரு துறையாக நாம் கருதலாம். இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது? போன்ற கேள்விகளுக்கு நாம் இது நாள் வரையிலும் ஏன் இன்று கூட ஆன்மீகத்தையே நாடியுள்ளோம்.

இது போன்ற கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமாக விடை அறியும் தெரியும் சமயம் நாம் நம்முடைய ஆன்மீகச் சிந்தனைகளை நம்முடைய நம்பிக்கைகளை சீர்தூக்கிப் பார்க்க வேண்டியதாகிறது.

Cosmology என்னும் இத் துறையில் இன்று நடக்கும் எல்லா ஆராய்ச்சிகளுக்கும் அடிப்படை Hubble என்பவரால் 1929ம் கண்டுபிடிக்கப் பட்ட ஒன்றின் அடிப்படையிலேயே நடை பெறுகிறது.

இவரின் கண்டுபிடிப்பே ஐன்ஸ்டீனின் சார்பியல் தத்துவத்தை ஐன்ஸ்டீனுக்கே விளக்கியது;-).

இவரின் கண்டுபிடிப்பு பற்றி நாம் அறிந்து கொள்ளும் முன் அது வரை இந்த துறையில் நடந்தது என்னென்ன என்று காணலாம். இந்த துறையின் முதல் முக்கிய கண்டுபிடிப்பு எது என்று நாம் அறிய முற்பட்டால் அது காப்பர்னிக்கஸ் இந்த உலகை உருண்டை என்று கண்டு பிடித்தைத் தான் சொல்ல வேண்டும். அது வரை இருந்து வந்த நம்பிக்கையான தட்டை உலகம் என்ற நம்பிக்கையை தகர்த்து எறியும் வகையில் இருந்த கண்டுபிடிப்பாகும் அது.

பின் நீயூட்டன் புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்ததை சொல்லலாம். புவியீர்ப்பு சக்தி தான் என்பது நாம் இந்த பூமியின் பகுதியில் ஒட்டிக் கொண்டு இருக்க வைக்கிறது. புவியீர்ப்பு சக்திதான் இந்த சந்திரன் பூமியை சுற்றி வரச் செய்கிறது. பூமி சூரியனைச் சுற்றி வரச் செய்கிறது. இது அனைத்தும் தான் ஐன்ஸ்டினின் சார்பு நிலை கண்டுபிடிப்பு வரும் வரை இந்தத் துறையில் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளாக கருதப்பட்டது.

ஐன்ஸ்டினுக்கு ஹூபில் எப்படி சார்பு நிலை தத்துவத்தை விளக்கினார். அந்தக் கண்டுபிடிப்பு எப்படி மத நம்பிக்கைகளை மாற்றும் விதமாக உள்ளது.