Monday, January 15, 2007

அறிவியலும் ஆன்மீகமும் - 13

பிரம்மாண்டமான அற்புதமான கரும்பள்ளங்கள்(Super Massive Black Holes)

மனிதன் தான் எங்கிருந்து வந்தோம் இந்த பூமியில் எதற்காக பிறந்தோம் என்பதை அறிந்து கொள்வது மிக முக்கியமானது என்று மதங்கள் கருதுகின்றன. இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் பல அற்புதமான பிரமாண்டமான ஆச்சரியமான அமைப்புகளோடு ஒப்பிடுகையில், மனிதனின் வாழ்வு பற்றிய அறிதல் என்பது அற்பமாகி விடுகிறது. இந்தப் பிரபஞ்சத்தில் அப்படி இருக்கும் ஒரு அற்புதமான ஒரு அமைப்பு அதன் முக்கியத்துவத்தைப் பற்றி இங்கே சொல்லப் முற்பட்டிருக்கிறேன். நான் எந்த அளவு அற்பமானவன் என்பதை இதனைப் பற்றி அறிந்ததால் உணர்ந்திருக்கிறேன். அந்த உணர்தலையும் சொல்ல இங்கே முற்பட்டிருக்கிறேன்.

மனித உடலில் எத்தனை செல்கள் இருக்கின்றன? 10 டிரில்லியன் அதாவது 1 லட்சம் பில்லியன் செல்கள்(1 million million cells ). இந்த பிரபஞ்சத்தில் எத்தனை அண்டவெளிகள் இருக்கின்றன? 125 பில்லியன் அண்டவெளிகள். சிலர் 500 பில்லியன் என்று சொல்கிறார்கள் சிலர் அதற்கு மேலும் இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். 125 பில்லியன் என்பது ஹீபிள் தொலைநோக்கி மூலமாக கணித்துள்ள எண். 125 பில்லியன் அண்டவெளிகள்!!!!!!!!!

நம் உடலில் இருக்கும் 800 செல்களைச் இணைத்துப் பார்க்க முயற்சித்தால் முடியாது அவை கண்களுக்கு தெரியாது. இந்த பிரபஞ்சத்தின் அண்ட வெளிகளையும் ஒப்பிட இந்தக் கணக்குதான் 800 செல்கள் நம் கண்களுக்கு எப்படித் தெரியாதோ இந்த பிரபஞ்சத்தை ஒரு மனிதனாக உருவகப்படுத்தினால் அண்டவெளிகள் என்பது microscopic ஆக இருக்கும் அதாவது கண்களுக்குப் புலப்படாத ஒரு பொருளாக இருக்கும். ஒவ்வொரு அண்ட வெளியிலும் 1 லட்சம் கோடி நட்சத்திரங்கள் இருப்பதாக சொல்கிறார்கள். அதில் ஒரு நடுத்தர அளவு நட்சத்திரமான சூரியன் 1 லட்சம் பூமியை உள் அடக்கி விடக் கூடியது. 6 பில்லியன் மக்களை உள்ளடக்கியது பூமி. மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்கும் ஒப்பீடுகள் இருக்கிறதா?

சரி இதற்கும் பிரமாண்டமான அற்புதமான கரும்பள்ளங்கள் என்ன சம்பந்தம்? ஏற்கனவே இங்கே சொல்லப்பட்டிருக்கும் கரும்பள்ளங்களுக்கும் என்ன சம்பந்தம் என்ன வித்தியாசம்?

முதலில் கரும்பள்ளங்களுக்கும் அற்புதமான பிரம்மாண்டமான கரும்பள்ளங்களுக்கும் என்ன வித்தியாசம் என்பதைச் சொல்கிறேன். இவை இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசங்கள் உள்ளன. மலை மடு என்பது உவமை மட்டும் அல்ல. அற்புதமான பிரமாண்டமான கரும்பள்ளங்கள் என்பது சூரியனை விட பல மில்லியன் மடங்கு உருவத்திலும் எடையிலும் பெரியது(1 மில்லியன் என்பது 100 கோடி என்று கொள்க). ஆனால் சாதாரண கரும்பள்ளங்கள் மிகச் சிறியவை பூமியின் சுற்றளவில் தொடங்கி சிறிய புள்ளி அளவு வரை இதன் அளவு வேறுபடும்.

வேறு சில வித்தியாசங்கள் என்னவென்றால் அற்புதமான பிரமாண்டமான கரும்பள்ளங்கள் மிகப் பெரியவையாக இருப்பதால் Event Horizon என்று சொல்லப் படும் அதனுடைய எல்லைகளில் புவியீர்ப்பு விசை(gravitational force) என்பது சாதாரண கரும் பள்ளங்கள் போல இருக்காது. மேலும் இந்த பிரம்மாண்டமான கரும்பள்ளங்களில் density(அதாவது பொருள்கள் ஒரு இடத்தில் அடங்கி இருக்கும் அளவு) என்பது மிகக் குறைவாகவே இருக்கும்.

சரி அற்புதமான பிரமாண்டமான கரும்பள்ளங்களில் என்ன விஷேசம் இருக்கிறது ஏன் இந்த நூற்றாண்டின் தலை சிறந்த கண்டுபிடிப்புகளில் ஒன்றாக இதனைக் கருதுகிறார்கள்?

இதனைப் புரிந்து கொள்ள சில கேள்விகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கேள்விகள் புரிந்தால் தான் பதில்கள் நமக்குத் தெரியும் சமயம் அதனைப் புரிந்து கொள்ள முடியும் இல்லையா :-)))).

சரி கேள்விகள். இந்தப் பிரபஞ்சம் பெருவெடிப்பில் தொடங்கி இன்று வரை விரிவடைந்து கொண்டிருக்கிறது என்று சொல்கிறார்களே. இதில் அண்ட வெளிகள் எப்படித் தோன்றின? மிகச் சாதாரணமான கேள்விதான். ஆனால் இதைப் பற்றி சிந்தித்திருக்கிறோமா? எப்படி இந்தப் பிரபஞ்சம் அதில் அண்டவெளிகள் அதில் நட்சத்திர மண்டலங்கள் அதனைச் சுற்றி கிரகங்கள் என்ற அமைப்பு உண்டாயிற்று? அண்ட வெளிகள் இந்த பிரபஞ்சத்தில் நம் சூரிய மண்டலத்தில் பூமி இருப்பது போல இருக்கிறது. ஆக அவை ஒரு தனியான அமைப்பு இல்லையா? அது போன்ற அமைப்பு எப்படி உருவானது?

இதற்கு பதில் தெரிய அற்புதமான பிரமாண்டமான கரும்பள்ளங்கள் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் அண்டவெளிகள் தோற்றத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு அற்புதமான பிரமாண்டமான கரும்பள்ளங்களுக்கும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இன்று இந்தப் பிரபஞ்சம் ஏன் இப்படி இருக்கிறது ஏன் வேறு மாதிரி இல்லை என்பது போன்ற கேள்விகளுக்கும் இந்த அற்புதமான பிரமாண்டமான கரும்பள்ளங்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

அற்புதமான பிரமாண்டமான கரும்பள்ளங்களைப் பற்றிய முதலில் ஆராய ஆரம்பித்த போது இதன் மகத்துவத்தையும் முக்கியத்துவத்தையும் ஆராய்ச்சியாளர்கள் உணரவில்லை. கரும்பள்ளங்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் கற்பனையில் மட்டுமே இருக்கிறது என்று சொல்லப் பட்டு வந்த காலத்தில் ஆராய்ச்சியாளர்கள் இவை கற்பனை அல்ல என்பதை நிரூபிக்கவும் தங்களுடைய பல விளக்கங்கள் உண்மைதான் என்பதை நிரூபிக்கவே இதனைப் பற்றி ஆராய ஆரம்பித்தார்கள்.

வெளிச்சத்தைக் கூட வெளியேற்ற விடாத இந்த அற்புதமான பிரமாண்ட கரும்பள்ளங்களை ஆராய்ச்சியாளர்கள் தேடியது இந்தப் பிரபஞ்சத்தின் மிகப் பிரகாசமான இடங்களில். அதாவது quasars எனப்படும் அண்டவெளிகளில். பிரபஞ்சத்திலேயே மிக அதிகமான வெளிச்சத்தை வெளியே உமிழும் அண்டவெளிகளை quasar என்று வகைப்படுத்துகிறார்கள். கீழே quasar அண்டவெளிகள் எப்படித் இருக்கும் என்பதைப் பற்றிய ஒரு ஒளிப்படமும், ஒரு அசையாப் படமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.





சாதாரண அண்டவெளிகளை விட பல மடங்கு வெளிச்சத்தை உமிழும் இந்த quasar அண்டவெளிகள் ஏன் பிரமாண்டமான கரும்பள்ளங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகளைக் கவர்ந்தது? அதுவும் கரும்பள்ளங்கள் என்பது வெளிச்சத்தை கூட வெளியே விடாமல் தன்னுள் அடக்கிக் கொள்ளும் தன்மை வாயந்ததாக இருக்கும் போது?

காரணம் இந்த quasar அண்டவெளிகள் இந்த அளவு வெளிச்சத்தை உமிழக் காரணம் அந்த அண்டவெளிகளில் உள்ள நட்சத்திரங்களையும் எல்லாம் எதோ ஒரு சக்தி தன்னை நோக்கி இழுத்துக் கொண்டிருக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் யூகித்தார்கள். அந்த சக்தி இழுத்துக் கொண்டிப்பதால் பல நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொள்வதாலும், அந்த ஈர்ப்பு சக்தியால் தன்னுடைய சக்தியை வெகு வேகமாக இழந்து super novaக்களாக வெடித்து சிதறிக் கொண்டிருப்பதாலும் தான் அவை இந்த அளவு பிரகாசமாக இருக்கிறது என்றும் கணித்தார்கள். இந்த அளவு சக்தி கொண்ட ஒரு அமைப்பு, பிரமாண்டமான ஒரு அமைப்பு, பல நட்சத்திரங்களை தன்னை நோக்கி இழுக்கும் சக்தி வாய்ந்த அமைப்பு பல நட்சத்திரங்களை வெடித்து சிதற வைக்கும் சக்தி கொண்ட அமைப்பு, இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறது என்றால், அவை சிங்குலாரிட்டி(singularity) என்று சொல்லப்படும் பிரபஞ்சத் தொடக்க நிலையை ஒத்த நிலையை தன்னுள்ளே கொண்டிருக்கும் கரும் பள்ளங்களாகத்தான் இருக்க வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கணித்தார்கள்.

அவர்களின் கணிப்பு தவறாகவில்லை.

ஆனால் இந்த ஆராய்ச்சிகள் மூலம் அவர்கள் கண்டுபிடிக்கப் போகும் உண்மைகளை இந்த ஆராய்ச்சிகள் இந்த பிரபஞ்சத் தோற்றத்தைப் பற்றிய மிகப் பெரிய உண்மைகளை விளக்கப் போகிறது என்பதை அவர்கள் அப்போது கணிக்கவில்லை.

மிக நீண்ட விளக்கமாக இருப்பதால் மீதி அடுத்த பகுதியில்.

6 comments:

கோவி.கண்ணன் [GK] said...

பிரபஞ்சம் பற்ற உண்மைகள் படிக்க படிக்க வியப்பாக இருக்கிறது !

நன்றாக விரிவாக எழுதியிருக்கிறீர்கள் குமரன் பாராட்டுக்கள்.

அடுத்த பகுதிக்கு ஆவலோடு காத்திருக்கிறேன்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

பலப் பல நன்றிகள் கோவி. நீங்கள் எனக்குக் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் ஊக்கத்திற்கு மிகுந்த நன்றி.

arattai said...

Superb Article. Keep it up

ரவி said...

ஹை, புது போட்டோ சூப்பர்...

அருமையாக எழுதி இருக்கீங்க செந்தில் குமரன்...

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நன்றி வளவன்.

நன்றி ரவி.

சீனு said...

//இந்த பிரபஞ்சத்தில் அண்டவெளிகள் தோற்றத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு//

http://www.tamiloviam.com/unicode/12140609.asp

//கரும்பள்ளங்கள் என்பது வெளிச்சத்தை கூட வெளியே விடாமல் தன்னுள் அடக்கிக் கொள்ளும் தன்மை வாயந்ததாக இருக்கும் போது?//

http://jeeno.blogspot.com/2005/02/blog-post_21.html