Friday, October 06, 2006

அறிவியலும் ஆன்மீகமும் - 7

காற்றுள்ளே போதே தூற்றிக் கொள் என்பது போல evolution பற்றி சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் பொழுதே இன்னொரு வகையான evolution பற்றியும் சொல்லி விடுவது தானே புத்திசாலித்தனம்.

பூமியில் உயிர் எப்படி உருவானது என்பதைப் பற்றி ஆராயும் சமயம் பூமியே எப்படி உருவானது என்பதை அறிவியல் பூர்வமாக தெரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.

பூமி எப்படி உருவானது என்பதை தெரிந்து கொள்ளும் முன் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா பொருள்களுக்கும் அடிப்படையான அணு(atom) என்பது எப்படி உருவானது எந்த சமயத்தில் உருவானது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த அணு உருவாகி இருக்கா விட்டால் எதுவுமே உருவாகி பூமி, சூரியன், பால்வெளி, காக்கா, குருவி, நான் எதுவுமே உருவாகி இருக்காது.

அணு கூட உருவாக இருக்க வேண்டுமா என்றால், அணுவுக்குள் இருக்கும் electron, proton, neutron கூட உருவானதுதான் உருமாற்றப்பட்டதுதான்.

கிரிக்கெட் மாட்சில் அடிக்கடி டிரிங்க்ஸ் பிரேக் எடுக்கும் சமயம் ஆட்டத்தை நிறுத்தி வைப்பதைப் போல நாமும் பெருவெடிப்பு(Big bang) நடந்து முடிந்த கொஞ்ச கொஞ்ச நேர இடைவெளியில் டிரிங்க்ஸ் பிரேக் எடுத்துக் கொண்டு அந்த சமயத்தில் என்ன நடந்தது என்பதைப் பார்க்க வேண்டும்.

முதல் டிரிங்க்ஸ் பிரேக் பெரு வெடிப்பு நடந்து 10^-43 செகண்டில் எடுக்க வேண்டும் இதற்கு முன்னால் என்ன நடந்திருக்கும் என்பதை யாராலும் விளக்க முடியவில்லை. ஆக இந்த சமயத்தில் பிரபஞ்சம் எப்படி இருந்தது என்றால் இன்று நாம் four fundamental forces ஆக கருதும் அனைத்தும் ஒரே force ஆக இருந்தது(
four fundamental forces பற்றி இங்கு சொல்ல முயற்சித்திருக்கிறேன்).

அடுத்த pit stop பெரு வெடிப்பு நடந்து முடிந்த 10^2 செகண்டில் எடுக்கப் போகிறோம். இந்த நேரத்தில்(பெரு வெடிப்பு நடந்து 10^-6 to 10^-2 செகண்ட்ஸீக்குள்) தான் protons மற்றும் நியூட்டிரான்ஸ்கள் உருவாகுகிறது. எப்படி உருவாகுகிறது என்பதை அறிய
இங்கே செல்லுங்கள்.

அடுத்து கொஞ்சம் நேரம் கழித்து அதாவது பெருவெடிப்பு நடந்து 3 நிமிடங்கள் கழித்து என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். முதல் முறையாக fundamental force பிரிந்து strong nuclear force தனி force ஆக உருவெடுக்கிறது. இந்த strong nuclear force தனித் தனியாக சுற்றிக் கொண்டிருக்கும் protons மற்றும் neutrons ஆகியவற்றை இணைத்து முதல் முறையாக ஒவ்வொரு அணுவிலும் காணப்படும் nucleusஐ உருவாக்குகிறது. இந்த சமயத்தில் தான் hydrogen மற்றும் helium nuclei உருவாகுகிறது.

பெரு வெடிப்பு நடந்து முடிந்த இந்த மூன்று நிமிடங்கள் தான் மிக முக்கியம் வாய்ந்ததாக சொல்லப் படுகிறது. இந்த மூன்று நிமிடங்களில் என்ன நடந்தது என்பதை மட்டும் விளக்க தனிப் புத்தகங்களே உண்டு.

சரி அந்த மூன்று நிமிடங்கள் கழித்து பல வருடங்களுக்கு strong nuclear force ஒன்று மட்டும் தான் தனிக் காட்டு ராஜா. இது அடுத்த 380,000 வருடங்களுக்குத் தொடர்கிறது. இந்த சமயத்தில் பிரபஞ்சம் என்பது atomic nuceli, electrons மற்றும் photons போன்ற நம் கண்ணுக்குப் புலப்படாத பல விஷயங்களை உள்ளடக்கியதாக இருந்தது அவ்வளவே.

சரி 380,000 ஆண்டுகளுக்கு பிறகு என்ன ஆனது. இந்த சமயத்தில் இந்தப் பிரபஞ்சம் தேவையான அளவு குளிர்ந்து விட்டதால். fundamental force என்பது மேலும் பிரிகிறது. இப்பொழுது electro magenetic force effectக்கு வருகிறது. இது என்ன செய்கிறது என்றால் தனித் தனி nucleus மற்றும் electrons ஆக இருந்ததை ஒன்று திரட்டி முதல் அணு உருவாகச் செய்கிறது.

அதாவது முதல் அணு என்பது உருவானது இந்த பிரபஞ்சம் என்பது தொடங்கி 380,000 வருடங்கள் கழித்துதான்.

இந்த அணுக்களாலும் எல்லா வகையான பொருள்களும் உருவாகவில்லை. hydrogen மற்றும் helium அணுக்கள் மட்டுமே உருவாகுகிறது.

தங்கம், இரும்பு போன்ற தாதுக்களுக்கான அணுக்கள் உருவாக இன்னும் பல பில்லியன் வருடங்கள் பிடித்தன.

சரி அடுத்த pit stop அல்லது டிரிங்க்ஸ் பிரேக் எடுக்க வேண்டிய நேரம் பெரு வெடிப்பு நடந்து 500,000 வருடங்கள் கழித்து இந்த சமயத்தில் தான் நட்சத்திரங்கள் உருவாகின. இந்த நட்சத்திரங்கள் உருவாக காரணமாக strong nuclear, weak nuclear மற்றும் electro magnetic forces என்பது இப்பொழுது நாம் தனி தனியாக அடையாளம் காண முடிந்தது.

இதே சமயத்தில் தான் கடைசியாக gravitational force என்பது கணக்கில் வந்தது.

சரி பூமி மற்றும் நம் சூரிய மண்டலம் எப்பொழுது உருவானது என்றால் பெருவெடிப்பு நடந்து 8 பில்லியன் ஆண்டுகள் கழித்து.இந்த சமயத்தில் தான் சூரியன் உருவானது. அதனுடைய gravitional pullலால் ஈர்க்கப்பட்டு அதனைச் சுற்றி கிரகங்கள் உருவானது எல்லாமே.

ஆக பூமி ஏழு நாளிலோ இல்லை 6 நாளிலோ இல்லை முட்டைக்குள் இருந்தோ உருவாக்கப்படவில்லை.

பூமி என்பது பிரபஞ்சம் தோன்றி 8 பில்லியன் ஆண்டுகள் கழித்து உருவானது.

இவை நிரூபிப்பது ஒன்றுதான் என் மதம் சொல்வது எல்லாமே சரிதான் என்று நம்பி என மதம் உயர்ந்தது என்று யோசிப்பவர் அனைவருக்கும் உங்கள் மதத்திலும் ஓட்டைகள் இருக்கின்றன ஆகவே எதன் அடிப்படையில் பிரச்சனைகளை புரிந்து கொண்டிருக்கிறாயோ அவை அத்தனையுமே ஒரு தவறான நம்பிக்கையின் அடிப்படையில் கூட உருவாகி இருக்கலாம். ஆகவே என் மதம் உயர்ந்தது உன் மதம் உயர்ந்தது என்றெல்லாம் யோசிக்க கூட செய்யாதே.

இருப்பினும் இந்த பிரபஞ்சத் தோற்றத்திலும் சில விஷயங்களை ஆச்சர்யமூட்டத் தவறுவதில்லை.

உதாரணத்திற்கு இந்த பிரபஞ்சத்தில் மேட்டர், ஆன்டி மேட்டர் என்பது ஒன்றாகவே உருவானது. அதாவது electrons என்பது உருவான அதே சமயம் தான் positrons(protons அல்ல protons என்பது electronsஐ விட எடை மற்றும் வேறு சில தன்மைகளில் மாறு பட்டு இருக்கும் ஆனால் positrons என்பது electronsன் எல்லாத் தன்மைகளையும் பெற்று அதே சமயம் +ve charge கொண்டவை.) உருவானது. இவை இரண்டும் ஒரே அளவில்தான் உருவானவை. இவை இரண்டும் ஒன்றை ஒன்று நெருங்கினால் anhillation எனப்படும் சிதைவு ஏற்பட்டிருக்கும். ஆனால் எதனாலோ எல்லா positronsம் electrons உடன் சேர்ந்து anhillate ஆகாமல் கொஞ்சம் electrons எப்படியோ தப்பிப் பிழைத்ததால் தான் இன்று இந்தப் அணுக்கள் என்பது உருவானது மேலும் இந்தப் பிரபஞ்சம் இன்று உள்ளது போல இன்று இருக்கிறது.

இன்று நம் பிரபஞ்சத்தில் இந்த anti matter என்பதை நாம் black holesல் மட்டுமே பார்க்க முடியும். வேறு எந்த இடத்திலும் இந்த anti matter நம் பிரபஞ்சத்தில் இருக்காது.

anti matter என்பது எல்லா மேட்டருக்கும் இருப்பது.

electrons - positrons(+ve electrons)
protons - anti protons(-ve protons)
hydrogen - anti hydrogen

hydrogen என்பது 1 electron 1 proton கொண்டது.

anti hydrogen - 1 positron ஒரு anti proton கொண்டது.

anti hydrogen பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்.

http://en.wikipedia.org/wiki/Antihydrogen

இப்படி எல்லா மேட்டர்களுக்குமே எதிர்வினையாக ஒன்றோடு ஒன்று இணைந்தால் annihilation ஆகக் கூடியதுதான் anti matter.

இந்தப் பிரபஞ்சத் தோற்றத்தின் பொழுது எல்லாமே anti matter உடன் தான் படைக்கப்பட்டது. ஆனால் matter என்பது அதிகமாக இருந்ததாலோ இல்லை வேறு அறியப் படாத காரணங்களாலோ எல்லா anti matterகளும் அழிந்து விட்டன.

இன்று மிக மிகக் குறைவான அளவில் உருவாகும் anti matterம் உடனே matter உடன் சேர்ந்து annihilate ஆகி விடும்.

இந்த பிரபஞ்சத்தில் anti matter நிறைந்து matter என்பது இல்லாமல் இருக்கும் ஒரே இடம் black holes. எல்லா black holesலும் இல்லை ஆனால் சில black holesகளில் anti matter அதிகமாக இருப்பதால் matter என்பது அழிந்து விடும்.

இந்தப் பிரபஞ்சத்தில் அப்பால் anti matter என்பது இருக்கலாம்.

ஏன் anti matter இல்லாமலும் matter மட்டும் நிறைந்தும் காணப்படுகிறது என்பதை Greatest Unsolved problems in physics என்று தொகுத்திருக்கிறார்கள் wikipediaவில்

http://en.wikipedia.org/wiki/Unsolved_problems_in_physics

http://en.wikipedia.org/wiki/Baryogenesis

இது ஏன் என்று விளக்கம் இன்று நம்மிடையே இல்லை. இது தான் இறை ஆற்றல் என்றால் அந்த இறை ஆற்றலுக்கு அல்லா, ராமர், இயேசு என்று பெயரிடுவது முட்டாள்தனமானது.

18 comments:

கோவி.கண்ணன் [GK] said...

குமரன்...!

நீண்ட நாள்களுக்கு பிறகு படித்தேன் .

நன்றாக இருக்கிறது பெருவெடிப்பு !

பொன்ஸ்~~Poorna said...

இருங்க இருங்க.. இந்த antimatter என்னன்னு சொல்லுங்க.. positron தான் anti matterஆ?

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

கோவி. நன்றிங்கோ.

பொன்ஸ் anti matter என்பது எல்லா மேட்டருக்கும் இருப்பது.

electrons - positrons(+ve electrons)
protons - anti protons(-ve protons)hydrogen - anti hydrogen

hydrogen என்பது 1 electron 1 proton கொண்டது.

anti hydrogen - 1 positron ஒரு anti proton கொண்டது.

anti hydrogen பற்றி தெரிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்.

http://en.wikipedia.org/wiki/Antihydrogen

இப்படி எல்லா மேட்டர்களுக்குமே எதிர்வினையாக ஒன்றோடு ஒன்று இணைந்தால் annihilation ஆகக் கூடியதுதான் anti matter.

இந்தப் பிரபஞ்சத் தோற்றத்தின் பொழுது எல்லாமே anti matter உடன் தான் படைக்கப்பட்டது. ஆனால் matter என்பது அதிகமாக இருந்ததாலோ இல்லை வேறு அறியப் படாத காரணங்களாலோ எல்லா anti matterகளும் அழிந்து விட்டன.

இன்று மிக மிகக் குறைவான அளவில் உருவாகும் anti matterம் உடனே matter உடன் சேர்ந்து annihilate ஆகி விடும்.

இந்த பிரபஞ்சத்தில் anti matter நிறைந்து matter என்பது இல்லாமல் இருக்கும் ஒரே இடம் black holes. எல்லா black holesலும் இல்லை ஆனால் சில black holesகளில் anti matter அதிகமாக இருப்பதால் matter என்பது அழிந்து விடும்.

இந்தப் பிரபஞ்சத்தில் அப்பால் anti matter என்பது இருக்கலாம்.

அதாவது anti பொன்ஸ் என்ற ஒருவர் கூட வேறொரு பிரபஞ்சத்தில் இருக்கலாம்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ஏன் anti matter இல்லாமலும் matter மட்டும் நிறைந்தும் காணப்படுகிறது என்பதை Greatest Unsolved problems in physics என்று தொகுத்திருக்கிறார்கள் wikipediaவில்

http://en.wikipedia.org/wiki/Unsolved_problems_in_physics

http://en.wikipedia.org/wiki/Baryogenesis

ரவி said...

பல விளங்காத விஷயங்கள் இருந்தாலும், படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.....

இராம்/Raam said...

குமரன்,

ஓஷோவின் "நான் ஒரு வாசல்" புத்தகத்தில் நீங்கள் யார்? என்ற கேள்விக்கு ஓஷோவின் பதிலே ஒத்துபோகிறது..

அருமையான பதிவு குமரன்... வாழ்த்துக்கள்

பொன்ஸ்~~Poorna said...

anti matter பத்தி நம்ம davinci புகழ் டான் பிரவுன் ஒரு நாவல் கூட எழுதி இருக்கார் இல்லையா?

தப்பா நினைக்காதீங்க.. இந்த விளக்கம் கட்டுரைக்கு உள்ளே வந்தால் நிறைவா இருக்கும். திடீர்னு இந்த அன்ட்டி மேட்டர்னு சொன்னால் குழப்பம் வருது.. அதான் :)

அப்புறம், பாதி ஆங்கிலம், பாதி தமிழான இந்தக் கட்டுரையில் தமிழ்ச் சொற்களையும் தேடிச் சேர்த்தால் முழுமையாக இருக்கும்..

இராம்/Raam said...

பொன்ஸ்,

நீங்கள் சொல்வது போல் அனைத்தையும் தமிழ் படுத்துவது என்பது சற்று கடினந்தான். அவற்றின் விளக்க வரும் கருத்துக்களின் தாக்கத்தை புரிந்துக் கொள்ள இயலமால் ஆகி விடக்கூடும்.

அனாலும் அவ்வாறு செய்யமுடியுமெனில் தமிழ் வார்த்தைகளின் அருகில் ஆங்கிலத்தையும் கொடுத்தால் என்னை போன்ற தமிழ் மீடியத்தில் படித்தவர்கள் டிக்சனரி பார்க்கமலே அர்த்தம் புரிந்துக் கொள்ளமுடியும். :))))

என்ன குமரன் அடுத்த முறை செய்வீர்களா...?

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ரவி ஒரு தடவை படிச்சா புரியாத மாதிரி தான் இருக்கும் ஆனா உங்களுக்கு intrest இருந்தா இதைப் பத்தி ஹாகிங்க்ஸ் புக் எதாவது படியுங்க. ஆரம்பத்தில் புரியாத மாதிரி தான் இருக்கும். கொஞ்சம் netல தேடி படிச்சீங்கன்னா ரொம்ப intrestingஆ இருக்கும்.

ராம் ஓஷோ படிச்சதே இல்லை படிக்கணும் உங்க பின்னூட்டமும் படிக்கணும் என்ற ஆர்வத்தை தூண்டுது.

ஆன்டி மேட்டர் பதிவில சேர்த்தீட்டேன். Angels and Demons நல்ல புக் கிடைச்சா படிச்சுப் பாருங்க. தமிழில் எழுதணும் என்றுதான் ஆர்வம் ஆனா electron, proton, neutron இதெல்லாத்துக்கும் தமிழில் வார்த்தைகள் தெரியாது. தெரிந்த வரை எழுதுகிறேன். தப்பா நினைக்கற மாதிரி எதுவுமே சொல்லலியே நீங்க. Infact பதிவை இன்னும் மேம்படுத்த தானே சொல்லி இருக்கீங்க அதுக்கு ஒரு நன்றி.

Thekkikattan|தெகா said...

//பெருவெடிப்பு நடந்து 8 மில்லியன் ஆண்டுகள் கழித்து.இந்த சமயத்தில் தான் சூரியன் உருவானது.

பூமி என்பது பிரபஞ்சம் தோன்றி 8 பில்லியன் ஆண்டுகள் கழித்து உருவானது.//

குமரன் இதில் முதல் பத்தியில் உள்ள 8 மில்லியன் என்பதனை மீண்டும் பில்லியன் என்று மாற்றி விடுங்கள்.

இன்னும் படித்துக் கொண்டுள்ளேன். மீண்டும் சொல்கிறேன் எப்படி வந்திருக்கிறது என்று.

தாங்களின் இத் தொடரில் வரும் அத்துனை பதிவுகளும் ரொம்ப பயனுள்ளாதாக அமையும் யாவருக்கும். அருமை.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

Thekkikattan மாற்றி விட்டேன். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி படித்து விட்டு சொல்லுங்கள் எதிர் பார்க்கிறேன்.

bala said...

குமரன் எண்ணம் அய்யா,

அருமையா இருக்குதைய்யா..கார்ல் செகன் அவர்களே வந்து பாடம் எடுக்கிறா மாதிரி இருக்குதைய்யா..

மேலும் மேலும் நடத்துங்க..
உன்னிப்பாக கேட்டுக்கிறேன்.

நன்றி.

பாலா

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

நன்றாக இருக்கிறது என்று சொன்னதற்கு நன்றி bala. எந்த ஒரு தத்துவம், கருத்தையும் மூன்று வகையாக பார்க்கலாம். நேர்மறை(supportive), எதிர்மறை(cynic), சந்தேகம்(skeptic சரியான தமிழ் வார்த்தை கிடைக்கவில்லை). இதில் நான் மதம் சம்பந்தமான விஷயத்தில் எதிர்மறை(cynic). கடவுள், அறிவியல் சந்தேகம்(skeptic).

கார்ல் சேகன் பல்கலைக் கழகம் நான் பாமரன்.

ரியோ said...

பிரபஞ்சம் தோற்றம் பற்றியும், அணுக்களைப்பற்றியும் படிப்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது.

ஒரு சிறிய விளக்கம்,
அண்டமும் பூமிம் 6 நாட்களில் படைக்கப்பட்டதாக பைபிளில் குறிப்பிடப்படவில்லை.
"ஆதியிலே பூமி ஒழுங்கின்மையும் வெறுமையுமாக இருந்தது" என்றுதான் முதலில் வரும். பூமியில் உள்ள மற்ற உயிரினங்கள்தான் 6 நாட்களில் படைக்கப்பட்டதாக வரும். அதுவும் கூட 6 நாட்கள் என்று குறிப்பிடப்படுவது சிம்பாலிக்காக 6 மில்லியன் வருடங்களாக இருக்குமோ என்று கூட எண்ணியிருக்கிறேன்.

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ரியோ வருகைக்கு நன்றி பைபிளில் Genesis என்பது பற்றி இப்படி குறிப்பிடப் பட்டுள்ளதை கீழே கொடுத்துள்ளேன். இது பூமியில் உள்ள உயிர்கள் தோற்றத்தை மட்டும் அல்ல பிரபஞ்சத் தோற்றத்தையே குறிப்பதாக எனக்குத் தோன்றுகிறது. தவறாக இருந்தால் திருத்திக் கொள்வேன்.

நீங்கள் குறிப்பிடுவது போல Theory of Relativityயை உபயோகித்து கடவுளுக்கு ஒரு நிமிடம் என்பது பூமியில் உள்ளவர்களுக்கு பலவாயிரம் வருடம் போன்றது என்றெல்லாம் சொல்லுவார்கள். என்னால் இதனை ஏற்க முடிவதில்லை.

மீண்டும் வருகைக்கு நன்றி.

1.1 In the beginning God created the heaven and the earth.
1:2 And the earth was without form, and void; and darkness was upon the face of the deep. And the Spirit of God moved upon the face of the waters.
1:3 And God said, Let there be light: and there was light.

குமரன் (Kumaran) said...

//இவை நிரூபிப்பது ஒன்றுதான்//

செந்தில் குமரன். பெருவெடிப்புக் கொள்கையையும் அதன் அடிப்படையில் கணித மாடல்களின் மூலம் விளக்கியிருக்கும் பிரபஞ்ச வளர்ச்சியையும் மிக மிக நன்றாக விளக்கியிருக்கிறீர்கள். ஆனால் இன்னும் பெருவெடிப்பு என்பது பெரும்பான்மை அறிவியலாளர்களால் உண்மை என்று நம்பப்படும் ஒரு 'தியரி' தான் என்பதை மறந்துவிட வேண்டாம். பெருவெடிப்பு அவர்களே ஐயமற நிரூபிக்கப்பட்டு விட்டது என்று இன்னும் சொல்லவில்லை. அதற்குள் மதங்கள் சொல்வது எல்லாம் பொய் என்று சொல்லிவிட முடியாது. மதங்கள் சொல்வதில் ஓட்டைகள் இருக்கலாம் என்று சொல்லும் அதே நேரத்தில் பெருவெடிப்புக் கொள்கையிலும் ஓட்டைகள் இருக்கின்றன என்பதை மறந்துவிட்டு அதனை ஐயமற நிரூபிக்கப் பட்ட உண்மை என்று சொல்வதும் நம்புவதும் கூட ஒரு வித மதம் தான். அறிவியல் இப்படிப்பட்ட நம்பிக்கையாளர்களால் ஒரு மதமாக மாறிக் கொண்டிருக்கிறது.

என்னிடம் விட்டால் இதே பெருவெடிப்பை இந்து மதக்கொள்கைகளின் மூலம் எளிதாக இதே தானப்பா இந்துமதமும் சொல்லியிருக்கிறது என்று விளக்கம் சொல்ல முடியும். ஏற்கனவே சொன்ன படி அது நேர்மையின் பால் சேராது என்பதால் அங்கே செல்லவில்லை. மற்ற படி அறிவியல் என்ன சொல்கிறது என்று கண்கள், காதுகள், மனம் எல்லாவற்றையும் திறந்து வைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.

கருப்பு ஓட்டைகளைப் பற்றியும் இங்கே பேசியிருக்கிறீர்கள். கறுப்பு ஓட்டைகளும் இன்றைய நிலையில் ஒரு தியரி என்ற அளவில் தான் இருக்கிறது. கண்டுபிடித்தவற்றில் உள்ள குறைபாடுகளை விளக்க கருப்பு ஓட்டைகள் மிக எளிதான ஒரு உதவியாக இருக்கின்றன. சில நேரம் மதங்களின் சர்க்குலர் லாஜிக் அளவுக்கு கூட கருப்பு ஓட்டைகள் பற்றிய விளக்கங்களும் அதனை உதவிக்கு அழைத்துக் கொள்ளும் மற்றவற்றைப் பற்றிய விளக்கங்களும் அமைந்துவிடுகின்றன.

//இது ஏன் என்று விளக்கம் இன்று நம்மிடையே இல்லை. இது தான் இறை ஆற்றல் என்றால் அந்த இறை ஆற்றலுக்கு அல்லா, ராமர், இயேசு என்று பெயரிடுவது முட்டாள்தனமானது.
//

Bluntஆ சொல்லியிருக்கேன்னு ஏற்கனவே சொல்லியிருக்கீங்க. அவரவர் அறிதலுக்கும் புரிதலுக்கும் ஏற்ப எல்லாவற்றையும் புரிந்து கொள்கிறார்கள். இருள் என்பது ஒளியில் குறைபாடு என்றாற்போல் முட்டாள் தனம் என்பதும் அறிவின் ஒரு தரம்; அவ்வளவே. இந்தப் பக்கம் இருப்பவர்களுக்கும் அந்தப் பக்கம் இருப்பவர்கள் முட்டாள்கள்; அந்தப்பக்கம் இருப்பவர்களுக்கு இந்தப் பக்கம் இருப்பவர்கள் முட்டாள்கள்.

குமரன் (Kumaran) said...

அப்பாடா. உங்களின் ஏழு பதிவுகளும் படித்துவிட்டேன். அடுத்த பதிவு எப்போது வரும்?

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

குமரன் மீண்டும் வருகைக்கு நன்றி. பெருவெடிப்பு என்பது இன்னும் நிரூபிக்கப் படவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். பரிணாம வளர்ச்சி குறித்த ஒரு குறும்படம் ஒன்றைக் பார்த்தேன், கேட்டேன். அதில் பரிமாண வளர்ச்சி பற்றி விளக்கி இருப்பவர் சொல்லுவார். அறிவியல் என்ன சொல்கிறது என்றால் உன்னைச் சுற்றி இருப்பதைப் பார் கவனி பின் உனக்கு சொல்லப்படும் கருத்துக்களை அதனுடன் ஒப்பிட்டு பார்த்து உணர்ந்து கொள் என்றார். அப்படி பார்க்கும் பொழுது எனக்கு இன்று பெருவெடிப்பின் விளக்கங்கள் மதங்கள் சொல்லும் விளக்கங்களை விட உண்மையானதாக படுகிறது.

ஆனால் முன்பு சொன்னது போலவே கொஞ்சம் Blunt ஆகவே மத நம்பிக்கைகளைப் பற்றி பேசி வருகிறேன் அது சரி அல்ல என்று தோன்றுகிறது. இதைப் பற்றி விரிவாக ஒரு பதிவிடலாம் என்றுதான் இருக்கிறேன்.

கருப்பு ஓட்டைகள் என்பது தியரி மட்டும் அல்ல நம் பால்வெளியின் நடுவில் ஒரு கருப்பு ஓட்டை இருப்பதை கண்டு பிடித்துள்ளார்கள் நாசாவின் இந்த வலைப் பூவைப் பாருங்கள் இதைப் பற்றி சொல்லி இருக்கிறார்கள்.

http://antwrp.gsfc.nasa.gov/apod/ap021018.html